Popular Posts

Monday, 22 September 2025

ஒற்றைத் துருவத்தின் அரசியல் போக்கு!!!

 


 

 

 

                ஒற்றைத் துருவத்தின் அரசியல் போக்கு!!!

 

(முற்றுப் பெறாத கட்டுரைத் தொகுப்பு)

 

இன்றைய உலகப் போக்கை லெனின் முன்வைத்த ஆய்வுரை இன்றுவரையில் வழிகாட்டியாக இருக்கின்றது. லெனின் அகிலத்தில் முன்வைத்த ஆய்வுகோளை இன்று வரையில் கற்றார்களாக என்பது ஐயமே. இத்தொகுப்புடன் இணைத்து ஏகாதிபத்தியம் பற்றிய-  https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2022/08/blog-post_22.html கட்டுரையை வாசிக்கவும்.)

 

ஒரு நாட்டின் சமுதாயப் பிரச்சனையை ஆராயும் போது அதைத் திட்டவட்டமான வரலாற்று வரம்புக்குள் வைத்தே பரிசீலிக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டின் வரலாற்றுப் சகாப்தத்தில் தனி அம்சங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் சூழலும் இன்னொரு நாட்டின் சூழலுக்கு மாறுபட்டு இருக்கும். அந்த வரலாற்றுக் கட்டத்துடன், சர்வதேச அரசியல் போக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய சமூக நிலவரம் (Social condition) முதலாளித்துவம் முழுமையடையாக நிலையில் இவைதான். இதற்கு அப்பால் வேறு இருப்பது என்பது மார்க்சியமாகிவிடாது.

1.      அநாகரிக, மத்திய காலக் குணாம்சங்கள் சமூக விடுதலையுடன்

2.      முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடையவில்லை

3.      தேசிய இனங்களின் ஒடுக்குமுறை,

4.      ஏகாதிபத்தியச் சுரண்டல்

என்முன்னுள் உள்ள வரலாற்று வடிவமாகும். சமூக ஒழுங்கமைவின் உற்பத்திச் சக்தியினதும், உற்பத்தி உறவினதும் வளர்ச்சி என்பது மாறுபட்டு உள்ளது. அதாவது சமூகம் தொழில் நுட்ப வளர்ச்சி, சிந்தனைப் போக்கு, பரிவர்த்தனை, உற்பத்தி, விநியோகம் என்பது ஒரே தன்மையில் வளர்ந்துவிடவில்லை.  ஏற்றத் தாழ்வுடன் இருக்கின்ற சமூகத்தை வியாபக ரீதியாக ஆய்விற்கு உட்படுத்துவதன் ஊடாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

"என்னைப் பொறுத்த வரை நவீன சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ அவற்றின் இடையே போராட்டம் நடைபெறுவதையோ கண்டுபிடித்த பெருமை எதுவும் எனக்கு உரியது அல்ல. எனக்கு நெடுங்காலத்திற்கு முன்பே, முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள்  இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சியை வருணித்திருக்கிறார்கள், மற்றும் முதலாளித்துவப் பொருளியலாளர்கள் வர்க்கங்களின் பொருளாதார அமைப்பியலை விவரித்துரைத்திருந்தார்கள். நான் புதிதாகச் செய்தது என்னவென்றால் (1) வர்க்கங்கள் இருத்தல் என்பது பொருளுற்பத்தியின் வளர்ச்சியிலான குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் மட்டுமே கட்டுண்டவை என்பதையும், 2) வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளி வர்க்கச்சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதையும், 3) இந்தச் சர்வாதிகாரம் தான்  மட்டுமே சகலவித வர்க்கங்களின் ஒழிப்பு மற்றும் வர்க்கங்களற்ற  வர்க்கமில்லாத சமுதாயத்திற்குமான மாறுதல் கட்டமாக அமைகிறது என்பதையும் நிரூபித்துக் காட்டியதேயாகும்" (Marx & Engels v4-232)

மேல் மார்க்ஸ் சமூகக் கட்டம் பற்றியதே. பாட்டாளி வர்க்க சமூகத்தை நோக்கிய அரசியல் போக்கில் வெவ்வேறு முரண்பாடுகளை தீர்த்தே செல்லப்பட முடியும். இந்த அடிப்படையில் குறிப்பிட்ட நாட்டின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடாக உள்ளது. தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை மறுப்பை கொண்டதாக அடையாள அரசியல் உள்ளது.  அதாவது இடவொதுக்கீடு, முதலாளித்துவ சீர்திருத்தத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. தேசிய ஜனநாயகப் புரட்சிடைய நடத்திவிட முடியும் என்ற புரிதல் இல்லை. கொலனித்துவத்திடம் இருந்து ஆள்பவர்கள் கைமாறப்பட்டார்கள். நாட்டரசின் மீதான போலித் தேசியக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் மீது தான் கட்சிகள் தொடர்ந்தும் பயணிக்கின்றன. மேட்டுக்குடிகளின் பிரதிநிதித்துவ அரசியல் என்பதன் வளர்ச்சியை ஆராயாது கடந்து சென்றுவிட முடியாது. மேட்டுக்குடிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அரசியல் என்பது மேலோங்கியே இருக்கின்றது. இது தேசிய இனங்களின் முதலாளித்துவக் கட்டத்திற்கான வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பதில் முக்கிய காரணியாக இருக்கின்றது. முதலாளித்துவ அரசியல்வாதிகள் இலங்கை தேசியம் ஒன்றை கட்டமைக்க முயன்றார்கள். ஆனால் அது வெற்றி பெறமுடியவில்லை. அதேவேளை கொலனித்துவ காலத்தில் இருந்த அரசியல்வாதிகளுக்கு தேச அரசு பற்றிய பிரங்ஞை இருக்கவில்லை. அன்றைய அரசியல்தலைவர்கள் சிறந்த சட்டமேதைகளாக இருந்த போதிலும் முன்னேறிய அரசியல் சிந்தனை இருக்கவில்லை. சீனப் புரட்சிக்கான சிறப்புத் தன்மை பற்றி தோழர் ஸ்ராலின்

``சீனப் புரட்சியானது ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக இருக்கும் அதேவேளையில், சீனாவில் அந்திய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு தேச விடுதலைப் புரட்சியாகவும் இருக்கின்றது என்பதாகும்” ‘‘சீனாவில் உள்ள பெரு முதலாளித்துவ வர்க்கம் மிகமிக பலவீனமாக இருக்கிறது, 1905ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ரசியாவின் முதலாளித்துவ வர்க்கத்தை விட ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கிறது. அது புரிந்து கொள்ளக் கூடியது தான். தொழிற்துறையின் முக்கிய இணைப்புகள் அயல்நாட்டு ஏகாதிபத்தியங்களின் கரங்களில் குவிக்கபட்டிருப்பதால், சீனாவில் உள்ள தேசியப் பெருமுதலாளித்துவ வர்க்கத்தினர் பலவீனமாகவும் பின்தங்கியும் தான் இருக்க முடியும். இந்த அம்சத்தில், சீனப் புரட்சியின் தனித்தன்மை வாய்ந்த பொருண்மைகளில் ஒன்றாக சீன தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பலவீனம் பற்றிய தனது குறிப்புரையில் மிஃப் குறிப்பிடுவது மிகவும் சரியானதாகும்.  மாறாக சீனப் புரட்சியின் முன்முயற்சியாளர் மற்றும் வழிகாட்டிப் பாத்திரம், சீன விவசாய வர்க்கத்துக்கு தலைமை அளிக்கும் பாத்திரம் தவிர்க்க முடியாத வகையில் சீனப் பாட்டாளி வர்க்கத்திடமும் அதன் கட்சியிடமும் சேர்க்கின்றது என்பது இதிலிருந்து தெரிகிறது.” ``சீனாவுக்கு அக்கம் பக்கமாக சோவியத் ஒன்றியம் புரட்சிகர அனுபவமும் உதவியும் சீனாவில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான, மத்திய கால நிலப்பிரபுத்துவ எச்சங்களுக்கு எதிரான சீனப் பாட்டாளி வர்க்கத்தின்  போராட்டத்தை  எளிதாக்காமல் இருக்க முடியாது என்பதையும் விட்டுவிட முடியாது.” (392-3 ஸ் 8)

சமூகத்தில் உள்ள வர்க்கப் பிரிவுகள், நலன்கள் என்ன என்பதை தோழர்  லெனின் ஆராய்கின்றார்.

‘‘விவசாயி மக்கள் முதலாளி வர்க்க ஜனநாயகத்தின் அர்த்தத்தில் புரட்சிகரமானவர்களாக இருக்கிற அதே நேரத்தில் ”சமுதாயமயமாக்கல்” எனும் இலட்சியத்தைத் தம்முள் ஏந்திச் செல்கிறவர்களாக இல்லை. விவசாயி மக்கள் முதலாளி வர்க்கத்துக்கும் கிராப்புறத்துத் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள ஒரு புதிய வர்க்கப் பேராட்டத்துக்குரிய விதைகளைத் தான் ஏந்திச் செல்கிறார்கள். ” (87 தொ1.லெ)

வர்க்கங்களின் வளர்ச்சிப்  போக்கும் பிரிவானது சமூகமயமாக்கம்  நடைபெறுகின்றது.  புதிய சமூக உறவுகளைக் கற்றுக் கொள்ளவும், வர்க்க நலனையும், முரண்பாடுகளை கணிப்பதற்கும், பெருந்திரளை அமைப்புருவாக்கம் செய்வதன் ஊடாக வேலைத் திட்டம், போர்யுக்தி, நடைமுறை ரீதியான செயற்பாடுகளை விரிவுபடுத்தவும்  முடியும்.  மக்கள் திரட்சி ஊடாக புரட்சியை நடத்த முடியாது என்ற கற்பிதங்களை தகர்த்திட முடியும்.   ஆனால்  எந்த அமைப்புக் கட்டமைப்பு, செயல்வடிவம் இல்லாது,  நடைமுறையும் அற்று அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். இது அண்ணளவாக 40 வருட வரலாறு இவ்வாறு தான் இருக்கின்றது.

முதலாளித்துவ தேசியவாதம் தவறு என்ற அரசியல் நிலைப்பாடு எடுக்கப்படுகின்றது. சியோனிசம், நாசீசம், பண்பாட்டுத் தேசியவாதம் என்பதே எதிர்ப்பது சரியானது. மாறாக நிலப்பிரபுத்துவத்தை சிதைத்து முன்னேறுவதே முதலாளித்துவ ஜனநாயகக் கட்டம். ஆனால் தோழர் ஸ்ராலின் வழிகாட்டலைக் கொண்டு புதிய ஜனநாயகக் கோட்பாட்டை வளப்படுத்தினார் தோழர் மாவோ. சீனப் புரட்சியைப் பற்றிய ஆய்வுகோளை தோழர் ஸ்ராலினும், அகிலமும் வகுத்துக் கொடுத்தர்.

நிலப்பிரபுத்துவம் சிதைக்கப்பட வேண்டுமென்றால் அந்தக் கட்டத்தில் காரியம் ஆற்ற வேண்டிய நிலையில் தான் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி பற்றிய வழிகாட்டல் முன்வைக்கப்பட்டது. தோழர் ஸ்ராலின் வழிகாட்டலின் வழியில் புரட்சி நடைபெற்றுவிட்டது. இன்று ரொட்ஸ்கியர்களுக்கு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி, தேசிய ஜனநாயகப் புரட்சிக் கட்டங்கள் பற்றிய புரிதல் இல்லாத இயங்கியல் மறுப்பாளர்கள். அகநிலைவாதம், அனுபவாதம் மார்க்சிய விரோதம் கொண்டதே. சீனப் புரட்சியின் வெற்றியைத் தீர்மானித்து பாட்டாளி வர்க்க சர்வதேசிய நிலைப்பாடு. அதாவது தேசிய முதலாளித்துவத்தின் தலமையின் கீழ் இல்லாது தனி அணியாக தன்னை வளர்த்துக் கொண்டு முன்னேறியது.

இவ்வாறு இந்தியாவில் ஏற்பட வில்லை. இந்தப் படிப்பினை  வர்க்கப் போராட்டத்தின் களத்தை பொருளாதார அடித்தளத்தில் மட்டுமே தேடி சமூகத்தின் அரசியல் பண்பாட்டுத் தளங்களில் தீவிரமாக வினையாற்றிய நட்பு ஆற்றல்களை எதிர் நிலையில் நிறுத்தியது. கீழை நாடுகளுக்கான வழிகாட்டலை தோழர் மாவோவும், கட்சியும் உள்வாங்கிக் கொண்ட நிலைக்கு மாற்றாக இந்தியாவில் நடைபெற்றது. தோழர் ஸ்ராலின் தன் கருத்தை தவறாக புரிந்ததை எதிர்த்து தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.

 

 

 

``ஆசிய, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலை இயக்கம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை ஏற்கனவே சாதித்திருக்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஏகாதிபத்தியம், காலனியம் மற்றும் அவர்களின் அடிவருடிகளை எதிர்த்துப் போராடும் கடமையை ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் முழுமையாக நிறைவேற்றிவிட்டார்கள் என்று யாரேனும் கூறமுடியுமா?

இல்லை என்பதே எமது பதில் ஆகும். இந்தப் போராட்டக் கடமை முழுமையாக நிறைவேற இன்னும் நீண்டகாலம் பிடிக்கும்.

ஆனால் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தற்கால உலகில் இருந்து காலனியம் மறைந்துவிட்டது அல்லது மறைந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தை அடிக்கடி பரப்பி வருகின்றனர். போர்ச்சுகல், அங்கோலா, மொசம்பிக் ஆகிய ஆப்பிரிக்கப் பகுதிகளில் மட்டுமே காலனியத்தின் மிச்சச் சொச்சங்கள் இருப்பதாகவும காலனிய ஆட்சி ஒழிப்பு அதன் இறுதிக் கட்டத்தை ஏற்கனவே அடைந்துவிட்டிருப்பதாகவும் அவர்கள் வலியறுத்தி வருகின்றனர்.

உண்மை என்ன?

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் நிலைமையைப் பாருங்கள். அங்கே பெருவாரியான நாடுகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துள்ளன. ஆனால், அவற்றில் பலநாடுகள், ஏகாதிபத்திய மற்றும் காலனியக் கட்டுப்பாட்டையோ, அடிமைத்தனத்தையோ முழுமையாகத் தூக்கி எறியவில்லை. அந்நாடுகள், ஏகாதிபத்தியக் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்பின் இலக்காகவும், பழைய காலனியவாதிகளுக்கும் புதிய காலனியவாதிகளுக்கும் நடக்கும் போட்டியின் நிலைக்களளாகவும் நீடிக்கின்றன. சில நாடுகளில் பழைய காலனியவாதிகளே புதிய காலனியவாதிகளாக மாறி, தங்களது பயிற்சி பெற்ற ஏஜெண்டுகள் மூலம் தங்கள் காலனிய ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளனர். வேறு சில நாடுகளில் ஓநாய் முன்வாசல் வழியாக வெள்யேற. வஞ்சகப்புலி கொல்லைப்புற வழியாக நுழைந்திருக்கிறது. ஆம், பழைய காவனியத்துக்குப் பதிலாகப் புதிய அதிக வலுவுள்ள, அதிக அபாயகரமான அமெரிக்கக் காலனியம் நுழைந்திருக்கிறது. ஆ. ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் புதிய காலனியத்தின் கோரப்பிடியில் சிக்கித் துன்புறுகின்றனர். (மாபெரும் விவாதம் 463,464)

 

இங்கு தொகுக்கப்படும் கட்டுரைகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். இவைகள்  நூல்வடிவில் வரும் போது திருத்தங்களுடன் வெளிவரும்.

 

ஈராக்கின் மீது தாக்குதல்

 

ஈராக்கின் மீது அமெரிக்காவும், பிரித்தானியாவும் சேர்ந்து Operation Desert fox  என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது. நடத்தி முடிந்த பிற்பாடு தாம் நடத்திய தாக்குதலுக்கு காரணம் கற்பிக்கவும், தமது  செயலை நியாயப்படுத்தவும் பங்காளிகளையும் தற்பொழுது சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஆயுத, பண வல்லமை படைத்த மேற்கு நாடுகள் மேற்கொள்கின்றன.  தம்மைத் தாமே பாதுகார்த்துக் கொள்ள முடியாத ஒரு மக்கள் கூட்த்தின் மீது தாக்குதலை நடத்ததுவது பயங்கரவாதமே தான் இந்தப் பயங்கரவாத செயல்களை வறுமை நாட்டைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கத்தான் செய்கின்றனர். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள் இத்தாக்குதலை ஆதரிக்கின்றனர். இவைகள் எல்லாம் ஒரு வர்க்க நலனின் பால் அக்கறை கொண்டு நிற்கின்றது. இந்த எதிர்ப்பில் மக்கள் ஒரு புறமாகவும் உள்நாட்டு ஆட்சியாளர் ஒருபுறமாகவும் மேற்குநாடுகள் ஒரு புறமென மூன்று நிலையான பிரிவுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உலகில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.அந்தப் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் வர்க்க நலனில் இருந்து ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் மாறுபடுகின்றது. இந்தப் பிரச்சினைகளை தனிநபர், கிராமம், தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டங்களில் இருந்து மாறுபடுகின்றது. இந்தப் பிரச்சினைனகளை பார்க்கின்ற போது தனிநபர்களின் நலன் என்பது முதன்மை பெற்று அதுவே அழிவிற்கு காரணமாகின்றது. ஈராக்கின் மீதான தாக்குதல் என்பது தனியே தனிநபர் நலன் அடங்கவில்லை. ஆனால் தனிநபரின் நலனுக்குச் சாதகமாக பாவிக்கப் பட்டதை அடையாளம் கொண்டு கொள்ளமுடியும்.

1991 ம் ஆண்டு சர்வதேச சமூகங்கள் அனைத்தும் சேர்ந்து கொண்டு பயங்கரவாத்தை அனுமதிப்பதில்லை என்ற போர்வையில் ஐ. நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் அனைத்தும் சேர்ந்து தாக்குதல் தொடுத்தனர். இந்தத் தாக்குதலை கியூபா மட்டுமே எதிர்த்ததுடன், ஈராக் அமெரிக்காவின் சோதனைக் களம் என கூறினார்கள். 21 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற தாக்குதல்கள் உள்கட்டுமானத்தில் பாரிய சேதத்தை உண்டு பண்ணின,

 

1991 ஆண்டு                                        1998 ஆண்டு

1991 இல் 270 ரொக்கட், 1 billion usd       சுமார் 435 ரொக்கட்கள்

200 இலக்குகள்                             43 இலக்குகள்

2700   விமானங்கள்  USA  201 -           UK12 விமானங்கள்

700000 துருப்புக்கள் 30 நாடுகள்    

48000 விமானத் தாக்குதல்  

மொத்தமாக 43 நாட்கள்    

5 நாட்கள் 88500 தொன் எடை (88 500 தொன் எடை என்பது 6 கிழமைகளில் யப்பானில் வீசப்பட்டத்தற்கு சமானமாகும்.)

ஈராக்கின் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு காரணமாக அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தல் எனவும், ஈராக்கிடம் இருக்கின்ற இரசாயன, பௌதீக ஆயுதங்கள் மனிதகுலத்திற் ஆபத்தானது  பிரச்சாரங்களை மேற்கொண்டனர், ஐ. நாவின் தீர்மானத்திற்கு பணிந்து நடக்கவில்லை, பரீசோதகர்களு ஒத்துழைக்க வில்லை என குற்றம் சுமத்துகின்றனர். இந்தத் தானக்குதலில் மூலம் ஈராக்கின் இராணுவ நிலைகளையும், ஆயுத உற்பத்தியையும் தாம் நீண்ட பின்னடைவிற்கு உள்ளாக்கியதாகவும் பென்ரகன் தெரிவிக்கின்றது.

ஈராக் வெளிநாட்டமைச்சரான Mohammed Said al-Sahof  பத்திகையாளர் மாநாட்டில் பரிசோதகர்கள் அரசியல் தலைமையகத்தையும், முன்னைய பாதுகாப்பு அலுவலகத்தையும், வெள்ளிக் கிழமை அன்று குறிப்பிட்ட இடத்தை பார்வையிட வேண்டும் என கோரியபோது வெள்ளிக்கிழமை ஆகையால் தமது அதிகாரிகள் இல்லாது தனியே செல்ல முடியாது  ஈராக் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பார்வையிடச் சென்ற இடத்தில்  45 நிமிடம் பிந்திவிட்டதாக ஐ. நா அதிகாரிகள் முறைப்பாடு செய்தனர். ஆனால் 20 நிமிடமே தாமதமாகியதாக கூறுகின்றனர். இத்துடன் மாத்திரம் நிற்காது. பக்தாத் சர்வகலாசாலை முதுநிலை மாணவர்களை பேட்டிகான வேண்டும் என Diana Simon கோரிக்கை விடுத்தார் ஆனால் இதனை ஈராக் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மேலும் 427 சந்தர்ப்பங்களில் ஒத்துழைத்துள்ளனர் ஆனால் ஐ. நா அதிகாரிகள் ஈராக் ஒத்துழைப்புக் கொடுக் வில்லை என கூறினர். 14.12 98 இல் ஐ.நா விற்கு ஈராக் அனுப்பிய கடிதத்தில் தாம் ஒத்துழைப்புக் கொடுக்க சம்மதிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்தக் கடிதத்தைப் பற்றி சர்வதேசம் கேள்வி எழுப்பவில்லை என கூறினார். தாக்குதலின் போது பல தொழிற்சாலைகள், கட்சி தலைமையகம், சதாமின் மகள் வீடு (அந்தச் சமயம் இவர் வீட்டில் இல்லை) சேமடைந்ததாக கூறினார்.

இந்தத் தாக்குதலின் மூலமாக உள்கட்டுமானம் தாக்குதலுக்கு உள்ளாகியது. தாக்குதலின் பின்னர் ஐ. நாவின் கிளைப்பிரிவுகள் விட்ட அறிக்கையில் Tikrit என்ற நகரில் தானியக் களஞ்சியம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் 2600 தொன் அரிசி சிதறடிக்கப்பட்டதாவும், தாக்குதலினால் குடிதண்ணீர் நிலைகள் சிதைக்கப்பட்டது  300 000 மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி பாதிக்கப்பட்டது. 1991 இடம் பெற்ற தாக்குதலின் தாக்கம் இன்னும் என்ன இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாலும் மறைந்து விடாத நிலையில் இன்று இடம் பெற்ற தாக்குதலினால் ஏகாதிபத்தியங்கள் ஈராக்கை சுடுகாடாக்கியுள்ளனர். இன்றுபல கர்ப்பினிபெண்களும், சிறுவர்களும் போசாக்கின்மையால் மடிந்து போகின்றனர். இந்த தாக்குதலினால் பற்பல சமூக மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும் மூடப்பட்ட நிலையில் இருக்கின்ற போது  மருத்துவ தட்டுப்பாடு போன்றவை ஏற்படுவதால் பாதிக்கப்படுவது வறிய மக்களே.   

 

இந்தத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் பின்னராக ஈராக்கும், ஏகாதிபத்தியங்களும் மாறி மாறி குற்றம் சாட்டினர். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிடின் தம்பி தண்டப் பிரசங்கம் என்பது போல் வலுத்தவர்களின் குரல் தான் மேல்லாண்மை கொண்டது. New York Times, Wall Street Journal, Boston Globle, Washinton post போன்ற பிரபல பத்திரிகைகள் அமெரிக்கா ஐ. நா அதிகாரிகளின் தகவல்களை பாவித்ததாக அம்பலப்படுத்துகின்றன.

ஐ. நாவின் பெயரை துற்பிரயோகம் செய்யதாக அமெரிக்கா மீது ஈராக் குற்றம் சாட்டியது மட்டும் அல்லாமல் ஐ. நா அதிகாரிகள் இறுதிக் காலகட்டதில்  மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்றதாகவும், ஐ. நா அதிகாரிகள் 5 மேற்கு நாடுகளுக்கு உளவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இவற்றை தலமை பரிசோதகர் Richard Buttler மறுத்துள்ளார். ஆனால் தற்பொழுது அமெரிக்க உபகரங்களை தாம் பாவித்தகதாகவும் ஏற்றுக் கொண்டுள்ள இவர் Rolf Ekeus என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த செய்திகளை சேகரிக்கும் பொருட்டு அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததாக மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார். இப்படி குற்றம் சுமத்துவதும் ஏகாதிபத்தியங்களுடன்

ஓத்துழைப்பது என்பது ஒன்றும் புதுவிடயம் அல்ல. 1950களில் ஐ. நாவின் செயலாளராக இருந்த திரிக்வ (Trykve) என்பவர் Mc Carter என்பவருடன் சேர்ந்து ஒத்துழைத்து பற்பல அதிகாரிகளை காட்டி கொடுத்தார். Mc Carterரின் களைபிடுங்களுக்கு அவர்கள் ஆளாகினர். இவைகள் எல்லாம் காலம் கடந்துதான் அம்பலத்திற்கு வந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் முன்னால் தலைமை பரிசோதகரான Scott Retter என்பவர் தாக்குதல் நடைபெறுவதற்கு முதலாக  ஈராக்கினை ஆத்திரப்படுத்தும் முயற்சியிலும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரான கிழமைகளில் நடைபெற்றதாகவும் இதன் மூலம் அதிகார பலப் பிரயோகத்தை பயன்படுத்துவதை நியாயம் கற்பிக்க முடியும் என கருதி செயற்பட்டதாக முன்னால் பரிசோதகர் தெரிவித்தார்.

ஈராக் பரிசோதகர்கள் திரும்பவும் தம் நாட்டுக்குள் வரஅனுமதிக்க மாட்டாது எனவும், புனர்வாழ்வு ஊழியர்களை மாற்றும் படியும் கோரிக்கை விட்டனர். உதவி நிறுவனங்கள் சட்டத்திற்கு முரணாக வட ஈராக்கில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். British mine adversory group

 

அமெரிக்க கனவு

இந்தத் தாக்குதல் என்பது அமெரிக்க ஜனாதிபதியின் மீதான குற்றச் சாட்டு மேற்கொள்ளப்பட் வேவையில் இது இடம் பெற்றது. அமெரிக்காவில் பதவியை அதிகார வர்க்க சமூகத்தை பல அரசியல் நாடகங்களை நடத்த சுரண்டல் அமைப்பு இடம் கொடுக்கின்றது. அமெரிக்க சமூக அமைப்பானது அரசியல் அதிகார சததிராட்டத்தில் வெவ்வேறு பதவிக்காக போட்டி போடுபவர்கள் தாரளமாகவே தமது நாடகத்தை நடத்திக் கொள்ள முடியும். இந்த நடவடிக்கைள் எல்லாம் அமெரிக்க வாழ்நிலைக்கான மன்மாதிரியான வடிவத்துடன் அமைந்து விடுகின்றது. இவை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தனிமனித முயற்சியின் ஊடாக எதனையும் செய்துவிட முடியும் என்ற கருத்துருவம் அனைத்து பிரிவினரிடையேயும் புரையோடிப் போயுள்ளது. சமூகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு தனிமனிதனை முன்னுக்குத் தள்ளுகின்றது. சமூகத்தை தனிமனித நிலையில் இருந்து உலகத்தை நோக்கிப் பார்ப்பதும் அதிலிருந்து மேற்கொள்ளும் சமூக உறவைக் கொண்டதாகும். தனிமனிதரிடையே சுதந்திர போட்டியும், மனிதர்களை மிதித்து அவர்களின் மீது தமது முன்னேற்றத்தை மேற்கொள்வதாகும் இங்கு எமாற்று பித்தலாட்டம் சுரண்டல் எல்லாம் தனிமனிதனின் திறமையின் பல காட்டப்படுகின்றது. தனிமனிதனின் திறமைமை வேறு சுரண்டலின் மூலம் தமது மேம்பாட்டை கவனத்தில் செயற்படுவது வேறு. இவற்றை புரிந்து கொள்வது முக்கியமானதாகும். இவ்வாறான தனிமனித செயற்பாடுகளையும், தனிமனிதனால் நல்லகாரியங்களை செய்யமுடியும், போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சி என்பதெல்லாம் அவசியம் அற்றது என்ற போக்கையும் கொள்ளும் சித்தாந்தத்தையும் வளர்க்கின்றது.

தனிமனித வெளிப்பாடுகளுக்கு உதாரணமாக அன்னை திரேசா, டயானா போன்றவர்களை குறிப்பிடல்லாம். குறிப்பாக டயானாவை எடுத்துக் கொண்டால் அவர் இறந்த பின்னராக புனிதப்படுத்தப்பட்டதை அவதானிக்கலாம். பற்பல சமூகத்திற்குத் தேவையான கோரிக்கைகளுக்காக போராளிகள் போராடுகின்றனர். தனிமனிதர்களை மாத்திரம் முன்னிறுத்துதன் காரணம் மக்கள் குழுவாக செயற்படுவதை பின்னுக்குத் தள்ளிவிட்டு தனிமனித செயற்பாடுகளையும், தனிமனிதர்ளை முன்னுக்கு நிறுத்து மக்கள் போராட்டங்களை நலினப்படுத்துவதாகும்.

அமெரிக்க நாடு  சுதந்திரமான சிந்தனையை சிந்தனைகளை வளர்ப்பதாகவும், கடவுள் தம்மை வழிநடத்துவதாகவும், குடும்ப உறவு, கடும் உழைப்பு இவைகள் எல்லாம் உள்ளடக்கியதே அமெரிக்க கனவாகும். இவற்றின் வெளிப்படையான அம்சமாக அமெரிக்க ஜனாதிபதி குடும்பமாக ஞாயிறு பூசைக்கு செல்லலும், குடும்பமாக இருந்து கொண்டு நத்தால் கதையை சிறுவர்களுக்கு வாசித்துக் காட்டுகின்றார். இவை அமெரிக்க மேட்டுக் குடிகளிற்கான ஒரு அடையாளச் சின்னமும் கூட.

 

பொது அடையாளத்தை முன்வைத்தல்

இந்தத் தாக்குதலின் மூலமாக அமெரிக்க ஜனாதிபதியும், ஈராக் அதிபர்களும் தமது பதவியை ஸ்திரப்படுத்திக்க கொள்ள உதவி புரிந்ததே ஒழிய நாளாந்தம் வறுமையில் வாடுபவர்களுக்கு உழைக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வித பலனும் கொடுக்கவில்லை. இந்தத்தாக்குதலின் மூலமாக இஸ்லாமிய மத ஒற்றுமையும், அரபு தேசிய இன ஒற்றுமையையும் பொது அடையாளச் சின்னமாக முன்னிறுத்தி மத்திய கிழக்கு மக்களை தனக்கு ஆதரவாக திரள சந்தர்ப்பம் ஏற்படுதிக் கொடுத்தது. அதேவேளை மனித குலத்தை நேசிப்பவர்களும் ஈராக்கிற்கு எதிராக எதிரான தாக்குதலை எதிர்த்து நின்றனர். மனித குல முன்நேற்றத்தை ஆதரிப்பவர்களும் ஈராக்கின் சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள் எனக் கொள்ள முடியாதது, அத்துடன் இத்தாக்குதல்களை ஈராக்கிய ஜனாதிபதியின் எதிர்ப்பாளர்களும் எதிர்த்து நின்றனர். இங்கு ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார நலன்களையும் மக்கள் நலன்களையும் பகுத்தறிந்து உழைக்கும் மக்களுக்கு விரோதமாக எதிர்க்கட்.சிகள் சில தாக்குதலை ஆதரித்தனர். இஸ்லாமிய மத ஒற்றுமைபயன்படுத்தி சதாம் ஆதரவாக திரட்டிக் கொண்டாலும் மேற்கு நாடுகள் வரையறுத்துக் கொள்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற வரையறைக்குள் சதாமை அடிப்படைவாதியாக கொள்ள முடியாது. ஆனால் சாதாரன மக்கள் ஈராக்கிற்க கொடுத்த ஆதரவை ”இஸ்லாமிய அடிப்படைவாதம்”  என்று முத்திரை குத்தி தப்பித்துக் கொள்ளவும் முயற்சி செய்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது நேரிடையாகவே மேற்கத்தைய, அமெரிக்க எதிர்ப்பு என கூறி எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் ஒரே அளவு கோள் கொண்டு கணிப்பிட்டு  ஏகாதிபத்தியங்கள் திசை திருப்பும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதேவேளை அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர்  தனது  பதவியை பாதுகாக்கும் நோக்குடன் நடத்தப்பட்டதாக கருதப்படுகின்றது. இந்தக் தாக்குதல் இடம் பெறு;ற நேரமும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டும் ; (impeachment) மணித்தியால வித்தியாசத்தில் இடம் பெற்றது. தூக்குதலை அடுத்து கொங்கிரசில் எடுக்க விருந்த வாக்கெடுப்பு பின்போடப்பட்டது. பலகாலங்கள் பின்போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வாக்கெடுப்பு மறுநாளே வாக்கெடுக்கப்பட்டது.. தாக்குதலுக்கும் வாக்ககெடுப்பக்கும் சம்பந்தம் இல்லை என காட்டப்படுவதற்காக தாக்குதல் சிலநாட்கள் நீடிக்கப்பட்டது. அதேநாளின் அவரின் துணைவியார் நாடு இக்கட்டான சூழலில் இருப்பதாகவும், படையினர் யுத்த களத்தில் இருப்பதாகவும் அனைத்து முரண்பாடுகளையும் மறந்து விட்டு நாட்டின் நலனில் அக்கறை கொண்டு ஒன்று சேரும் படி இரங்கலாக வேண்டுகோள் விடுத்தார். இங்கு இரண்டுவிதமான தேசத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்களை உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அமெரிக்காவும், ஈராக்கும் தத்தமது தேசத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இரண்டும் தேசிய கோசங்களே இரண்டு விதமான நாடுகள் தத்தமது தேசங்களுக்கு வேண்டு கோள் விடு;க்கப்படுவதை ஒவ்வொரு தேசத்தவரும் சரியென வாதிடுக்கின்ற காரணத்தால் இந்த மாதிரியான கோசங்களை மக்கள் முன் வைக்கின்றனர். அதாவது அமெரிக்காவும் ஈராக்கின் தேசியத்தை முன் வைத்து மக்களை அணிதிரட்ட முற்படுகின்றனர். இரண்டும் சுரண்டும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் தாம் ஒரு தேசத்தவர் தாம் ஒரே இரத்தம் என்ன நடந்தாலும் எமது தேசம் என்ற எண்ணப்பாடு மக்களிடத்தில் உறைந்திருப்பதினால் அந்த உணர்வைப் பாவித்து ஒன்று சேர்க்க முயற்சிக்கப்ட்டது இதன் மூலம் தமது வர்க்க நலனை பாதுகாக்க முற்பட்டனர் என்பதை இங்கு கவனிக்கப்பட வேண்டும். பொதுச் சின்னத்தை அடையாளத்தை மையப்படுத்தி தேசிய இனங்களை அணிவகுப்பது அனைத்து தேசியப் போராட்டங்களுக்கும் பொதுவானதாகும். இங்கு இரண்டு வகை தேசிய இனக் கோசங்களுக்கும் இடையே நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் ஈராக்கை பொறுத்தவரை  ஒடுக்கும் வர்க்கம் ஆனால் அது மிகப் பெரிய வல்லரசுடன் மோது வது மாத்திரம் அல்ல ஈராக்கையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகின்றது. மக்கள் இல்லாது நாடு இருக்க முடியாது ஈராக் அதிபரை பொறுத்தவரை அமெரிக்காவின் நெருக்குதல்களை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்துள்ளார். அதாவது ஈராக் மக்கள் தம்மீது ஈராக் அதிபரும் பொருளாதார அமைப்பும் புரியும் ஒடுக்குமுறையை இரண்டாம் பட்சமாக்கி விட்டு அல்லது அடக்குமுறையை புரிந்து கொள்ள முன்னராக அமெரிக்காவினதும் அவர்களின் கூட்டாளிகளின் தாக்குதலே முன்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு முரண்பாடுகள் என்பது இரண்டாம் பட்சமாகமாகின்றது. இவ்வாறான நிலையே இலங்கை போன்ற தேசிய இனப்பிரச்சினை உள்ள நாடுகளில் காணப்படுகின்ற தேசியமும் வர்க்கப் போராட்டம் தான் ஆனால் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறை என்பது (impeachment) சர்வதேசத்திற்கும் பொதுவானதாகும்.

 

எதிர்ப்பாளிகள் பற்றிய பார்வை

எதிர்க் கட்சிகளில் சில ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கினறன. ஏதிரிக்கு எதிரிநண்பன் என்ற போர்வையில் ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கின்றன. ஏகாதிபத்தியங்களின் உதவியுடன் சர்வாதிகாரியை பதவியில் இருந்து அகற்றிவிட்டு தாம் அந்தப் பதவியில் அமர குறுக்கு வழியை பாவிக்கின்றனர். இவர்களுக்கு தேச நலன், மக்கள் நலன் எல்லாம் இரண்டாம் பட்சமாகின்றது. இவர்கள் பேசுகின்ற ஜனநாயகம் வெறுமனே ஆட்சியயை கைப்பற்றும் வரைக்கும் தான். இந்தப் போக்கை இந்திய ராணுவம் இலங்கையில் வந்திருந்த போது சிங்கள இனவாதிகளுடன் தமிழ் தேசியவாதிகளும், இந்திய ராணுவத்துடன் பாதை தவறிய அமைப்புக்களும் இந்தச் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டதை வரலாற்றில் இலகுவாக மறந்து விட முடியாது.

மக்கள் தாமாகவே முன்வந்து ஏகாதிபத்தியங்களுக்கு எதிர்பு;புத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பு வடிவங்களை வர்க்கப் போராட்டத்தை வெற்றி கொள்ளக் கூறிய வகையில் ஒன்றினைத்து போராட்டங்களை……. .. ..

ஐரோப்பிய மக்களில் பெரும் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனியாக இருந்தனர். இவர்களின் எதிர்ப்புச் சக்தி என்பது இரண்டாம் உலக யுத்த்திற்கு பிற்பட்ட சமூகத்தில் வலது குறைந்ததாகவே இருக்கின்றது. இந்தச் (pacifist) எதிர்க்கும் ஆற்றல் என்பது சமூகத்தில் இருக்கின்ற பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டது. பசிக்கின்றவனுக்கே உணவு தேவை என்பது போல் சுரண்டப்படுவனுக்கே சுதந்திரத்தின் அருமை தெரியும். யுத்தத்தின் பின்னரான சமூகம் என்பது சமூகத்pன் ஒவ்வொரு அலகுகளையும் தனித்துவப் படுத்தி வைத்துள்ளதுடன் அரசியல் பொருளாரதார ரீதியாக தனித்துப் போக்கை கொண்ட சிந்தனையோட்டமும் சேர்ந்து  சமூகத்தின் போராட்ட உணர்வை ஊணம் கொண்டு முடமாக்கிவிட்டது போராட்ட உணர்வின் வேகமும், ஆத்திரமும் இருக்கின்ற போது அவை மனேவியல் ரீதியாக நோய்க்கான குறியாக கருதப்படுகின்றது. இந்தப் போக்கானது சமூகத்தின் உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகும் போக்கும், முத்திரரை குத்தும் போக்கும் காணப்படுகின்றது. இதனால் சமூகத்தின் சாதாரண உறுப்பினர் என்ற நிலை இழந்து சமூகத்திற்னுகு வேண்டாதவராக ஆக்கபப்படுகின்றனர். சமூக உறுப்பினர்களிடையயே தனித்துவ (தாராளவாதம்) வாதம் என்பது ஆளமாகவே புரையோடிப் போய்யுள்ளது. இது தனிமனிதர் அவர் நலம் என்பது முன்தள்ளப்பட்டு சமுக நிலை என்பது இரண்டாம் பட்சமாகின்றுது.

 

உளவு வேலைகள்

நாவின் ஊழியர்கள் என ஈராக்கிற்கு சென்ற ஐ. நாவின் உத்தியோகத்தவர்கள் அமெரிக்கவிற்காக உளவு பார்ந்தனர் என அமெரிக்க பத்திரிகைகள் அம்பலப்படுத்துகின்றன. ஈராக் பலதடவைகள் ஊழியர்கள் தொடர்பான திருப்பியின்மையை வெளிப்படுத்தியிருந்தனர். தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரராக ஐ நாவின் பரிசோதகர்கள் ஒரு நாட்டினுடைய முக்கிய இடங்களை பார்வை இடம் மாத்திரமல்ல ஆத்திரப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

உளவு என்பது ஐ. நா  ஊழியர்கள்

உதவி நிறுவனங்கள்

செய்மதி மூலமான தகவல் சேகரிப்பு

ராடர் மூலமான கண்காணிப்பு என்பன மேற்கொள்ளப்பட்டன.

 

ஐ.நாவின் பரிசோதகர்களாவும், உதவி நிறுவன ஊழியர்களாகவும் செல்கின்றவர்களின் வர்க்க நிலையை அறிதல் மூலம் ஒரு முடிவிற்கு வரமுடியும். ஊழியர்களாக  சென்றவர்கள் சுரண்டும் பொருளாதார சமூக அமைப்பை பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து மறுஉற்பத்தி செய்யப்பட்டவர்களே.

இன்று உயர்கல்வி கற்றவர்கள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு பாதுகாப்பாக உத்தரவாதம் கொடுக்கும் இவர்களுக்கு இலகுவாக முக்கிய பதவிகள் வகிக்கின்றனர் சந்தர்ப்பம் நிறையைவே இருக்கின்றது. இதில் விதிவிலக்கும் இருக்கும். இங்கு ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடிகள் முக்கிய பதவிகள் வகிக்கின்றன.

இவற்றிடையில் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்கள், தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவிபுரிகின்றனர். தமது நலன்களுக்கு  தேவையானவைகளை செயற்படுத்தவும், தமது தேவைகளை பூர்த்தி செய்யவும் ஒவ்வொருவருக்கும் இடையே அதிக புரிந்துணர்வு இருக்கின்றது. தேவையான போது (lobby) தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தூது விடுகின்றன. இவ்வாறான ஒரு சமூக அமைப்பே மேற்குலகத்தில் இருக்கின்றது. இந்த உலகத்தில் அதிகாரம் என்பது கூட குறிப்பிட்ட குழுக்களுக்குக்கிடையேயே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக சமூக பாடங்கள், கல்விகளை தெரிவு செய்பவர்கள் தமது அறிவை மனித குல வளர்ச்சிக்காக பாவிப்பதில்லை எனலாம். இப்படிப்பட்டவர்களே ஐ.நாவின் ஊழியர்களாவர். ஐ. நா என்பது பக்கம் சாராத அமைப்பு என கூறப்பட்டாலும் அவை வெறும் வெற்று கருதுகோளே. இப்படியாக உயர்பதவி வகிப்பவர்கள் பொதுவுடமைச் சமூகம் பற்றிய காழ்புணர்ச்சி இவர்களிடத்தில் சிறு வயதுமுதலே ஏற்படுத்தப்படுகின்றது. இவர்கள் வளர்ந்த பின்னர் பதவிகளில் அமர்ந்த பின்னர் பொதுவுடமைத் தத்துவத்திற்கு எதிராகவே செயற்படுவர். இவ்வாறானவர்கள் ஏகாதிபத்தியங்களின் கூலிகளாக செயற்பட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

 

மேற்கு நாடுகளின் பாரபட்ச நடவடிக்கைகள்

Sunday Times  பத்திரிகையானது இஸ்ரேல் நாட்டினர் தயாரிக்கும் குண்டைப் பற்றி அம்பலப்படுத்தியுள்ளர். Gen Bomb ஆனது தனி மாத்திரம் அடையாளம் கொண்டு தாக்கக் கூடியதாகும். இது  Tel Aviv Ness- Ziona center இல் பரிசோதனை நடத்தப்படுவதாகவும், இவை காற்று, நீர் மூலம் தனியே அரபு இனத்தவரை மாத்திரம் தரம் பிரித்து தாக்கக் கூடியது . ஒரு குறிப்பிட்ட இனத்தை மாத்திரம் தாக்கும் வைரசை பரித்து வகுப்பாய்வதில் வெற்றி பெற்றுள்ளதாக இரகசிய வட்டாரங்களை ஆதராம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தென் ஆபீரிக்க இனவாத அரசு இவ்வாறான வைரசை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது என்றும் கருதப்பட்டது.  இதுவும் தனியே கறுப்பர்களை மாத்திரம் கொல்லக் கூடியதாகும். தற்பொழுது  தென் ஆபீரிக்க இனவாத Sunday Times ஆய்வாளர்களின் அறிவையும் உதவியையும் இஸ்ரேலியர்கள் பெற்றுள்ளதாக மேலும் கூறுகின்றது.

இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் உண்மையானால் முழு மனிதகுலத்துக்கும் கேடானதாகும். இவ்வாறான கண்டுபிடிப்புக்களும் முயற்சிகளும் மனித குலத்திற்கு லாபம் அல்ல மாறாக இனப்பிரச்சினை நடைபெறும் நாடுகளுக்கும், பழங்குடி மக்களை அழித்தொழிக்கும் நவீன உலகின் நடவடிக்கைகளுக்கு இது பாவிக்கப்படும்(?).

இவை பற்றி இந்த உலக நாடுகள் பேசத் தயாராக இருக்கின்றனவா? என்பது கேள்விக் குறியே. ஏன் இவை மாத்திரமா? இஸ்ரேல் சிரியா, லெபனான், யோர்டான், எகிப்து ஆகிய நாடுகளின் நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தற்பொழுது யோர்டானிடம் இருந்து கைப்பற்றிய கிழக்கு யெருசலேமையும், சிரியாவின் நிலப்பகுதியான கோலன் மலைச் சாரலையும் தனக்குச் சொந்தமானது என சட்டமியற்றியுள்ளது. பற் பல தீர்மானங்களை ஐ. நா வின் பாதுகாப்புச் சபையில் இயற்றினாலும் இஸ்ரேலியர்கள் அதற்கு மதிப்புக் கொடுப்பதும் இல்லை. அதனை நிறைவேற்ற முயற்சிப்பதுமில்லை.

இவர்கள் கூறுகின்ற சர்வதேச சமூகம் என்பது எது முன்பு பார்த்ததுபோல் மேற்கு நாடுகள், எமது நாட்டு ஆட்சியாளர்கள், வறுமையில் வாடுகின்ற மக்கள் என்பவரிடையே நலத்தின் மீதான ஆர்வம் வித்தியாசப்படும். அதேபோல் சர்வதேச சமூகம் என்பது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தியையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வல்ல கூட்டாளிகளையும், இந்த ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக நிற்கின்ற பணக்காரர்களின் தொழிற்சாலைகளையும் பாதுகாக்க வல்ல சக கூட்டாளிகளின் எண்ணப்பாட்டையே இவர்கள் பிரதிபலிக்கின்றனர். அதாவது கருத்தொற்றுமை கொண்டவர்களின் அணுசரணையும், ஆதரவும் கொண்டுவர்களை மாத்திரமே இங்கு குறிப்பிடுகின்றனர். எனவே இவர்கள் குறிப்பிடுகின்ற வட்டத்திற்குள் ஒடுக்கப்படும் மக்கள் இதற்குள் அடங்கப்படவில்லை. இவர்கள் எங்கேயே இருந்து வந்து எமது தேசங்களின்  மீது அக்கறை கொள்வது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுததாம் இப்படித் தான்  இவர்களின் அக்கறை பற்றி கொள்ளமுடிகின்றது.

இத்தாக்குதலை சீனா, ரஷ்யா அூகியவை எதிர்த்தன. ருஷ்யா தனது தூதுவரை திரும்பி அழைத்தது. எந்த விதமான விவாதமும் ஐ. நா மட்டத்திலும் சரி, ரஷய் மட்டத்திலும் சரி மேற்கொள்ளாமல் தாக்குதலில ;இறங்கியது ரஷ்யாவின் கௌரவ பிரச்சினைக்கு உரியதாகி விட்டது. என்னமாரித்தான் அமெரிக்காவிடம் நாட்டை அடைகு வைத்தாலும் கௌரவம் குறைந்து விட்டது என்பதில் மாத்திரம் கவனம் கொள்வதில் மாத்திரம் அமெரிக்காவின் எதேர்ச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்திவிட  முடியாது. அமெரிக்காவிடம் பிச்சை எடுத்துக் கொண்டு ஆக்காரமாப நடந்து கொள்ள எவ்வாறு முடியும் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவன் எந்தக் காலத்திலும் ஆக்காரமாக நடந்து கொள்ள முடியாது. வேண்டும் என்றால் அடையாளத்திற்கு எதிர்ப்புத் தொரிவித்துக் கொள்ள முடியும் இது அரசியல் நடைமுறையில் வழக்க்தில் உள்ளது. இது நவநாகரீக, ஜனநாயக அரசியல் பண்பு. இவைபற்றி அரசியல் ஆய்வாளர்கள் இவைகள் பற்றி கூர்ந்து ஆராய்ந்து கருத்துக்கள் சொல்ல முடியும் ஆனால் இவ்வாறான எதிர்ப்புக்களில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.

 

 

தாக்குதலின் நோக்கங்கள்

சாதாரணமாக பணத்தினை சேர்க்க குறியாய் இருப்பவர்கள் பதவிமோகம் உடையவர்கள் சாதாரணமாக எந்த இலகுவான செயலையும் செய்வதில்லை. அதில் எவ்வளவு லாபம் அவர்களுக்கு வருகின்றது எனயோசித்தே நடந்து கொள்கின்றனர். இப்படி இருக்மையில் எத்தனையே மைல்களுக்கு அப்பால் இருக்கின்றவர் ஜனநாயத்தையும் அன்றைய நாடுகனை மிட்டுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் பல லட்சக்கணக்கான டொலர்கள் செலவில் செய்யப்பட்ட குண்டுகளையும், விமானங்களையும், ராணுவத்தினருக்கான ஊதியம், எல்லை கடந்து வந்து தமது படையணிகளை பாதுகாக்கும் செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றின் பொறுப்பை தமது முதுகில் ஏற்றுக் கொண்டு ஆபர்த்தாண்டவராக காட்டுவதில் சூட்சும் இருக்கின்றது. இவற்றை கேள்வி கேட்டு தெரிந்து கொள்வதன் மூலமே தெளிவிற்கு வரமுடியும்.

தமது  நாட்டு எல்லைகளை விட்டு எத்தனையோ ஆயிரம் மைல்கள் கடந்து வந்து வேறு நாடு ஒன்றிற்காக மிகவும் அக்கறையாக இருக்கின்றனர். இவைகளை சாதாரண மக்களுக்கு விளக்கம் சொல்வது இலகுவானது அல்ல. இவர்கள் தமது நலனை பேணிப்பாதுகாக்கவும், பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் தமது தேசம் மாத்திரம் பங்குவமாக இருக்க வேண்டும் மற்றைய நாடுகள் எவ்வாறு சென்றாலும் பரவாயில்லை என்று செயற்படுபவர்கள். இவர்களே எமது தேசங்களுக்கு வந்து சட்டாம்பி வேலை பார்ப்பவர்கள். இவர்களின் செயற்பாட்டை பின்வரும் வரிகள் மூலம் வெளிப்படுத்தலாம்.

-ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் வைத்தான் வெள்ளரிக்காய்

காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்.( அமெரிக்கா)

--வெள்ளைக் காரன் பணம்

சின்னப்பணம்

 வேடினக்கை காட்டுது வெள்ளப்பணம்

 வெள்ளிப்பணத்திற் கு ஆசைப்பட்டு

வேசம் கலைச்சாளாம் வீராயி. ( ம.க.இ.க ஒலிப் பேழை)

என்ற பாடல் வரிகள் பல விடயங்களை சுண்டி நிற்கின்றன.

 

இவர்கள் வாழ்கின்ற உலகம் என்பது தமது

 

 

 

 

 

 

 

 

 

சதாம் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டாலும் வருகின்ற ஆட்சியாளர்களும் ஆயுத, பொருhளாhதாரத்தில் பலம் உள்ளவர்களாக இருக்கப்படாது என்பதேயாகும். அதாவது  பாக்கிஸ்தான், பங்களாதேசம், இலங்கை போன்ற நாடுகளில் மக்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட இராணுவத்தினரிடம் அதிகாரம் நிறையவே உள்ளது. இவர்களிடம் இருக்கின்ற அதிகாரத்தை முதலாளித்துவ அரசியல் தத்துவம் முன்வைக்கின்று நாடாளுமன்ற ஜனநாயகம் இலகுவிவ் பறித்துக் கொள்ள முடியாது. இவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் சுவை கண்டவர்கள் இவர்களிடம் இருந்து அதிகாரத்தை பறிக்க முற்படுகின்ற போது  மீளவும் சர்வாதிககள் தான் ஆட்சியயைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது. மக்கள் விரோத சக்திகள் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஏகாதிபத்தியங்கள் எப்பவும் ஆதரவாகத் தான் இருக்கும் ஆனால் அரபு- யூத முரண்பாடு என்பது பொதுவுடமைச் சமுதாயம் போன்றும் வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும் இந்த முரண்பாடுகள் தெரிந்து வைத்திருக்கின்ற ஏகாதிபத்தியங்கள் தனது எதிரிகளை மீளவும் தலைசாய்க்க விடாது இந்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கின்ற போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

 

 

தைக்கிறீஸ் நதி மாசடைந்துள்ளது

சுத்திகரிக்கும் நிலையம் தாக்குதலினால் சேதமடைந்துள்ளதுø

குப்பைகள்  பெருக்கம் அடைந்துள்ளது

சத்துணவு குறைபாடு

பிழையான சத்துணவு பிள்ளைகளுக்கு ஊட்டப்படல்

நோய்வாய்படல்

ஆயுள்காலம் குறைவாகுதல்

வறுமை

குழந்தைகள் வேலைக்கு செல்லவேண்டி நிர்ப்பந்தம்

 

அமைதிப்படை

அமைதிப் படை என்றால் என்னவென எமது மக்களுக்குத் தெரியும் ஆனால் அமைதிப் படை என்றால் என்னவெனத் தெரிந்து கொள்வதற்கு அமைதிப் படையை யுத்தம் நடக்கின்ற நாட்டிற்கு வரவழைத்து அதில் இருந்துதான் அமைதிப் படை இதுதான் என தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவற்றை சர்வதேச அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளமுடியும். இவ்வாறான வரலாற்று அனுபவங்கள் ஊடாக பெறப்படுகின்ற படிப்பினைகளில் இருந்து பெற வேண்டும்.

ஈராக்கில் செய்கின்ற அடாவடித்தனம் போல் எமது நாட்டிலும் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த சக்திகள் முனையலாம். பனாமா நாட்டுத் தலைவராக இருந்த மனுவல் நொரேகாவை அந்நாட்டை ஆக்கிரமித்து கைது செய்தது. இந்த நிலை இலங்கையிலும் ஏற்பட வேண்டும் என்பது அல்ல. ஆனால் புலிகளின் தலைவரை கைது செய்யப்பட வேண்டும் என்றவாதம் இருக்கின்றது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரங்கள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் உத்தியோக பூர்வமாக அரசு அறிவிக்க வில்லை எனினும் இப்படியான சர்வதேச உதாரணங்களை பார்த்து அதே போல் பிராந்திய வல்லவரசான இந்தியா செயலில் இயங்கலாம். அப்படி இறங்குவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. ஆனால் எந்தச் சக்திகளையும் தண்டிக்கும் உரிமை எந்தக் காலத்திலும் அந்தந்த நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமை சார்ந்ததாகும். இதனை விடுத்து குறுக்கு வழியில் தமது எதிரிகளை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நிலையில் செயற்படுவது அரசியலில் பாட்டாளி வர்க்க நிலை சார்ந்த அரசியலாக இருக்க முடியாது.

மற்றைய நாட்டின் அரசியல் நிலையில் இருந்து தமது நலன் சார்ந்த நிலையைப் பாதுகார்க்கின்ற அரசியல் தந்திரோபாயத்தை வகுக்க உதாரணமாக காட்டிக் கொண்டு செயற்படுகின்றன. சர்வதேச நிலையில் நடை பெற அனுமதிப்பது அந்த நாட்டிற்குத் தான் பாதிப்பு எமக்கு இல்லை என்ற நிலையில் மக்களே போராட்டத் தலைமைகளோ இருக்கமுடியாது. இது பணம் படைத்த வல்லரசுகளுக்கும் வறிய தேசத்தவரான எமக்கும் இடையேயான பிரச்சினை ஆனால் இதற்குள் ஏகாதிபத்தியங்கள்  நல்ல பாம்பு வேடம் இட்டு எமது தேசங்களில் நுழைகின்ற சந்தர்ப்பத்தை கொடுக்க விடாது போராடவேண்டும். இதற்கு போராட்டத் தலைமைகள் மக்களை அதற்கு ஏற்றவாறாக தயார்ப்படுத்த வேண்டியது முக்கிய கடமையாகின்றது. ஏனெனில் புரட்சி என்பது மாலைநேர விருந்து அல்ல. அது கொடிய நெடிய பாதையைக் கொண்டது. இதனை வெற்றி கொள்ள அவசியமான தந்திரோபாயம் வகுக்கும் சக்திகள் தகுந்த நிதானத்துடன் நடந்து கொள் வேண்டியது முக்கிய கடமையாகும்.

 

கண்ணி வெடியின் பாவனை என்பது வறிய நாடுகளே அதிகமாக பாவிக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் உயர்தர தொழில் நுட்பத்தைக் கொண்ட ஆயுதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் வளர்ச்சியடையாத நாடுகள் இவ்வாறான கண்ணி வெடியைப் பயன்படுத்தப்படுகின்றன. உயர் தர தொழில் நுட்டம் என்பது இவர்களிடையே இல்லை. உதாரணமாக எதிரியை தொலைவில் இருந்து கண்காணிக்கப்பட  பயன்படக் கூடிய விண்வெளி தொடர்பு, சற்றலைட் படம் பிடிப்பு போன்ற வசதி என்பது  இவர்களிடம் இல்லை.  அத்துடன் இன்றைய நிலையானது சாதாரண மக்கள் இவ்வாறான வெடிகளின் மூலமாக மக்கள் தொல்லைக்கு உள்ளாவதை அறிந்து கொள்கின்றனர். அறிந்து கொள்கின்ற மக்கள் இந்தத் துன்பத்தை போக்க மனதார விருப்த்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை அறிந்து கொண்ட ஆளும் வர்க்கம் இவற்றை இல்லாது போக்க தாமும் பாடுபடுவதாக காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் தாம் எவ்வளவு இரக்க மனப்பான்மை கொண்டுள்ளனர் என பறைசாற்ற உதவுகின்றன. இந்த நிலைக்கு மக்கள் பலியாகப் போவது தற்பொழுது தவிர்க்க முடியாதாக உள்ளது.

உலகின் பல பாகங்களிலும் கண்ணி வெடி வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஏனெனில் பிரச்சினைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகளில் இது தவிர்க்க முடியாது தொடரவே செய்யும் இங்கு முக்கியமாக எதிர்ப்புரட்சி அமைப்புக்கள் ஏகாதிபத்தியங்களின் துணையுடன் இயங்குபவைகள் தொடர்ந்தும் உதவி பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அங்கோலாவில் தொடர்ந்தும் எதிர்ப்பு புரட்சியமைப்பான (UNITA) யுனிட்டா கண்ணி வெடிகளை விதைக்கின்றது.

சமாதானம் பேசுகின்ற ஏகாதிபத்தியங்கள்  கடந்த ஐ.நா கூட்டத் தொடரில் இடம் பெற்ற அணுஆயுதத்தை முற்றாக தடை மீதான செய்வது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு வந்த போது சுமார் 100 நாடுகள் ஆதரித்தும் 26 நாடுகள் எதிர்த்தும் 24 நாடுகள் வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டன. இவற்றில் வாக்களிக்காது விட்ட நாடுகளில் நோர்வேயும் ஒன்றாகும். ஏதிர்த்து வாக்களித்த மேற்கு நாடுகளாகும். ஆனால் சீனா இப்பிரேரனைக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீனா நல்நோக்கத்திற்காக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. என்ன மேற்கு நாடுகள் ஆதரித்து வாக்களித்திருந்தால் சீனா எதிர்த்து வாக்களித்திருக்கும்.

 இந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநியாகிய அமெரிக்க ஏகாதிபத்தியம் 1961-1973 இடைப்பட்ட காலத்தில் 23 தடவைகள் அணுக் குண்டுப் பரிசோதனையை செய்துள்ளது. இவை கீரோசீமாவில் போட்ட குண்டிலும் பார்க்க 6 மடங்கு பலமாதாகும். இது 4, 75 அலை வேக பூமியதிர்ச்சிக்கு ஒப்பானதாகும். இது 12 மில்லியன் தொன் மணல் பரப்பை அசைக்கின்றது. இந்த பரிசோதனை பாலங்கள், கடல் கீழ் சுரங்கங்கள், துறைமுகங்கள் அமைக்க சாத்திய முறைகள் பற்றிய பிரசோனையாக கணிக்கப்படுகின்றது.

இதுபற்றிய ஆய்வு ஒருபுறமிருக்க உல அமைதி, ஜனநாயகம் என வயிறுகிழியக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் மிதிவெடிகளை முற்றாக தடை செய்ய முழுமையான ஆதரவு கொடுக்காது தவிர்க்கின்றன. அமெரிக்காவோ வட கொரியா எல்லையை பாதுகாப்பது தொடர்பாக அக்கறை காட்டிக் கொள்வதாக கூறிக் கொள்கின்றது. வட கொரியாவின் பாதுகாப்பு தொடர்பான விடயம் அடங்கி இருப்பதினால் அதற்காக தாம் முழுமையாக தடை செய்யும் பிரேரனைக்கு ஆதரவு அளிக்க முடியாது இருப்பதாக நொண்டிச்சாட்டுக் கூறுகின்றது.

 சமாதானத்தையும், சுபீட்சத்தையும் எந்த விதமான இரத்தக் களரியும் இல்லாமல் சமாதான முறையில் தமது இலக்கை அடைந்து விடலாம் என பல அமைப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவர்கள் தமது செயற்பாடுகளை ஜனநாயக வரம்பினுள் வைத்துக் கொள்வதாக கூறிக் கொள்கின்றன. இந்த அமைப்புக்கள் தன் ஆர்வ நிலையில் இருந்து செயற்படுகின்றன. இவர்களின் விருப்புக்கள் என்னவோ தூய்மையானதாக இருந்தாலும் இந்த பொருளாதார கட்டமைப்பு இவர்களின் இலட்சியப் போக்கை தொடர்ந்து செயற்பாட்டில் இயங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும் அதே வேளை அமைப்புகளும் நாளடைவில் சிதைந்து போகின்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.

செயற்பாட்டை கருத்து ரீதியாக ஏற்று அதன் பால் செயற்பாட்டை செயற்படுத்துவதை விடுத்து செயற்பாட்டின் பின்னர் பூரிப்பு அடைவது பின்னடைவிற்கு அத்திவாரமாகின்றது. இவ்வாறான  உறுப்பினர்களிடையே மானசீக வாதமும் எற்படுகின்றன. அமைப்புக்களில் எந்த நிலையில் ஒரு செயற்பாட்டைச் இலகுவாக கொண்டு செல்ல முடியுமோ, எந்தச் செயற்பாடு செய்ய வசதியாக உள்ளதோ அதைச் செய்து முடிக்கலாம் என்ற மனப் போக்கும் இந்த அமைப்புக்களில் காணப்படுகின்றன. இந்தப் போக்கு காலப் போக்கில் பாதிப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. இந்தப் போக்கு அமைப்பில் குழுவாதத்தையும், எதேர்ச்சாதிகாரப் போக்கையும்  கொண்டு வந்து வீடுகின்றது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தமது ஆர்வத்தின் மூலமாக இந்தச் வகைச் செயற்பாட்டில் இறங்கிவிடுதினால் அமைப்புக்களின் கொள்கை திட்டங்களை ஏற்க சிரமப்படுகின்ற நிலையானது அமைப்பைச் சிதைவிற்கு கொண்டு வந்து விடுகின்றன.

இந்த அமைப்புக்களின் ஆயுட்காலம் அந்த உறுப்பினர்களின் உணர்ச்சி கொதித்துக் கொண்டு இருக்கும் வரையில் தான் இருக்கும் உணர்ச்சிக்கு மாத்திரம் முதன்மை கொடுக்கின்ற இந்த உறுப்பினர்கள் தமது இலக்கை நாளடைவில் கைவிட்டு விடுவதுடன் அமைப்புக்களில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றனர். தாம் இவ்வளவும் உழைத்தும் எதுவும் பயன் அற்றுப் போய்விட்டது தொடர்ந்தும் அமைப்பில் செயற்படுவதில் பிரயோசனம் இல்லை என முடிவெடுத்தும் கொள்கின்றனர். இந்த நிலைப் போக்கை எல்லா வகையான நாடுகளிலும் அமைப்புக்களில் இருந்து வெளியேறியவர்களின் வாக்கு மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.

இவ்வாறான சக்திகள் அமைப்பில் இருக்கின்ற போது தமது வர்க்க நிலை என்ன என்பதையும், தமது பாதை எவ்வளவு கடினம் என்பதையும் தமது வாலிபப் பருவத்தில் அறிந்து கொள்ளாமல் தமது உணர்விற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றனர். இவர்கள் காலப் போக்கில் அமைப்பில் இருந்து விலகி விடுகின்றனர். இவர்கள் தமது அனுபவங்களை புத்தகங்களாக வெளியிட்டு காசு சம்பாதிக்கும் யுக்தியையும் கைக் கொள்கின்றனர்.  இவர்கள் குறுகிய காலத்தில் பணத்தைச் சம்பாதிப்பதிலும், பெயர் பெறுவதிலும் தமது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் சோசலிசப் புரட்சியையும், வரலாற்றுத் தலைவர்களையும் தமது கற்பனைக்கு வந்தபடி ஒப்பீடு செய்கின்றனர். இந்த நிலை என்பது வானத்தில் இருந்து குதித்தது அல்ல மாறாக இந்தச் சமூகத்தின் விழை பொருளே இந் நிலையைப் போக்குவிப்பதற்கு மாற்றீடாக எந்த விதமான வழிமுறையைக் கையாள்வது என்பது பற்றி பரந்த விவாதத்தை தொடங்குதல் வேண்டும். இந்தப் பிரச்சினையானது மக்களை, உறுப்பினர்களை அரசியல் மயப்படுத்தும் நடைமுறைப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தாகும். அமைப்பின் திட்டம் பற்றிய நோக்கில் இருந்தே ஆய்வுகள் இடம் பெற வேண்டும். இந்த வகையில் கடந்த கால வழிமுறைகளை ஆய்வு செய்தும் அதில் இருந்து பெற்ற படிப்பினைகளை கொண்டு எதிர்காலப் போராட்டத்திற்கு பாதை வகுக்க வேண்டும்.

பணம் படைத்தவர்களை பாதுகார்க்கும் சித்தாந்தம்

நாசீச சக்திகள் யேர்மனியில் பல சமூக நிலைகளில் முற்றாக அழிக்கப்படாத நிலையில் இருப்பதன் காரணமாக இன்று சமூக நிலைகளில் வளர்ச்சியடைகின்ற நிலையைக் காணக் கூடியதாகவுள்ளது.  தற்பொழுது இதுபற்றி பத்திரிகைகளில் வெளிப்படையாக படிக்கும் அளவிற்;கு நிலமைகள் இருக்கின்றது எனினும் தற்பொழுது யேர்மன் ராணுவ அணிகளிடையே காணப்படுகின்ற நாசிச ஆதரவுப் போக்கு வளர்ந்து வருகின்றது. இந்த நிலையை  மறைப்பதற்கு ராணுவ தலைமைப் பீடம் விரும்புகின்றது. இதுபற்றி விபரம் வருமாறு யேர்மன் ராணுவத்தினரிடையே நாசிச கருத்துக்களும், நாசிச ராணுவ மரியாதையும் முன்னைய விட ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இவற்றை வெளிப்படையாகவே தலைமைகள் ஒப்புக் கொள்கின்றன. நாட்டின்  மந்திரியின் மகன் தமது சேவைக் காலத்தை முடித்துவிட்டு வீடு திருப்பியபின் தனது 10 மாத கால இடைப்பட்ட சேவைக் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் நாசிச கோசங்கள் Der Fuhrer) ;    நாசி மரியாதைகள் ( Sieg Heil)  போன்ற தன்மைகளை காணக்கூடியதாக இருந்ததாக கிறிஸ்ரியான் (Christian Krause) (இவர் போக்குவரத்து மந்திரியான Gunther Krause இன் மகனாவார்.) என்ற இளைஞன் Bild am Sonntag என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைபற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்பு மந்திரி Ruhe Volker  இரகசிய ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்திகள் மிகைப்படுத்தல் என தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக ஜெனரல் லெப்ரினன் Joachim Spiering என்ற ஐந்தாம் படைப்பிரிவு தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் கிழக்கு யேர்மனியில் 50 தடவைகள் நாசிச் சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இது கடந்த வருடம் 10 சம்பங்கள் ஆகும். தேசிய ரீதியில் 72 இல் இருந்து 131 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது  ராணுவத்தில்  ஏற்பட்ட பிரச்சினை அல்லவெனவும், யேர்மன் சமுதாயத்தின் பிரச்சினை என தெரிவித்துள்ளார். Christian தெரிவித்த கருத்துப்பற்றி விசாரணை நடத்த விசாரணை நடத்தப்படுவதாகவும், கிறிஸ்ரியான் தமது மேல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் பத்திரிகைக்கு செய்தி கொடுக்கப்பட்டது குறித்து பாதுகாப்புத் திணைத்களம் விமர்சனம் செய்துள்ளது.

கிரிஸ்தியான் தமது பேட்டியில் தன்னுடைய சகபடையைச் சேர்ந்தவர் நாசிச சம்பவம் பற்றி தமது மேல் அதிகாரியிடம் தெரிவித்த போது எந்த வித மாற்றமும் ஏற்பட வில்லை எனவும் அதற்கு மாறாக அந்த ஊழியர் மௌனியாக்கப்பட்டதாவும், சில நாட்களின் பின்னர் சுவாஸ்திகா சின்னம், யுத்தக் கொடிச் சின்னம், புத்தகங்கள் என்பனவற்றை விண்ணப்பிக்க உயவயடழபரந கிடைக்கப்பட்டதாகவும் கூறினார். பயிற்சியின் போது வெளிநாட்டர் எதிர்ப்பும், தாழ்மைப் படுத்தும் வார்த்தைகள் பாவிக்கப்பட்டதாகவும், வெளிநாட்டரே வெளியேறு, யூதர்களை விசவாயு அறைக்கு அனுப்ப வேண்டும் என்ன கோசங்கள் பாவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விதமான சிந்தனைப் போக்குகள் ஒரு தேசத்தில் முற்றாக அழிக்கப்படாமை குறித்து பெரிதும் ஆச்சரயப்பட தேவையில்லை கிட்லர் அழிக்கப்பட்டாலும் அவர் கட்டமைக்கப்பட்ட சமூகத் தளம் என்பது அழிக்கப்படவேயில்லை. மாறாக மேற்கு நாடுகள் தமது பொம்மைகளை மேற்குத் தேசங்களில் ஆட்சிக்கு வரும்படியான திட்டங்களைச் வருத்துக் கொண்டு செயற்பட்டன. இதன் காரணமாக இதே போல் கிழக்கு நாடுகளில் முற்போக்கு, தேச பக்தர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு கம்யூனிட் கட்சிகளில் ஒழித்துக் கொண்ட முதலாளித்துவ வாதிகள் சோசலிச நாடுகளை முதலாளித்துவத்திற்கு திசை திருப்பி தற்பொழுது முதலாளித்துவத்தை மீளவும் அந்தத்  தேசங்களில் மீட்சியளித்துள்ளனர். இந்த வாறாக நிலமை இருக்கின்ற போது முதலாளித்துவ தேசங்களாக இருப்பவைகளில் நாசிசம் முற்றாக அழக்கப்படும் என எதிர்பார்ப்பது மடைமைத் தனம். ஆனால் தொடர்ந்தும் பணம் படைத்தவர்கள் இந்தச் சித்தாந்தத்தை அழிய விடாது பாதுகார்த்துக் கொண்டு தான  இருப்பார்கள்.

நாசீசம் என்பது கிட்லரின் கொலை பாதகச் செயலின் மூலம் பாமரர் மத்தியிலும் அப்பெயர் பதிந்துள்ளது. இந்தச் சித்தாந்தம் கிட்லரின் அழிவுடன் நின்றுவிடலில்லை அது தொடர்ந்தும் பரவிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தச் சித்தாந்தத்தைப் பாதுகார்க்க பணம் படைத்த கனவான்கள் காலத்துக்குக் காலம் உதவிக் கொண்டு தான் இருக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு முற்பட்ட காலத்தில் சோசலிச நாடாகிய சோவியத் ஒன்றியத்தை அழிக்கும் முகமாக மேற்கு நாடுகளால் கிற்லருக்;கு ஆயுதங்களை வழங்கினர். ஏனெனில் கிற்லரே சோவியத் ஒன்றியத்தை அழிக்க உதவக் கூடிய நண்பன் என்பதாலேயே. இறுதியில் மேற்கு நாடுகளையே முழுமையாக  விழுங்க முயற்சி எடுத்த போது தான் பணம் படைத்த மேற்கு நாடுகள் விளித்துக் கொண்டன. இன்று வரை நாசிச சக்திகளை முற்று முழுதாக சமுகத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. அதேவேளை நாசிச சக்திகளுக்கு பணம் படைத்தவகள்  உதவிக் கொண்டுதான் இருக்கின்றனர். இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர். சுவீடன் நாட்டு நாசிச அமைப்பிற்கு உதவி புரிந்தமை சில வருடங்களுக்கு முன்னதாக வெளிவந்தது. ஐமுநுயு என்ற பல்நாட்டு நிறுவனத்தின் உரிமையாளர்  இவ்வமைப்புக்கு நிதியளித்தார். ஐரோப்பிய ஒன்றிய நிதி நிறுவனம் சுவீடன் நாட்டில் விவசாயப் பண்ணையை மேற்கொள்ளும் நாசிச அமைப்பிற்கு நிதியளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தப் பண்ணையில் ஆயுதப்பயிற்சி எடுக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. நுரு நிதி நிறுவனம் தாம், நாசிச சக்திகள் என தெரியாமலும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் தெரியாத நிலையிலும் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

நாசிச யேர்மனியில் இருந்து சுவீடன் மத்திய வங்கியானது 60 தொன் பவுன் கட்டிகளை  விலைக்கு வாங்கியதாக சுவீடன் தொலைக் காட்சி அறிவித்துள்ளது. இவற்றில் 4.7 தொன் எடையை நீதியின் பெயரால் இன்று ஒப்படைக்க கடமைப்பட்டுள்ளதாக  அறிவிக்கின்றது.  கொல்லப்பட்ட யூதர்களிடம் இருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் இருந்தும்  கொள்ளையடிக்கப்பட்டதாக அறியப்படும். பவுன் நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை சுவீஸ்  நாட்டிற்கு இரகசியமாக விற்கப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வருகின்றன. நடுநிலை நாடாக கணிக்கப்பட்ட சுவீஸ் நாட்டில் இருந்து ஆயுதங்களும் மற்றும் தேவையான தளபாடங்களும் சுவீஸ் வழியாக யேர்மன் கொண்டு செல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.  உலகின் சர்வாதிகாரிகளினதும், நாட்டைச் சுரண்டும் பணக்காரர்களின் பணங்களை வைப்புச் செய்வதில் பெயர் போன சுவீஸ் வங்கி யூதர்கள் வைப்புச் செய்த பணத்தை வங்கியும், வாடிக்கையாளர்களுக்கு துணையாக இருந்த வக்கீல்களும் திருடி விட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இன்று பணம் படைத்த யூதர்கள் தமக்கு வருமதியாக பணத்தை திருப்பிப் பெறுவதில் அமெரிக்காவில் தளமாக கொண்டு இயங்குகின்ற யூத அமைப்பு தொடர்ந்தும் போராடுகின்றது.

எந்தச் சக்திகளும் தமது வர்க்க நிலையை பாதுகார்த்துக் கொள்வதற்காக எந்தவிதமான வாதங்களையும் முன்வைத்து தமது கோரிக்கைகளை சாதிக்க முற்படுகின்றன. பாதிக்கப்ட்ட யூதர்கள் தமக்கு இருக்கின்ற அனுதாபத்தைப் பயன்படுத்தி இன்ற பணம் படைத்த யூதர்கள் தமது நலனைப் பாதுகார்த்துக் கொள்ளுகின்றது. அனுதாபங்கள் என்பது ஒருபுறமிருக்க வர்க்க நலன்கள் அனுதாபம் என்ற திரைக்குள் மூடி மறைகின்றது. எமக்கு தெரிவது என்னவோ அனுதாபம் இன்று போராடுவது வர்க்க நலனின் பொருட்டான நடவடிக்கைகளுக்காகவே.

இந்தப் பகுதியில் இரண்டு விதமான தன்மைகளை பார்க்க முடிந்தது. இந்தப் பகுதியில் பணம் படைத்தவர்கள் நாசிச சக்திகளை வளர்க்க உதவுவதும், யூதர்கள் தமக்கு இருக்கின்ற அனுதாபத்தைப் பயன்படுத்தி தமது பணக்கார வர்க்க நலனைப் பாதுகார்க்க முற்படும் போக்கு இந்த இரண்டு போக்குக்களையும் வெற்றி கொண்டு அன்றாடம் துன்பப்படும் மக்களின் விடுதலைக்கான பாதையை வெண்றெடுக்கப் போராடுவதே ஒரே வழியாகும்.


 

ஏகாதிபத்தியங்களின் கெடுபிடிகள்

கடந்த இதழில் ஈராக் மீதான அமெரிக்காவின் கெடிபிடிபற்றிக் கூறியிருந்தோம். ஈராக் மக்கள் தமது எதிரிகளை தண்டிக்கும் உரிமையை அவர்களே கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக எந்தச் சக்திகளும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக பாடுபடுவதாக மார்தட்டிக் கொள்ளத்தேவையில்லை. ஜனநாயகம் என்பது வாழ்கின்றபோதே அவற்றை அனுபவிக்கக் கூடியாதாக அமைதல் வேண்டும் அதனை விடுத்து மதவாதச் சக்திகள் கூறுவது போல் இவ்வுலகில் கிடைக்காத அனைத்தும் விண்ணுலகில் கிடைக்கும் என காலந்தோறும் போதித்துக் கொண்டு இருப்பது போல் மக்கள் அழிந்த பிற்பாடு ஜனநாயகத்தை நிறைவேற்றுவது இவர்களின் தலையான கடமையாகும். இவர்கள் ஜனநாயகம் என கூறுவது பணம் படைத்தவர்களின் வசதியின் பொருட்டும் அவர்களைப் பாதுகாக்கின்ற அரசின் பொருட்டு அமைக்கப்படுகின்ற ஆட்சியையே. இதனை மறைத்து தொடர்புச் சாதனங்கள் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் இவைகளின் உண்மை தோற்றம் மக்களுக்கு தெளிவாக தெரிவதற்கு காலம் எடுக்கின்றது. இது எந்தக் காலத்திலும் போராட்டத்தை நடத்துகின்ற மக்களிடத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய பிரச்சினையே.

பிரச்சாரங்களுக்கு மத்தியில் தமது படையின் பலத்தினையும் அதன் வெற்றியையும் கணக்கில் எடுத்துக் கொண்ட எகாதிபத்தியம் தனது தோல்வியைத் தான் கணக்கில் வரவாக கொள்ள முடிந்தது. யுத்தம் நடத்து கொண்டு இருந்த போதும், நடந்த பிற்பாடும் தமது கட்டுப்பாட்டினுள் இருந்த தொடர்புச்சாதனங்கள் மூலமாக தமது வெற்றியை பறைசாற்ற முடிந்தது ஆனால் இன்று வெளிவரும் முடிவுகளோ அவர்கள் அன்று குறிப்பிட்டவற்றிற்கு மாறாகவே வருகின்றது. இவற்றில் தமது படையினர்களிடையே ஏற்பட்ட அதிர்ப்தி என்பதும் கவனிக்க வேண்டியதாகும். வளைகுடா யுத்தத்தில் கலந்து கொண்ட படையினர்கள் யுத்தத்தின் பிந்திய காலத்தில் பல நோய் நொடிகளுக்கு ஆளாகியுள்ளனர். யுத்தத்திற்கு அனுப்பப்படும் முன்னர் பல வகையான தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டது. இதனால் பிற்பட்ட காலத்தில் பல பக்க விழைவுகளை படையினரிடம் ஏற்பட்டுள்ளது. பலிக்கடாவாக்கப்பட்ட இந்தக் கூலிப்படையினர் இன்று தமது எஜமானர்களுக்கு எதிராக கருத்துக் கூறும் அளவிற்கு வந்துள்ளனர். அதிர்ப்தியடைந்த முன்னால் படையினர் தமது பதக்கங்களை திரும்பி ஒப்படைக்கவுள்ளனர். இவர்கள் தமக்கு சலுகை வளங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். எந்த விதமான பரிசோதனை செய்யப்படாத தடுப்பு மருந்துகளை தமக்கு செலுத்தியதால் தமது உடல்நிலையில் தற்பொழுது தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தாம் பரிசோதனைக்கு பலியாகிவிட்டதாகவும் அவர்களின் பேச்சாளர் (Tony Flint) ரோணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகாயத் (ஈராக் மீது) தாக்குதல்களால் வெற்றிகரமாக தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக முன்னர் பறைசாற்றப்பட்டது. இவைகள் அமெரிக்க (CIA) உளவு துறையின் கணிப்பில் 90 Scud ஏவுகணைகளையும், 2500 பீரங்கிகளையும் அளித்தாகக் கூறினர். ஆனால் 90 ஏவகணைகளில் எதையும் உருப்படியாக அழிக்கவில்லை எனவும் 2500 தாங்கிகளில் 10 வீதமானவைகளே ஆகாயத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாவும் மிகுதி ஈராக்கியப் படைகள் அவற்றை விட்டு விட்டு வெளியேறிய பின்னர் அழிக்கப்பட்டது என தற்போதைய ஆய்வு வெளியீடுகள் தெரிவிக்கின்றன. 90 ஏவுகணைகள் அல்ல அதன் பற்றிகள், தாங்கிகள் என்பனவே யோர்தானுக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. தாமே என்ன செய்வது என்பது தெரியாது பரிதவிக்க மேற்குலமே அழிவில் குதுகழித்தது இதுதான் இன்றைய உலகம். இந்த உலகம் வெற்றி எனக் கொண்டாடிய நிகழ்வினை இன்று அவர்களே அது தோல்வி என தமது வாயால் அறிவிக்க வேண்டிய மௌன நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்து விட்டுள்ளது.

இன்னுமொரு அறிக்கையான அமெரிக்க கொங்கிரசின் தணிக்கைக் குழுவினால் (Pentagon) பென்ரகனின் எச்சரிக்கையையும் மீறி வெளிவந்துள்ளது. General Accounting office இன் அறிக்கையில் Operation Desert Strom இல் பாவிக்கப்பட்ட ஆ-16 யுத்த விமானமானது தயாரிப்பாளர்கள் சொன்னதற்கு மாறாக தாக்குதல்கள் புகார், துசி, புகை, வெதுவெதுப்புத் தன்மை, ஆகியவற்றால் தடைப்பட்டது எனக் கூறுகின்றது.

ஆனால் இவர்களால் அகதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழிகள் தாக்கப்பட்டது, பெரும் கட்டிடங்கள், பாலங்கள், பொதுவிடங்கள் அழிக்கப்பட்டது ஆனால் அவர்கள் நினைத்தபடி எந்தவித வெற்றியையும் பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் ஈராக்கிய மக்களுக்கோ எல்லையில்லாத் தொல்லையை இன்றுவரை ஏற்படுத்தியுள்ளர். பிடல் காஸ்ரோ சொன்னார் ஏகாதிபத்தயங்கள் இந்த யுத்தத்தை நடத்த முயற்சிப்பது தமது ஆயுதங்களின் பலத்தை சோதித்துப் பார்க்கத்தான் எனவும், ஈராக் ஏகாதிபத்தியங்களின் சோனைப் பீடம் எனக் கூறினார். அவர் சொன்னது தான் இன்று நிறைவேறியுள்ளது. யுத்தத்தை பாதுகாப்புச் சபையில் கியூபா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

இன்று அவர்களின் கூட்டணியே யுத்தம் என்ற எண்ணத்தை ஏற்கத் தயாராக இல்லாத நிலையைக் காணமுடியும். வட ஆபீரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாடு கட்டாரில் (Qatar) இடம் பெற்றது அதற்கு சவூதி அரேபியாவும், எகிப்தும் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைக்க வில்லை அத்துடன் எந்த குவைத்துக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோ அந்தக் குவைத் நாடோ பஞ்சிப்பட்டு ஒரு கீழ்நிலை அதிகாரியை பிரதிநிதியாக அனுப்பி வைத்தது.

இஸ்ரேலுக்கும், ஈராக்கிற்கும் எதிராக ஐ.நா சபையில் பலஸ்தீனத்தில் இருந்து வெளியேறவேண்டும், குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் படியும், லெபனான், சிரியாவின் பிரதேசங்களை விட்டு வெளியேறும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. ஆனாலும் ஈராக்கிற்கு எதிராக என்றதும் முன்னுக்கு நிற்கின்ற அமெரிக்காவின் நிலைமீது இயல்பாகவே சந்தேகம் ஏற்படும். இந்த நம்பிக்கையீனத்தின் மூலமாக ஆக்கபூர்வமான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வார்கள் எனக் கொள்ள முடியாது.

இவற்றில் இருந்து அவர்களின் நண்பர்கள் அமெரிக்காவின் அரசியலில் நம்பிக்கை இல்லாததாக காட்டிக் கொண்டாலும் அவர்கள் எப்பவும் ஸ்திரமான நிலைப்பாட்டைக் கொள்வார்கள் எனக் கொள்ள முடியாது ஏனெனில் உலகப் பொலீசானது வெருட்டிக் காரியம் சாதிக்கும் என்பது தெரிந்ததே. இதற்கு எல்லோரும் பணிந்து போவார்கள் என்பதை எப்பொதும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இன்று பலமாற்றங்கள் சர்வதேசத்தில் இடம் பெற்று வந்துள்ளது. இருந்தும் அமெரிக்காவின் பிடி என்பது பலமாகத் தான் இருக்கின்றது. இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் புதிய தலைவர் ஈராக்கின் மீதான தடையை அகற்ற வேலைகளை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார். அத்துடன் ஈராக்கும் 6 மாதங்களுக்குள் பரிசோதகர்கள் தமது வேலையை முடித்துவிட்டு வெளியேறுவதுடன் தடையை அகற்றும் படியும் கேட்டிருக்கின்றது. ஐ.நாவின் செயலாளரும் தடையை சற்று தளர்த்த ஆதரவு தெரிவித்துள்ளார்.

------------------------11081999 பழைய ஆக்கங்கள்

 


கண்ணி வெடியைத் தடைசெய்தல்

கண்ணி வெடியைத் தடை செய்யும் முயற்சியை பல அமைப்புக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புக்கள் பொதுவான கூட்டமைப்பொன்றைக் கொண்டு இயங்குகின்றனர். இந்த அமைப்பபைச் சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் கூட்டமைப்பான ICBL என்ற அமைப்பின் சார்பில் Jord Williams, McGrath பெற்றுக் கொண்டனர். கண்ணி வெடி தடைசெய்யும் முகமாக வேலைகளை வியட்னாம் யுத்தத்தில் கால் இழந்தவரான Bobby Muller என்பவரினாலும் (Vietnam veterance) வியட்னாம் யுத்தத்தில் கலந்து கொண்டவர் அமைப்பினாலும் 1991 ஆண்டு முதன் முதலாக கண்ணி வெடியை முற்றாக தடை செய்ய வேண்டும் என யேர்மன் அமைப்புடன் சேர்ந்து கோரிக்கை விடப்பட்டது. இவர்களின் இந்தக் கோரிக்கை வளர்ந்து வந்ததை அவதானித்தவர்கள் தமது வேலையை மென்மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு Jord Williams என்பவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். வியட்னாமில் இருந்து திரும்பிய முல்லர் போன்றவர்கள் அமெரிக்காவில் மதிக்கப்படாமை இருந்த நிலையை இங்கு குறிக்கப்பட வேண்டும்.

கண்ணி வெடியின் பாவனை என்பது வறிய நாடுகளே அதிகமாக பாவிக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் உயர்தர தொழில் நுட்பத்தைக் கொண்ட ஆயுதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் வளர்ச்சியடையாத நாடுகள் இவ்வாறான கண்ணி வெடியைப் பயன்படுத்தப்படுகின்றன. உயர் தர தொழில் நுட்டம் என்பது இவர்களிடையே இல்லை. உதாரணமாக எதிரியை தொலைவில் இருந்து கண்காணிக்கப்பட பயன்படக் கூடிய விண்வெளி தொடர்பு, சற்றலைட் (விண்வெளி) படம் பிடிப்பு போன்ற வசதி என்பது இவர்களிடம் இல்லை. அத்துடன் இன்றைய நிலையானது சாதாரண மக்கள் இவ்வாறான வெடிகளின் மூலமாக மக்கள் தொல்லைக்கு உள்ளாவதை அறிந்து கொள்கின்றனர். அறிந்து கொள்கின்ற மக்கள் இந்தத் துன்பத்தை போக்க மனதார விருப்பத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை அறிந்து கொண்ட ஆளும் வர்க்கம் இவற்றை இல்லாது போக்க தாமும் பாடுபடுவதாக காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் தாம் எவ்வளவு இரக்க மனப்பான்மை கொண்டுள்ளனர் என பறைசாற்ற உதவுகின்றன. இந்த நிலைக்கு மக்கள் பலியாகப் போவது தற்பொழுது தவிர்க்க முடியாதாக உள்ளது.

McGrath கூறுகின்றார் 1995 இல் உலகச் சமுதாயம் 4500 (billon) பில்லியன் குரோணர்களுக்கு யுத்த தளபாடங்களுக்காக பாவிக்கப்பட்டதாக கூறுகின்றார். அப்படியாயின் இந்தப் பணங்கள் யாருடைய பையினுள் செல்லுகின்றன.

கண்ணி வெடிகளின் தொகை தொடர்பாக வேறுபாடான கருத்துக்கள் இருக்கின்றன. இந்த தொகை தொடர்பாக செங்சிலுவைச் சங்கம், பிரபல ஆய்வாளர்களுக்கும் ஐ.நா மற்றும் கண்ணி வெடித் தடுப்பு சர்வதேச அமைப்பிற்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் தொகைகளை பிழையாக திரித்துக் கூறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ICBl, UN இனின் கணிப்பின் படி 100- 120 பில்லியன், 70 நாடுகளில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வெளிவரும் ஏடான Jane’sIntelligence Rewiew இனின் கணிப்பின் படி இது அரைப்பகுதி என தெரிவிக்கின்றது. Colin King கடந்த 14 வருடமாக கண்ணி வெடி அகற்றலை மேற்கொள்கின்றார். இவரே தமது அறிக்கையை ஜேன் ஏட்டில் 600 பக்க அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

Paul A. Jefferson ( Halo Trust) என்பவர் புள்ளி விபரத்தில் பிழையான தொகையை கூறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இவர் குவைத்தில் கண்ணி வெடியை அகற்றுகின்றபோது தனது கால்களை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்ற போதிலும் தொடர்ந்தும் உலகின் பல பாகங்களிலும் கண்ணி வெடி வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஏனெனில் பிரச்சினைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகளில் இது தவிர்க்க முடியாது தொடரவே செய்யும் இங்கு முக்கியமாக எதிர்ப்புரட்சி அமைப்புக்கள் ஏகாதிபத்தியங்களின் துணையுடன் இயங்குபவைகள் தொடர்ந்தும் உதவி பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அங்கோலாவில் தொடர்ந்தும் எதிர்ப்பு புரட்சியமைப்பான (UNITA) யுனிட்டா கண்ணி வெடிகளை விதைக்கின்றது.

ஓப்பந்தத்தில் 122 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அனைத்து வித கண்ணி வெடிகளின் உற்பத்தியை முற்றாக தடை செய்தல். இருப்பில் இருக்கின்றவைகள், பயனில் இருப்பவைகளை செயல்பாடு அற்றதாக்குதல். ஐ. நாவின் கணிப்பின் படி 35 நாடுகள் கண்ணி வெடியை ஏற்றுமதி செய்கின்றன.

350 விதமானவைகள், 100 ஆயுதங்கள் உற்பத்தி செய்கின்ற நாடுகள், அவதானிகளின் கணிப்பின் படி மறைமுக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கருதுகின்றனர். மேற்கு நாடுகள் தமது தொழிற்சாலைகளை சிங்கப்பூருக்கு நகர்த்தியுள்ளன.

Africa Asia Europe

Egypt 23 mill

Sudan 1 mill

Angola 15 mill

Eritria 1 mill

Mosamgik 3 mill

Somalia 1 mill

MiddleEast

Irak 10

Iran 16 mill

Asia

Afganistan 10

Kina 10

Vietnam 3.5

Kambodia 6

Europe

Ukrain 1 millon

Croatia 3 Mill

Bosnia Herzergovina 3 mill

சமாதானம் பேசுகின்ற ஏகாதிபத்தியங்கள் கடந்த ஐ.நா கூட்டத் தொடரில் இடம் பெற்ற அணுஆயுதத்தை முற்றாக தடை மீதான செய்வது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு வந்த போது சுமார் 100 நாடுகள் ஆதரித்தும் 26 நாடுகள் எதிர்த்தும் 24 நாடுகள் வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டன. இவற்றில் வாக்களிக்காது விட்ட நாடுகளில் நோர்வேயும் ஒன்றாகும். இதனை ஏதிர்த்து வாக்களித்த மேற்கு நாடுகளாகும். ஆனால் சீனா இப்பிரேரனைக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீனா நல்நோக்கத்திற்காக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. என்ன மேற்கு நாடுகள் ஆதரித்து வாக்களித்திருந்தால் சீனா எதிர்த்து வாக்களித்திருக்கும்.

இந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநியாகிய அமெரிக்க ஏகாதிபத்தியம் 1961-1973 இடைப்பட்ட காலத்தில் 23 தடவைகள் அணுக் குண்டுப் பரிசோதனையை செய்துள்ளது. இவை கீரோசீமாவில் போட்ட குண்டிலும் பார்க்க 6 மடங்கு பலமாதாகும். இது 4, 75 அலை வேக பூமியதிர்ச்சிக்கு ஒப்பானதாகும். இது 12 மில்லியன் தொன் மணல் பரப்பை அசைக்கின்றது. இந்த பரிசோதனை பாலங்கள், கடல் கீழ் சுரங்கங்கள், துறைமுகங்கள் அமைக்க சாத்திய முறைகள் பற்றிய பிரசோனையாக கணிக்கப்படுகின்றது.

இதுபற்றிய ஆய்வு ஒருபுறமிருக்க உல அமைதி, ஜனநாயகம் என வயிறுகிழியக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் மிதிவெடிகளை முற்றாக தடை செய்ய முழுமையான ஆதரவு கொடுக்காது தவிர்க்கின்றன. அமெரிக்காவோ வட கொரியா எல்லையை பாதுகாப்பது தொடர்பாக அக்கறை காட்டிக் கொள்வதாக கூறிக் கொள்கின்றது. வட கொரியாவின் பாதுகாப்பு தொடர்பான விடயம் அடங்கி இருப்பதினால் அதற்காக தாம் முழுமையாக தடை செய்யும் பிரேரனைக்கு ஆதரவு அளிக்க முடியாது இருப்பதாக நொண்டிச்சாட்டுக் கூறுகின்றது.

சமாதானத்தையும், சுபீட்சத்தையும் எந்த விதமான இரத்தக் களரியும் இல்லாமல் சமாதான முறையில் தமது இலக்கை அடைந்து விடலாம் என பல அமைப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவர்கள் தமது செயற்பாடுகளை ஜனநாயக வரம்பினுள் வைத்துக் கொள்வதாக கூறிக் கொள்கின்றன. இந்த அமைப்புக்கள் தன் ஆர்வ நிலையில் இருந்து செயற்படுகின்றன. இவர்களின் விருப்புக்கள் என்னவோ தூய்மையானதாக இருந்தாலும் இந்த பொருளாதார கட்டமைப்பு இவர்களின் இலட்சியப் போக்கை தொடர்ந்து செயற்பாட்டில் இயங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும் அதேவேளை அமைப்புகளும் நாளடைவில் சிதைந்து போகின்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.

செயற்பாட்டை கருத்து ரீதியாக ஏற்று அதன் பால் செயற்பாட்டை செயற்படுத்துவதை விடுத்து செயற்பாட்டின் பின்னர் பூரிப்பு அடைவது பின்னடைவிற்கு அத்திவாரமாகின்றது. இவ்வாறான உறுப்பினர்களிடையே மானசீக வாதமும் எற்படுகின்றன. அமைப்புக்களில் எந்த நிலையில் ஒரு செயற்பாட்டைச் இலகுவாக கொண்டு செல்ல முடியுமோ, எந்தச் செயற்பாடு செய்ய வசதியாக உள்ளதோ அதைச் செய்து முடிக்கலாம் என்ற மனப் போக்கும் இந்த அமைப்புக்களில் காணப்படுகின்றன. இந்தப் போக்கு காலப் போக்கில் பாதிப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. இந்தப் போக்கு அமைப்பில் குழுவாதத்தையும், எதேர்ச்சாதிகாரப் போக்கையும் கொண்டு வந்து வீடுகின்றது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தமது ஆர்வத்தின் மூலமாக இந்தச் வகைச் செயற்பாட்டில் இறங்கிவிடுதினால் அமைப்புக்களின் கொள்கை திட்டங்களை ஏற்க சிரமப்படுகின்ற நிலையானது அமைப்பைச் சிதைவிற்கு கொண்டு வந்து விடுகின்றன.

இந்த அமைப்புக்களின் ஆயுட்காலம் அந்த உறுப்பினர்களின் உணர்ச்சி கொதித்துக் கொண்டு இருக்கும் வரையில் தான் இருக்கும் உணர்ச்சிக்கு மாத்திரம் முதன்மை கொடுக்கின்ற இந்த உறுப்பினர்கள் தமது இலக்கை நாளடைவில் கைவிட்டு விடுவதுடன் அமைப்புக்களில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றனர். தாம் இவ்வளவும் உழைத்தும் எதுவும் பயன் அற்றுப் போய்விட்டது தொடர்ந்தும் அமைப்பில் செயற்படுவதில் பிரயோசனம் இல்லை என முடிவெடுத்தும் கொள்கின்றனர். இந்த நிலைப் போக்கை எல்லா வகையான நாடுகளிலும் அமைப்புக்களில் இருந்து வெளியேறியவர்களின் வாக்கு மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.

இவ்வாறான சக்திகள் அமைப்பில் இருக்கின்ற போது தமது வர்க்க நிலை என்ன என்பதையும், தமது பாதை எவ்வளவு கடினம் என்பதையும் தமது வாலிபப் பருவத்தில் அறிந்து கொள்ளாமல் தமது உணர்விற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றனர். இவர்கள் காலப் போக்கில் அமைப்பில் இருந்து விலகி விடுகின்றனர். இவர்கள் தமது அனுபவங்களை புத்தகங்களாக வெளியிட்டு காசு சம்பாதிக்கும் யுக்தியையும் கைக் கொள்கின்றனர். இவர்கள் குறுகிய காலத்தில் பணத்தைச் சம்பாதிப்பதிலும், பெயர் பெறுவதிலும் தமது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் சோசலிசப் புரட்சியையும், வரலாற்றுத் தலைவர்களையும் தமது கற்பனைக்கு வந்தபடி ஒப்பீடு செய்கின்றனர். இந்த நிலை என்பது வானத்தில் இருந்து குதித்தது அல்ல மாறாக இந்தச் சமூகத்தின் விழை பொருளே இந் நிலையைப் போக்குவிப்பதற்கு மாற்றீடாக எந்த விதமான வழிமுறையைக் கையாள்வது என்பது பற்றி பரந்த விவாதத்தை தொடங்குதல் வேண்டும். இந்தப் பிரச்சினையானது மக்களை, உறுப்பினர்களை அரசியல் மயப்படுத்தும் நடைமுறைப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தாகும். அமைப்பின் திட்டம் பற்றிய நோக்கில் இருந்தே ஆய்வுகள் இடம் பெற வேண்டும். இந்த வகையில் கடந்த கால வழிமுறைகளை ஆய்வு செய்தும் அதில் இருந்து பெற்ற படிப்பினைகளை கொண்டு எதிர்காலப் போராட்டத்திற்கு பாதை வகுக்க வேண்டும்.

------------11081999  பழைய ஆக்கங்கள்

 

(தனிமனிதச் சிந்தனையையும் -லொபிக்களை - அடையாள அரசியல் அமைப்புகளை ஊக்குவிக்கும் முறையை விளக்குகின்ற கட்டுரை.)

 

 

சுற்றாடலை மாடுபடுவதை தடுக்கும் மாநாடு

1992 இல் பிரேசிலில் 150 நாடுகள் கலந்து கொண்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு மாநாட்டினைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மாநாடு கூட்டப்பட்டுள்ளது. சூழல் மாசுபடுதலைத் தடுக்கும் முகமாக மார்கழி மாதம் பத்தாம் திகதி யப்பானில் கெயோரோ (Kyoto) நகரில் 170 நாடுகளில் இருந்து பல அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கு பற்றுகின்றன. இந்த மாநாட்டில் Co2 உட்பட ஏனைய பிராண வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது, எரிபொருட்கள் சக்தியின் பாவனையை மட்டுப்படுத்துவதும் தொடர்பாக இம்மாநாட்டில் கலந்து உரையாடப்படுகின்றது.

இவற்றில் நோர்வே, யப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் பிராணவாயு வெளியேற்றத்தில் வித்தியாசமான அளவை பருமனாக கொள்ளலாம் எனவும்,

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை எல்லோரும் ஒரே அளவாக பருமனில் தான் வெளியேற்றம் இருக்க வேண்டும் எனவும் பிரேரனை முன்வைத்தன.

மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே அவுஸ்ரேலியா இந்த பிரேரனை பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொள்ளாது முன்வைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் எனவும் விசனப்பட்டது.

132 நாடுகள் யப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்வைத்த பிரேரனையை கூட்டாக எதிர்க்கின்றன. இவர்கள் தமது பிரேரனை மூலமாக தமது கடமைகளை உணர்ந்து கொள்ளாமல் முழுப்பாரத்தையும் மூன்றாம் உலக நாடுகள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டியிருக்கின்றன. இதற்கு மாறாக 2014 இல் தான் இவ்வொப்பந்தத்தை மூன்றாம் உலக நாடுகள் பின்பற்றலாம் என நியூசீலாந்து சமரச பிரேரனையை முன்வைத்துள்ளது.

பூகோளத்தில் பல மாற்றங்கள் இடம் பெறுகின்றதினால் வெப்பம் அதிகரிக்கின்றது. கடல் நீர்மட்டம் அதிகரிக்கின்றது. வாயு மண்டலத்தில் சேதம் ஏற்படுகின்றது. இதனால் வெப்பம் அதிகரிக்கின்றது, மழை வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படுகின்றது, நீர்மட்டம் உயர்வதினால் இருக்கின்ற நிலப்பரப்பு இல்லாமல் போகின்றது சிறி தீவுகள் இல்லாமல் போகின்றது. பங்களாதேசமே இல்லாது போகும் எனவும் கணிக்கப்படுகின்றது.

இன்றைய உலகில் பலவிதமான வாயுக்கள் உற்பத்தியின் நோக்கம் கொண்டு பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் எரிபொருள் சக்தியானது உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு லாபம் கொடுக்கக் கூடியது எதுவோ அதுவே தெரிவு செய்யப்படுகின்றது.

வாகனங்களின் பாவிப்பு என்பது அதிகரித்துள்ளது, விறகிற்குப் பதிலாக வாயுக்கள் பாவிக்கப்படுகின்றது. யுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது அதில் பலவாயுக்கள் பாவிக்கப்படுகின்றது. அணு மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது, அணு ஆயுதங்கள் மற்றும் விமான போக்குவரத்து, நிலக்கரியின் பாவனை அதிகரிப்பு இவற்றால் பூகோலத்தில் மாற்றம் என்பது அதிகரிக்கின்றது.

இன்றைய உலகின் காலநிலையானது கடந்த 500 வருடங்களுக்கு பின்பாடுதான் இவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் கடந்த 150 வருடத்தில் 0.3 இருந்து 0.6 செல்சியஸ் வெப்பமும், 10- 25 (Centimeter) சென்ரிமீற்றர் கடல் நீர்மட்டமும் அதிகரீத்துள்ளது. இந்தப் போக்கில் சூழல் மாற்றமடைந்து செல்லுமாக இருந்தால் 2030களில் இரண்டு மடங்காகவும், 2100 களில் மூன்று மடங்காகவும் கைத் தொழில் புரட்சிக்கு முந்திய காலத்தை விட காலநிலையில் மாற்றம் ஏற்படும் எனவும், வெப்பநிலை 1- 3.5 செல்சியஸ், 15- 95 வரையிலான கடல் நீர்மட்டமும் ஒப்பிட்ட ரீதியில் உயரக் கூடும் என ஐ. நா ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த மாநாட்டில் பல நெருக்கடிக்களுக்கு மத்தியில் சமரசத்திற்கு வந்த பல நாடுகள் மாநாட்டில் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை கைச்சாத்திட முயளவில்லை. இவற்றில் முக்கிய சில பகுதிகளை இங்கே தருகின்றோம். வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 இருந்து 2010 ஆகிய இடை வெளியில் 5,2 வீதத்தில் வெளியேற்றப்படும் வாயுக்களின் பருமனைக் குறைக்க வேண்டும்.

USA 7%, EU 8%, Japan 6% என குறைக்க வேண்டும்.

1990 - 2010 இடைப்பட்ட காலப்பகுதிக்குள் 1 வீதமான வெளியேற்றத்தை நோர்வேயானது அதிகரிக்க முடிகின்றது.

அத்துடன் மூன்றாம் உலக நாடுகள் மீதான கடமைப்பாடு பற்றி எந்த முடிவிற்கும் வரமுடியாத நிலை காரணமாக இந்த மாநாட்டின் உடன்படிக்ககை நிரலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் நோர்வேயானது தனது சுற்றாடல் சம்பந்தமான கடமைப்பாட்டில் இருந்து செயற்படுமா இல்லை என்பது பற்றிய ஊகங்கள் எழுப்புவது எந்தவித பலனையும் தர முடியாது எனெனில் அது உற்பத்தி பற்றி கோட்பாட்டு நிலையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.

சூழலைப் பாதுகாக்க ஏதுவான மாற்றுச் சக்தியை தேடிக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இவற்றில் நோர்வேயில் இந்த மாநாடு பற்றியும், சுற்றுப் புறப்பாதுகாப்புப் பற்றியும் பல விவாதங்கள் ஒவ்வொரு வரும் தமது வர்க்க நலனில் அடிப்படையில் இருந்து செயற்படுகின்றனர். நோர்வேயில் வாயு கண்காணிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம் பெறுகின்றன.

யப்பான் தனது தேவையை பூர்த்தி செய்யவும் 1990 ஆண்டிற்கான நிலைக்கு கொண்டு வர 50 அணுமின் நிலையங்களை அமைக்க வேண்டும் இதன் மூலமே தனது மின் தேவைகளை தீர்த்துக் கொள்ள முடியும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும்.

அமெரிக்க செனற்சபையில் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு என்பது குறைவாகவேயுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சில தொழிற் சங்கங்களும் செனற் சபை உறுப்பினர்களும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாது தடுக்க கடுமையாக உழைக்கின்றனர். இருபகுதியினரும் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் வாபத்தில் அதிகம் பலன் இன்மை ஏற்படும் என்பதால் இதனை எதிர்க்கின்றனர். இந்த ஒப்பந்தம் அறைகுறையாக இருப்பினும் ஒவ்வொரு படியையும் மக்களின் இயற்கையை பாதுகாக்க பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமெரிக்க தொழிலாளர்களும் லாபத்தில் துண்டு விழுகின்றது என்பதற்காக முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடுகின்றனர் என்பது தான் இங்கு விவாதத்துக்கு உரிய விடயமாகின்றது. இந்த ஒப்பந்தமானது செத்துப் பிறந்த தாக கணிக்கப்படும் இவ் ஒப்பந்தம் கிளின்ரன், அல் கோர் ஆகியோரே இதனை வரவேற்கின்றனர்.

இன்றைய உலகில் மாற்றத்தை உண்டுபடுத்தக் கூடிய செயற்பாட்டில் முன்னணி வகிப்பவர்கள். உலகில் தமது தேவைகளுக்காக இயற்கையை சுரண்டி வாழ்பவர்கள் நிச்சயம் பஞ்சப்பராரிகள் இல்லை. ஏனெனில் இவர்கள் தமது அன்றாடச் சாப்பாட்டிற்கே அல்லல்படுபவர்கள். லாபத்தை பெருக்கும் பொருட்டு தமது உற்பத்தி யுத்திகளை கவனத்தில் கொள்கின்றனர். இன்று சீனாவில் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்தை தொடர்ந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் குடும்பங்களுக்கு தகுந்த வகையாக கார்களை உற்பத்தி செய்யும் முகமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளன. உற்பத்தியானது மக்களின் தேவையை முன்வைத்து இடம் பெறுவதில்லை மாறாக லாபகரமாதாக, கவர்ச்சிகரமான, ஆடம்பரமானதாக இருக்கின்றதா என்பனவற்றை முதன்மையாகக் கொண்டே பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. வளர்ச்சியின் தன்மை அளவுகோல், சந்தோசத்தின் அளவுகோல், தேவையின் அளவுகோல், விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதில் உள்ள கருதுகோல் மாற்றம் கொண்டதாகவே இன்றைய சமுகம் இருக்கின்றது.

பொருளின் நுகர்வின் மீதான நாட்டம்

ஐரோப்பா, அமெரிக்கா என்றதும் அந்த நாடுகளில் தேனும் பாலும் சுரக்கின்றது என்றவிதமான கருத்தோட்டத்தையும் மாயையுடன் வளர்ந்த சமுதாயத்தில் இருக்கின்ற நுகர்வின் ரசனை என்பது மிகவும் சிக்கலாத் தான் இருக்கின்றது. அத்துடன் மாற்றுச் சமுதாயம் என்பது ஒவ்வொரு சிந்தாந்தத்திற்கு மற்றைய சித்தாந்தத்தில் இருந்து மாறுபடும் அதற்கேற்றால் போல்தான் அவை பிரச்சாரங்களை மேற்கொள்ளும் - அதேபோல் எதிர்ப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளும், எமது நாட்டில் சோசலிசம் என்றால் தனிமனிதனுடைய ஆவல்களை பூர்த்தி செய்யமுடியாத, தனிமனிதர்கள் தமது தேவைகளுக்காக எந்த உபயோகப் பொருட்களையும் வைத்திருக்க முடியாத ஒரு சமூக அமைப்பு என பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் முக்கியமாக தனிநபர்கள் எந்த சொத்தையும் வைத்திருக்க முடியாத என்ற பிரச்சாரம் மக்களிடையே பதிந்துள்ளது. எமது சமூகத்தின் தன்மையில் இருந்து உதாரணத்தை எடுத்து விளக்கப்படுத்தும் போது இலகுவாக பரிந்து கொள்ள முடியும். நாம் கார் வைத்திருக்க முடியாது, விரும்பிய உடுபிடவை தேர்வு செய்து உடுத்த முடியாது என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சோசலிசத்தில் மனிதனுடைய தேவையை முதன்மைப்படுத்துதலும், அவர்களின் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுமாகும்.

சோசலிச பொருளாதார அமைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்த பணம் படைத்தவர்களின் அதிகாரத்தில் இருக்கும் சக்திகள், இன்று அழிவில் இருந்து காப்பாற்ற மாநாடு கூட்டுகின்றன. முன்னர் நுகர்விற்கு அடிமையாகல் இருப்பதற்கும் பெரும் பான்மையான மக்களின் விமோசத்திற்கும் ஆதரவாக சித்தாந்தத்தின் வழியில் இருந்து கருத்துக் கூறியபோது இழிந்து கூறிய அதே சக்திகள் அழிவில் இருந்து பாதுகாக்க இன்று மாநாடு கூடினாலும் இவர்களால் அழிவில் இருந்து இந்தச் சமூகத்தைக் காப்பாற்ற முடியாது. இவர்கள் தமது உற்பத்தியை மக்களின் தேவையை கணக்கில் எடுக்காது கவர்ச்சிகரமான பொருட்கள் ஆடம்பரப் பொருட்கள் என்ற பெயரிலும் சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரிலும் இயற்கை வளங்களை சூறையாடுபவர்கள் பணம்படைத்த நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் தமது இலக்கை அடைவதற்காக அனைத்துத் தந்திரோபாயத்தையும் செலவளிக்கின்றனர்.

இன்றைய உலகம் என்பது நுகர்வைத் தான் முன்னுக்கு நிறுத்துகின்றது. அதனால் நுகர்வைப் பாதுகாப்பது முக்கியமாகின்றது. நுகர்வின் அதிகரிப்பை கூட்டுவதற்கு என்றே விளம்பரங்கள் இருக்கின்றன. இந்த விளம்பரங்கள் மனிதரிடை பலத்த இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் அதன் பிடியில் இருந்து மீள்வது இலகுவானதாக இருப்பதில்லை. விளம்பரத்துக்கு என்றே எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாக்களை. டொலர்களை பெரும் பணம் படைத்த உள்நாட்டு, சர்வதேச நிதிநிறுவனங்கள் செலவளிக்கின்றன. இந்த விளம்பரங்கள் குழந்தைகளையும், மத்திய தர வர்க்க குடும்பங்களை முதலில் கவருகின்றன. இந்த நிறுவனங்கள் செய்கின்ற பிரசார யுக்தியினால் பலியாகின்ற மக்கள் உழைப்பின் பலனாக பெற்ற பணத்தை மறுபடியும் அந்த நிறுவனங்களின் லாச்சிப் பெட்டிக்குள் தான் செல்கின்றது. இந்த பலத்த நிறுவனங்கள் அரசியல் திட்டங்களை தீர்மானிக்கும் சக்தியில் இருப்பதனால் இயற்கையைப் பாதுகாக்கவும், பாட்டாளி வர்க்க நலனைப் பாதுகாக்க முடியாது உள்ளது. ஏனெனில் நுகர்வைக் கொள்வது வசதிபடைத்த மக்கள் கூட்டம் பாட்டாளி வர்க்கமோ ஒரு நேரச் சோற்றிற்கு அவதிப்படுகின்றனர். சிறுபான்மை மக்களின் நலனைப் பாதுகாத்துக் கொள்ள தேவையை பூர்த்தி செய்ய இயற்கையின் பெரும் பகுதி பாழாக்கப்படுகின்றது. இதனால் குறிப்பிட்ட விகித சனக் கூட்டத்தின் தேவைக்காக பெரும்பான்மை மக்களின் நலன் பாதிப்படைகின்றது.

நுகர்வின் மோகத்தை வளர்ப்பதும், ஆடம்பரச் சிந்தனையோட்டத்தையும் அதன்மீதான மாயையை வளர்ப்பது பணம்படைத்தவர்களின் சித்தாந்தமே. இந்தசிந்தாந்தத்தின் தாக்கம் என்பது ஆள பதிந்துள்ளது. இயற்கையை பாதுகாக்கும் முழுச் திறமையும், சக்தியும் பாட்டாளி வர்க்க சிந்தாந்தத்திற்கு உண்டு அதுவே இயற்கையை பாதுகாக்கக் கூடிய வல்லமையும் இருக்கின்றது.

எமது நுகர்வுத் தேவைகளின் பால் எமது நாட்டத்தை வைத்து அல்ல. எங்கே இயற்கையை பாதுகாக்க எமது கருத்தைச் செலவளித்துக் கொண்டால் அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டால் எமது வாழ்க்கையில் மண்விழுந்து விடும் என்ற நிலையில் இருந்து கொண்டு முடிவெடுத்தல் ஆகாது இயற்கையின் அழிவைத் தடுப்பதற்கு இயற்கையின் விதியின் நிலையின் கீழ் இருந்து தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்

--------------11081999

(26.05.2000)

 

சிம்பாவேயில் வர்க்கப் போராட்டம்!

சிம்பாவேயில் கடந்த மாதங்களாக பெரும் பண்ணையாளர்களான வெள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. அந்நாட்டில் மூன்றில் இரண்டுபகுதி நிலத்தை சொந்தமாகவும், பெரும் செல்வந்தர்களாகவும், வசதியானவர்களாக இருப்பவர்களுமான வெள்ளையர்கள் மீது தமது வர்க்க பாசத்தினை வெள்ளையர்கள் தேசங்கள் பல வழிகளில் வெளிப்படுத்துகின்றன. இவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படியும், நிறுத்தப்படாத நிலையில் உதவிகளை நிறுத்தியும் இருக்கின்றன. சிறு, கூலி விவசாயிகளின் ஆத்திரத்தை அந்நாட்டு ஜனாதிபதி தனது நலனுக்காக பாவிக்கின்றார் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இத்தாக்குதல் மூலமாக சில வெள்ளையர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன, இத்துடன் சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இங்கு நிலப்பிரச்சனை பற்றிய பிரச்சனையா அல்லது அரசியல்வாதிகளின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சனையா அல்லது வெறும் வெள்ளையர்கள் மீதான தாக்குதல் மாத்திரம் தானா?

கொலனியாதிக்கம் 1893 இல் பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்டது. (Cecil John Rhodes) சிசில் என்பவர் தலைமையில் வெள்ளையர் தமது ஆட்சியை நிலைப்படுத்தினர். கொலனித்துவ காலத்தில் மக்கள் தமது இயற்கையை அண்டிய வாழ்ந்த மக்கள் மெதுமெதுவே செயற்கையான முறையில் தமது நிரந்தரமாக வாழ்க்கை இழந்து விட்டு நகரங்களுக்கும், பெரும் பட்டினங்களுக்கும் குடிபெயர்ந்து தமது உடலுழைப்பை விற்றுப் பிழைக்கும் நிர்க்கதியாகிய நிலைக்கு உள்ளாகத் தொடங்கினர். அன்று தொடக்கம் இன்று வரை தமது வறுமையை அனுபவித்து வரும் (நமது தேசத்தில் மலையக மக்கள் இதற்கு நல்ல உதாரணம்) இம்மக்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தும் வறுமையை அனுபவித்து வருகின்றனர்.

கறுப்பர்களின் வேர்வையிலும், குருதியிலும் தமது சுகவாழ்வை உருவாக்கிக் கொண்ட வெள்ளை பண்ணைக்காரர்கள் இன்று தமது சொத்தைப் பாதுகாக்கும் பொருட்டு போராடிக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் தமது குடியிருப்புக்களை எத்தனையோ இலட்சக்கணக்கான கறுப்பர்களின் சமாதி மேல்தான் தமது கோபுரங்களையும், மாடமாளிகைகளையும் கட்டி இருக்கின்றன. இவர்கள் இன்று தமது சொத்து என உரிமை கொண்டாடுவது இன்றைய கறுப்பர்களின் மூதாதேயர்களின் உழைப்பினால் உருவாகிய வளங்களையேயாகும்.

கொலனித்துவ காலத்திற்கு முன்னர் நிலங்கள் எல்லாம் பொதுமையாகவே இருந்திருக்கின்றது. பொருளாதாரம் வளர்ச்சியடையவும், இதன் மூலம் மேலதிக உழைப்பினால் உருவாகிய செல்வத்தினாலும் சொத்துக்கள் உருவாக்கப்படுகின்றது. இதேபோல நிலங்களைகளையும் தமக்கிடையே உருவாகும் போட்டியினை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு எல்லைகளையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு தனிச் சொத்துரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படையாக தனிச்சொத்துரிமை என்ற கொள்கைப்பாடும், அதன் கொள்கை வழி அரசும் உறுதுணையாக இருக்கின்றன.

விடுதலைப் போராட்டம் அதன் தலைவரான (Mugabe) முகாபே தலைமையில் விடுதலைப் போராட்டம் நடத்தினர். இவர்கள் 1980 ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெற்றனர். அன்று தொடக்கம் அந்நாட்டின் தலைவராக இருந்து வருகின்றார். ஆபீரிக்க நாடுகளில் விடுதலைப் போராட்டத்திற்கு அன்றைய சோவியத் ஒன்றியம், சீனம் ஆகிய நாடுகள் உதவி வந்தன. ஆபீரிக்க நாடுகளின் கொலனிய எதிர்ப்பிற்கு எதிராக இருந்த சக்திகள் மார்க்சீய சிந்தனையை தமதாக்கிக் கொண்டர் எனினும் இவர்கள் கொண்ட மார்க்சீயம் ஆபீரிக்க மண்ணிற்கு ஏற்றவாறான மார்க்சீயம் என பிரகடனப்படுத்திக் கொண்டனர். கடந்த காலப் போராளிகள் ஆட்சிக்கு வந்தபின்னர். முன்னர் கொண்ட கருத்தில் இருந்து விலகிக் கொண்டதை தற்கால அனுபவங்கள் காட்டி நிற்கின்றன.

விடுதலை அடைந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய நிலச்சீர்திருத்தம் அல்லது நிலப்பங்கீடு கடந்த 20 வருட காலங்களாக பின்போடப்பட்டிருந்த நிலப்பிரச்சனை இன்று மறுபடியும் தலைதூக்கியிருந்திருக்கின்றது. பண்ணையாளர்களிடம் இருக்கின்ற நல்ல கனிந்த நிலங்கள் அவர்களிடம் இருந்து புரட்சியின் போது பறித்தெடுப்பதே புரட்சிகர காலங்களில் வழமையான ஒன்றாகும். ஆனால் கடந்த 20 வருடங்களாக விடப்பட்டு வந்ததை போராட்ட காலங்களில் இருக்கின்ற சக்தி பற்றி போராடும் காலங்களில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை வரலாறு சுட்டி நிற்கின்றது. போராடும் காலங்களில் சோசலிசம் கம்யூனிசம் என்று கூறிப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள், சர்வதேச தொழிலாளர்களிடம், மனிதாபிமானிகளிடம் உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள், உழைக்கும் மக்களை தமது இலக்குக்காக அணிதிரட்டிக் கொண்டவர்கள் போராட்டம் வெற்றி பெற்ற பின்னர் உழைக்கும் மக்களை கைவிட்டதைத் தான் சிம்பாவே அனுபவம் காட்டி நிற்கின்றன.

நிலத்தை எவ்வாறு பங்கிடுவது என்பது பற்றி பல முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. நிலத்தை எந்தவித நட்டஈடும் கொடுக்காது அவற்றை பறிமுதல் செய்வது. அவற்றிற்கு நட்டஈடு கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்வது. இதில் இரண்டாவது முறைக்குத் தான் பலத்த ஆதரவு இருக்கின்றது. இவ்வாறு செய்வதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. 1998 நிலங்களை பங்கிடுவதற்கு இசைந்து சலுகைப் பணம் கொடுக்க முன்வந்திருந்த உதவிவழங்கும் நாடுகளும், பிரித்தானியாவும் இவ்வளவு காலமும் ஆறப்போட்டிருந்தது. ஆனால் இன்று பண்ணையாளர்கள் மீது தாக்குதல் தொடங்கிய பின்னர் மீண்டும் பணஉதவி செய்ய முன்வந்துள்ளது.

நிலத்தை ஆக்கிரமிப்புத் தொடங்கிய பிற்பாடு அண்டைய நாடுகளிலும் இதற்கு ஆதரவான நிலமை தோன்றியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. தென் ஆபீரிக்காவில் ஒரு கணிப்பெடுப்பில் நிலம் ஆக்கிரமிப்புக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்கின்றது. தென்னாபிரிக்காவில் 50 000 குடும்பங்கள் குடியிருப்பிற்கு விண்ணப்பித்திருந்தது. ஆனால் நிர்வாக ஒழுங்கீனம் காரணமாக இழுத்தடிப்பதாக காரணம் கூறப்படுகின்றது. இப்படியாக நிலங்கள் இல்லாதவர்கள் மட்டத்தில் விரோத உணர்வு எழும்பியிருக்கின்றது. அண்மையில் கென்யா நாட்டில் ஒரு பண்ணை 300 தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

மக்களின் எதிர்ப்புணர்வு காரணமாக தென்னாபிரிக்க, நமீபியா, மொசாம்பிக் ஆகியோருடன் சம்பிய அதிபர் நடத்திய மாநாட்டில் எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக உதவி வளங்கும் நாடுகள் தாம் சம்மதித்திருந்த நிதியை கொடுக்கும்படியே கேட்டிருந்தனர். இது வெள்ளையர் தேசத்தினருக்கு சம்மதமான முடிவாக இருக்க மாட்டாது. இத்துடன் இவர்களின் எதிர்ப்பும் நிதி மூலதனத்தை எதிர்க்கின்ற நிலைப்பாடாக உழைக்கின்ற மக்கள் எடுத்துக் கொள்ளவும் கூடாது.

இனத்துவ ஆதரவா? வர்க்க ஆதரவா? என்பது பற்றியும் விவாதங்கள் நடைபெறுகின்றன. சிம்பாவேயில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் வெள்ளையர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும்படி வெள்ளையர்களின் தேசங்கள் கோருகின்றன. இவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் ஐரோப்பியஒன்றியம் தனது படைகளை அனுப்பி ஜேர்மன் (Frankfurter Allgemeine) பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் படைகள் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் எவ்வித முன்னறிப்பும் இல்லாமல் மேற்கு ஆபீரிக்க நாடான செறிலியோனில் தனது பிரித்தானியா விசேட படையை அனுப்பி வெளிநாட்டு பிரஜைகளை வெளியேற்றி இருந்தது. இந்தச் செய்தி உண்மையாகவும் போகலாம் அல்லது பொய்யானதாகவும் இருக்கலாம். ஆனால் வெள்ளையர் தேசங்களில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் எவ்விதமான நிலைப்பாடுகள் எடுக்கின்றனர் என்பதை இங்கு கவனிக்க வேண்டியிருக்கின்றது. வெள்ளையர் தேசத்தவர் வசதிபடைத்த பண்ணையாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்றுதான் பார்க்கின்றனர். இவர்கள் காலங்காலமாக சுரண்டப்படும் மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்ற முடிவிற்கு வரமுடிகின்றது.

பிரேசில் நாட்டிலும் ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவர்களுக்கும் எவ்வித ஆதரவையும் தெரிவித்தாக தெரியவில்லை. பிரேசில் நாட்டில் நிலங்களைக் கூட ஸ்கண்டி நேவிய நாட்டர் சொந்தமாகக் கொண்டுள்ளன. இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் ஆதரித்துக் கொள்ளவார்களா என்பது சந்தேகமே. இங்கு இன்னொரு குறிப்பிடத்தக்க விடயத்தை கவனிக்கக் கூடியதாகவுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சமூக ஜனநாயக கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. சமூக ஜனநாயக கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தை பிரதிநிதித்தவப்படுத்துவதாக கூறப்படுகின்றது. இவ்வாறாக கட்சிகளைக் கொண்ட ஆட்சியாளர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கு நன்மை செய்யாமல் வசதி படைத்த பண்ணையாளர்களின் சொத்துக்களை பாதுகாக்க அதிக அக்கறை கொள்கின்றனர். போராடும் சக்திகளை காடையர்களாக சித்தரிக்கின்றனர்.

சர்வதேச நிறுவனங்கள் பல வெள்ளைப் பண்ணைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. மனித உரிமை அமைப்புக்கள் ஆட்சியாளர்கள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் தேர்தலை உரிய காலத்தில் நடத்தும் படி மனித உரிமை அமைப்புக் கோரியுள்ளது. சிம்பாவே ஆட்சியாளர்கள் தேர்தலை மாத்திரம் கவனத்தில் கொண்டே செயற்படுவதாக குற்றம் சாட்டினர். முகாபேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மோர்கன் (Morgen Tsvangiri) என்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துக் கொண்டார். தான் மேற்கு நாடுகள் பல சிம்பாவே நாட்டின் நடத்தை பற்றி அருவருப்படைவதாக கூறினார். இவர் மேற்குநாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் நாடுதிரும்பிய போதே இதனைத் தெரிவித்தார். சரி இருக்கட்டும் மேற்கு நாடுகள் சிம்பாவே நாட்டின் நடத்தை பற்றி அருவருப்பு அடையும் போது இவர் ஏன் தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைகின்றார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவரும் வறிய நாட்டவர் பலர் மேற்கு நாட்டை ஏங்கித் தவிக்கும் நிலையில் இருந்தும், தமது வர்க்க உடன்பிறப்புக்களிடம் கை நீண்டி நிற்பதையும் இது சுட்டி நிற்கின்றது. ஐ.நாவின் செயலர் கோபி அன்னன் உட்பட பல வன்முறையை நிறுத்தும் படி வேண்டிக் கொண்டனர்.

உலகம் என்பது முன்னரை விட சுருங்கியுள்ளது

சுருங்கியுள்ள இன்றைய உலகத்தில் உயர்ந்த குடியைக் கொண்ட ஒரு கூட்டம் வளர்ந்து வந்திருக்கின்றது. இந்தக் உயர்குலக் கூட்டம் உலகின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த வந்திருக்கின்றது. இந்தக் கழகத்தில் பணம் படைத்தவர்களின் நலைனைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய எந்தச் சக்திகளையும் வரவேற்றுக் கொள்ளக் கூடிய தாராள மனம் கொண்ட இந்தக் கழகமானது, நாளாந்தம் வளர்ந்து கொண்டு வருகின்றது. இந்தக் கழகத்தில் சாதாரண மக்களின் அவலத்தைக் கதைப்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் உலகத்தின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் முரண்பாடு அற்ற வகையில் அந்தக் கழகத்தில் பேசக் கூடிய வல்லமை இருக்குமானால் அவர்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிக்க தகுதி பெற்றவர்களாகின்றனர். இவர்கள் பூகோள ரிதியாக உச்சத்தில் இருப்பவர்கள் இவர்கள் கொடுக்கின்ற பட்டம் நாய்க்கு எலும்புத் துண்டைப் போடுவது போல் ஆகும்.

இந்த எலும்புத் துண்டை காவிக் கொண்டும் பெருமையடித்துக் கொண்டும் வாழு;வதற்கு உலகில் பல நபர்கள் இருக்கின்றனர். இவர்கள் மக்கள் அரசியல் ரிதியில் விழிப்புக் கொள்ளாத நிலையைப் பயன்படுத்தி இருக்கின்ற உலக நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையை நிரந்தரமான நிலையாகக் கொண்டு இதுவே முடிந்த முடிவான உலகில் அங்கீகரிக்கப்பட்ட போக்காக பிரச்சாரம் செய்வதுடன் இந்த நியதியில் இருந்து கொண்டு இருக்கின்ற உலக நியதிக்கு ஊழியம் செய்வர். மேற்குறிப்பிட்ட உலகின் சிந்தனைப் போக்கை விளக்கிக் கொள்வதன் மூலமாக உலகின் பாகங்களில் நடக்கும் சம்பிரதாய நடப்புக்களை விளங்கிக் கொள்ள முடியும்.

போராட்டமுறை பற்றி மேற்குலகம் கொண்ட பார்வை பற்றி முரண்பட்ட கருத்துக் கொண்டுள்ளது. மேற்குலகம் சொல்கின்ற பாதையைத் தான் எல்லோரும் முன்வைக்கின்ற முறையை தற்பொழுது காணக் கூடியதாக உள்ளது. புதிய முறை எனக் கொண்டாலும் நவீன உலகில் புதிய வகையானதாகத் தோற்றம் பெறுகின்றது. ஆனால் இவை புதிய வகை அல்ல மாறாக போராடும் மக்களின் போராட்ட விரும்பை, போராட்டத்தின்பால் கொண்ட பற்றை திசைதிருப்பிக் கொள்வதாகும். இன்றைய போராட்டம் (Chenjerai Hunzui) சென்சராய் என்பவர் தலைமையில் போராட்ட தியாகிகள் என அழைத்துக் கொள்கின்ற அமைப்பை சேர்ந்தவர்களால் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது.

இந்த போராட்ட முறையில் நியாயம் இருக்கின்றது

ஆனால் மேற்கு தொலைத் தொடர்புச் சாதனங்கள் பலாத்காரத்தினால் ஆட்சி மாறுவதையும், ஏற்றுக் கொள்வதையும் எதிர்த்தே பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது. குறிப்பாக ஒரு வெள்ளையர் கொல்லப்பட்டால் பூதாகாரப்படுத்தி பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றன. இங்கு வெள்ளை தோல் மீது கொண்ட பாசம் என்றும் கொள்ளவேண்டியுள்ளது. வெள்ளைப் பாசமும், மறைமுகமான பண்ணையார்கள் என்ற ரீதியில் கொள்ளப்படும் அனுதாபங்களும் சுரண்டும் வர்க்கத்தை சேர்ந்தவையாகும்.

1972 இல் 280 000 வெள்ளையர்கள் வாழ்ந்தனர், இவர்களில் பல மேற்கு தேசங்களுக்கு திரும்பியுள்ளனர். சிம்பாவேயின் 9 மில்லியன் மக்களில் மிகச்சிறுபான்மையினரே 3 இல் 2 பகுதியை நிலத்தை உரிமையாகக் கொண்டுள்ளனர். வெள்ளையர்களின் சிம்பாவே நாட்டின் கடவுச் சீட்டுக்களை ஒப்படைக்கும்படி முகாபே அறிவித்துள்ளார். சிம்பாவே நீதி மன்றம் நிலஆக்கிரமிப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஈழதேசத்தில் இவ்வகையாக நிலப்பிரச்சனை தோன்றுகின்ற போது எவ்வகையான தீர்வை முன்வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி இன்றே ஆய்வினை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இன்று ஆய்வு நிலைகள் வெளிநாட்டு தத்துவங்களையும், கோட்பாடுகளையும் தெரிந்து வைத்திருப்பவர்கள் எமது தேசம் பற்றி தெரிந்து கொள்ளாத நிலை மாற்றப்பட வேண்டும். சீன மேதை ஒருவர், சீன தேசத்து ஆய்வாளர்களைப் பற்றிக் கூறிய போது கிரேக்கம் சித்தாந்தத்தைப் பற்றி தெரிந்து கொண்டு உரைப்பதில் கொடுக்கின்ற நேரத்தை சீனத்தின் தத்துவத்தை படித்து உரைப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்பதை விமர்சித்திருந்தார். இந்தக் கூற்றை ஆழ்ந்து சிந்திக்கத்தான் வேண்டும். போராடுகின்ற தேசத்தின் தத்துவ சிந்தனை நிலையை தெரிந்து கொள்வதன் மூலமே சொந்த நாட்டிற்கான கோட்பாட்டை படைக்க முடியும்.

போராடுகின்ற போதே ஒவ்வொரு தேசமும் சொந்தக் கோட்பாட்டைப் படைத்தல் வேண்டும். இதன் மூலமே எதிர்காலத்தில் எவ்வகையான திட்டங்களை வகுக்க முடியும் என்பது பற்றி போராடுகின்ற சக்திகள் எதிர்காலத்திட்டத்தில் தன்னிறைவு கொள்ள முடியும். இத்துடன் எதிர்காலத்தில் போராட்டச் சக்திகள் உழைக்கும் மக்களுக்கு எதிரான பொருளாதார கொள்கையை மேற்கொள்ளும் போதும், போராட்டச் சக்திகள் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக் கொண்டு பதவியைப் பிடித்தபின்னர் பணக்கார வர்க்கத்தின் நலனின் பால் கொண்ட பொருளாதார திட்டத்தை மேற்கொள்ளும் போது எதிர்த்துப் போராடவும் முடியும்.

26052000 தேசபக்தன் இதழுக்காக


 

நோபல் பரிசு?

இந்தக் கட்டுரை 1999 அளவில் எழுதப்பட்டது. இன்றைய காலத்தை ஒட்டி மீளவும் பதிவிடப்படுகின்றது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் எனக் கூறிக் கொண்டு ஏகாதிபத்தியம் தலிபான், ISIS, போக்ராம் பயங்கரவாதிகள் என்ற உருவாக்கிக் கொண்டு மறுபுறத்தே அகிம்சை என்றும் கள்ளக் குழந்தையை மயன்படுத்தி அமைதிவழியைப் போதிக்கின்றது. மக்கள் திரள் போராட்டங்களுக்குப் பதிலாக தனிநபர்சார்ந்தும், லொபிகளை உருவாக்கி அதனூடாக போராட்ட அமைப்புக்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கின்றன. -------------

 

நோபல் பரிசு? 1999

உலகம் என்பது முன்னரை விட சுருங்கியுள்ளது. சுருங்கியுள்ள இன்றைய உலகத்தில் உயர்ந்த குடியைக் கொண்ட ஒரு கூட்டம் வளர்ந்து வந்திருக்கின்றது. இந்தக் உயர்குலக் கூட்டம் உலகின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த வந்திருக்கின்றது. இந்தக் கழகத்தில் பணம் படைத்தவர்களின் நலைனைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய எந்தச் சக்திகளையும் வரவேற்றுக் கொள்ளக் கூடிய தாராள மனம் கொண்ட இந்தக் கழகமானது, நாளாந்தம் வளர்ந்து கொண்டு வருகின்றது. இந்தக் கழகத்தில் சாதாரண மக்களின் அவலத்தைக் கதைப்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் உலகத்தின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் முரண்பாடு அற்ற வகையில் அந்தக் கழகத்தில் பேசக் கூடிய வல்லமை இருக்குமானால் அவர்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிக்க தகுதி பெற்றவர்களாகின்றனர். இவர்கள் பூகோள ரிதியாக உச்சத்தில் இருப்பவர்கள் இவர்கள் கொடுக்கின்ற பட்டம் நாய்க்கு எலும்புத் துண்டைப் போடுவது போல் ஆகும்.

இந்த எலும்புத் துண்டை காவிக் கொண்டும் பெருமையடித்துக் கொண்டும் வாழு்வதற்கு உலகில் பல நபர்கள் இருக்கின்றனர். இவர்கள் மக்கள் அரசியல் ரிதியில் விழிப்புக் கொள்ளாத நிலையைப் பயன்படுத்தி இருக்கின்ற உலக நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையை நிரந்தரமான நிலையாகக் கொண்டு இதுவே முடிந்த முடிவான உலகில் அங்கீகரிக்கப்பட்ட போக்காக பிரச்சாரம் செய்வதுடன் இந்த நியதியில் இருந்து கொண்டு கடந்த காலத்து கூட்டணியினர் போல் இருக்கின்ற உலக நியதிக்கு ஊழியம் செய்வர். மேற்குறிப்பிட்ட உலகின் சிந்தனைப் போக்கை விளக்கிக் கொள்வதன் மூலமாக உலகின் பாகங்களில் நடக்கும் சம்பிரதாய நடப்புக்களை விளங்கிக் கொள்ள முடியும்.

எல்லையற்ற வைத்தியர்கள்

1999 ம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசு Medicins sans frontiers என்ற வைத்திய உதவி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இவர்கள் 2500 ஊழியர்களையும் 15 000 உள்ளுர் ஊழியர்களையும் கொண்டு 80 நாடுகளில் சேவை செய்கின்றனர். இவர்கள் இன்னல்படுகின்ற மக்களிடையே விரைந்து சென்று சேவை புரிகின்றனர். இவர்கள் சம்பளமாக அடையாளத்திற்கு பெறும் இவர்கள் தமது உயிரைக் துச்சமென மதித்து வேலைசெய்கின்றனர். இந்த அமைப்பினர் இலங்கையிலும் இருந்து வேலை செய்கின்றனர். வைத்தியக்குழுவிற்கு கொடுக்கப்பட்ட பரிசினை பல சக்திகள் வரவேற்றுள்ளன. இந்தப் பரிசு சமூக சேவை செய்ய முன்வருபவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அங்கீகாரம் எனவும், இதன் மூலம் பலர் இணைந்து கொள்வர் எனவும் கருத்துக் கூறப்படுகின்றது. பரிசுத் தொகையாக 7.6 மில்லியன் (சுவீடன் குரோணர்) கொடுக்கப்படுகின்றது. நோபல் பரிசுக் குழுவானது பிரச்சினைக்கான காரணத்தையும், பொறுப்பானவர்களை அம்பலப்படுத்துவதிலும், கருத்து உருவாக்குவதிலும், தேவையான போது உடன் களத்தில் நிற்பவர்கள் இவர்களே என்ற காரணத்தினால் இப்பரிசு கொடுக்கப்பட்டதாக காரணம் கூறினர்.

இது அல்பிரட் நோபல் நினைவாக கொடுக்கப்படும் பரிசானது அவரின் முதலீட்டில் இருந்து பெறப்படும் லாபத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. நோபல்பரிசுக் குழுவானது ஆயுதம் தயாரிக்கும் தொழிலியே முதலீடு செய்துள்ளனர். இதில் இருந்து பெறப்படும் வட்டியில் இருந்தும், லாபத்தில் இருந்தும் தான் நிதி பெறப்படுகின்றது. இந்தப் பரிசிற்கு நிதி ஆயுத விற்பனையால் பெறப்படுவதாக இருந்த போதிலும், இது நீதிக்கு முரணாக இருப்பினும் இது இன்றைய உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இதனை விமர்சிப்பவர்களே எதிரிகளாக கணிக்கப்படுகின்றது.

நோபல் பரிசு சமாதானத்திற்கான பாடுபடுபவர்களுக்கு மாத்திரம் அல்ல விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் போன்றவற்றிற்கும் கொடுக்கப்படுகின்றது. கடந்த பல வருடங்களாக அரசியல் கருத்தைக் கொண்ட கொண்டவர்களை பிரசித்தப்படுத்தும் பொருட்டே சமாதானப் பரிசு வழங்கப்பட்டு வந்தது. முதலில் 1901 இல் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஸ்தாபகரான (Henri Dunant) கென்றி என்பவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்குப் பின்னர் இம்முறை பொது அமைப்பு ஒன்றிற்கு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் சமாதானத்திற்கான நோபல் பரிசு சர்ச்சைக்குரியதாகவும், பிரசித்தி பெற்றதாகவும் இருக்கின்றது. இந்த ஆண்டும் சீனர்களுக்கு கொடுக்க முனைவதை தடுக்கும் பொருட்டு சீன அதிகார வர்க்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டது. இரண்டு எதிர்ப்புரட்சி உறுப்பினர்களை ஜனநாயகத்திற்குகாக போராடுவதாகவும் அவர்களை பிரசித்தி பெறவைப்பதற்கும,; அவர்களின் கருத்துக்கு ஆதரவான கருத்து கணிப்பை மேற்கொள்வும் கூடும் என சீனா எதிர்ப்புத் தெரிவித்து இருந்தது. எனினும் இம்முறை எந்த வித சிக்கல்களை ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டாலும் மிக ஆபத்தான கருத்தை ஆளப்படுத்த இதன் மூலம் பாதை வழிவகுத்துள்ளனர்.

MSF ஆனது 1971 இல் வைத்தியர்களாலும், பத்திரிகையாளர்களாலும் உருவாக்கப்பட்டதாகும். அன்றைய நேரத்தில் சோவியத், அமெரிக்க வல்லரசுகளுக்கிடையே நடைபெற்ற ஆதிக்கப் போட்டியில் ஐ.நா மக்களின் உரிமைகளை அவனிக்கத் தவறியது என்ற முறைப்பாட்டிலும் எவ்வித அரசியல் கருத்து பேதம் பார்க்காமல் தேவையான போது அல்லல்படும் நிலையில் இருக்கின்ற மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதாகும். இந்த அமைப்பை உருவாக்கிய வேளை (Biafra - Nigiria) பயாபிராவில் ஏற்பட்ட பட்டினியால் வாடிய மக்களிடையே உதவி வேலை செய்தவர்கள் பலரும் இதில் அடங்கியிருந்தனர். அன்றைய காலத்தில் இவ்வாறான நோக்கத்தைக் கொண்ட அமைப்புக்கள் இல்லாத வேளையில் பேனாட் (Bernard Kouchner) என்பவரால் நிறுவப்பட்டதாகும். பிற்காலத்தில் பிரான்ஸ் சுகாதார மந்திரியாக இருந்த இவர் தற்பொழுது கொசவோவிற்கான ஐ.நாவின் தலைமை நிர்வாகியாக பணிபுரிகின்றார்.

MSF நடுநிலையானது, சுயாதீனமான அமைப்பு எனக் கூறப்பட்டாலும், இவர்கள் தேவையான போது சம்பந்தப்பட்ட இடத்தில் கருத்து உருவாக்கத்தையும், கொடுமைகளை வெளிக்கொணர தொடர்பு சாதனங்களைப் பாவிக்கத் தவறுவதில்லை எனக் கருத்துக் கூறப்படுகின்றது. பிரச்சினைக்குரிய நாட்டில் இறங்கும் போது ஆட்சியாளர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தை மேற்கொள்ளாமலே களத்தில் இறங்கிவிடுவர், மற்றைய அமைப்புக்களைப் போல் அல்லாமல் உயிருக்கு உத்தரவாதம், மற்றும் செயற்பாட்டில் தடையின்மை போன்றவற்றை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை செலவளிக்க மாட்டார்கள். மற்றைய உதவி நிறுவனங்கள் விலையுயர்ந்த வாகனங்கள் உட்பட வசதிபெற்ற நிலையில் இருக்கின்ற போது இவர்கள் துவிச்சக்கர வண்டியைப் பாவித்தே தேவையான இடங்களுக்கு செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த அமைப்பினர் மற்றைய நிறுவனங்கள் சர்ச்சைக்குரிய இடங்களுக்கு செல்ல முன்னர் MSFஇனர் வெள்ளைநிற சீருடையுடன் களத்தில் பிரசன்னமாயிடுவர். இவை மாத்திரம் அல்ல மற்றைய அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்கள் குளிர் காற்று பெறும் அறையில் இருந்து தான் தமது கடமைகளைச் செய்வர் இவர்கள் அவ்வாறு அல்ல எவ்வித வசதியையும் பாராமல் சாதாரண நிழல் தட்டிகளில் இருந்து கொண்டே வேலை செய்வர். இவ்வாறான நடவடிக்கைகள் மற்றைய உதவி நிறுவனங்களுக்கு ஆத்திரத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியுள்ளதாக இவர்களைப் பற்றி செய்திகள் புகழ்ந்து எழுதுகின்றன.

இம்முறை பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பிற்கு பரிசு வழங்கப்பட்டதாக பலராலும் பாராட்டப் பெறுகின்றது. ஏன் பாராட்டப்படுகின்றது என்பது பற்றியும், பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றது என்பது பற்றி நோக்குவது அவசியமாகின்றது.

பரிசு யாருக்கு வழங்கப்படுகின்றது?

பொது வேலை செய்கின்ற அமைப்புக்கள், மற்றும் மக்களின் விமோசனத்திற்காக போராடுகின்ற சக்திகளை எடுத்துக் கொண்டால் பல தரத்தில் தமது உயிரை துச்சமென மதித்துப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த அமைப்புக்களின் தியாகத்தை ஒரு பரிசு கொடுப்பதன் மூலம் தான் இவர்கள் செய்கின்ற தியாகம் அங்கீகரிக்கப்படும் என்றால், அத்துடன் பரிசு கிடைக்கவில்லை என போராட்டங்கள் நடத்துவதில் இருந்து விலகிவிட்டால் உலகில் ஒரு போராட்டங்கள் நடைபெற்றிருக்க மாட்டா. எந்தப் போராட்டங்களும் நோபல் பரிசு கிடைக்கும் என்ற காரணத்திற்கான போராடுவது இல்லை. எந்தச் சக்தியும் தனது ஒடுக்குமுறை, தனது தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு போராடி வெற்றி பெற முனைகின்றது. இவ்வகையான போராட்டங்கள் பல வழிமுறைகளைக் கொண்டு அமைந்து விடுகின்றது.

போராட்டங்கள் தனிமனித பயங்கரவாதம், ஆட்கடத்தல், விமானங்கள் கடத்தல் போன்று, வெகுசன எழுச்சிப் போராட்டங்களான கடையடைப்பு, கர்த்தால், பகிஸ்கரிப்பு என்பனவும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அடக்க முற்படும் கருவியாலேயே ஒடுக்குமுறையை எதிர்க்கும் ஆயுதத்தினால் எதிர்த்தும் போராட்டம் நடைபெறுகின்றது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது பல போராளிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமது சமூகக் கடமையை முடித்துக் கொள்ள போராட்ட களத்தில் இறங்கிப் போராடுகின்றனர்.

உலகில் பெரும்பான்மையான நாடுகளில் பொதுவுடமைவாதிகளும், தேசிய பக்தர்களும் உண்மையாக தமது விடுதலைக்காக போராடி வந்துள்ளனர். இவர்கள் போராடும் காலத்தில் மழையிலும், வெயிலிலும், தம்உயிரையும் பாராமல் போராடுகின்றனர். இவர்கள் ஒருவரையாவது அங்கீகரித்தது கிடையாது. இவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைத்துக் கொள்கின்றனர். இவர்களோ தம்முயிரை துச்சமென மதித்துப் போராடுபவர்கள். இவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஒடுக்குகின்றனர். கொலம்பியாவில் போராடுகின்ற போராளிகளை ஒடுக்கு அமெரிக்க இராணுவம் உதவுகின்றது. இலங்கையில் தேசிய இனத்தின் போராட்டத்தை ஒடுக்க ஆயுதங்கள், பயிற்சிகள் கொடுத்து உதவுகின்றனர். ஆனால் பணம் படைத்த நாடுகளுக்கு திடீரென பாசம் வரும், வரும் பொழுது அவர்களை அங்கீகரித்து உதவிகள் கொடுப்பர். கொசவேவில் அந்த மக்கள் மீது திடீரென பாசம் வந்த போது அந்த மக்களைப் பாதுகாக்கவென யூக்கோஸ்லாவியா மீது குண்டு மழை பொழிந்ததுடன், கொசவோ விடுதலைப் படையை (UCK) அங்கீகரித்தனர். அவர்களுக்கு ஆயுதமும், நிதிஉதவியும் செய்தனர். போராட வேண்டுமா? போராடக் கூடாதா என்று கூட இவர்களிடம் கேட்டுத்தான் போராடவேண்டும் என்ற நிலையை உருவாக்குவது போல நடந்து கொண்டனர்.

இவற்றிற்கு நேர் எதிரே போராட்ட களத்தில் போராடிய பல போராளிகள் அவமானப்படுத்தப்பட்டனர். அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தி நீதியை நிலைநாட்டப்படுவதாக பூச்சாண்டி காட்டும் பொருட்டு அவர்களை நீதி மன்றத்தில் ஏற்றி சிறைவைத்தனர். தமக்கு தேவையான நபர்களுக்கு பரிசுகளை கொடுத்து விட்டு மற்றவர்களை தமது (Club) கழகத்தில் சேராதவர்கள் என்ற நிலையில் அவர்களை ஒதுக்கி வைத்தனர். இவற்றை நீரூபிக்க வரலாற்றில் பல சம்பவங்கள் நடைபெற்றுத்தான் இருக்கின்றது. அரபாத், மண்டேலா, கார்லோஸ் பேலோ, ராமோஸ் கோர்த்தா, கியூம், ரிம்பிள் போன்றவர்களுக்கு பரிசுகளை கொடுத்து விட்டு போராளிகளை அவமதித்தனர்.

பலஸ்தீனத்தின் விடுதலைக்கான விமானக் கடத்தலை மேற்கொண்ட அந்திரா சுகைலாவினை சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விமானக் கடத்தலில் குற்றவாளி எனக் கைது செய்து அவரை ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவருக்கு சிறைத் தண்டனை கொடுத்தனர். அந்த நேரத்தில் அவரின் விடுதலை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவர் பலஸ்தீன அரசினால் கைவிடப்பட்ட ஒரு போராளியாக ஆக்கப்பட்டார்.

அயர்லாந்தில் சமாதானத்திற்கான போராடிய சக்திகளுக்கு நோபல் பரிசு 1998 இல் கொடுக்கப்பட்டது. அப்போ (Terrry Adams) அடம்சிற்கு பரிசு கொடுக்கப்படவில்லை. இவர்கள் திட்டமிட்டே அடம்ஸினை ஒதுக்கினர். இவர்கள் சமாதானத்திற்கு ஒத்துழைக்காவிடின் அயர்லாந்தில் சமாதானத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. இவரை ஒதுக்கியதை பலர் கண்டித்திருந்தனர். அத்துடன் பரிசளிப்புக் குழுவிற்கு அயர்லாந்துப் பிரச்சனையின் தாற்பரியத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என விமர்சிக்கப்பட்டது. இது ஒரு புறமிருக்க இவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை அங்கீகரிக்கக் கூடாது என்ற ஏகாதிபத்தியங்களின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு தான் பரிசு கொடுக்கப்படவில்லை. வறிய நாடுகளில் இவர்களில் இருப்பதைப் போலவே ஏகாதிபத்திய நாடுகளிலும் தேசிய இனப்பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான போராட்டங்களை தம்மிடத்தில் வளர்ந்து விடும் என்ற பயமும் ஒரு காரணம் எனலாம்.

மண்டேலாவிற்கு பரிசு கொடுக்கப்பட்டது, ஆனால் தீவிரவாதியான வின்னி மண்டேலாவை திட்டமிட்டு ஒதுக்கினர். இனத்துவ ஆட்சியாளர்கள் சரணடைந்த பிற்பாடு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட கறுப்பின மக்கள் ஆட்சியில் உண்மைக் கமிசன் உருவாக்கப்பட்டது. அந்தக் கமிசனில் கடந்த காலத்தில் குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் படியான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வின்னி மண்டேலாவை தென் ஆபீரிக்க அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்க வேண்டும் என்ற செயற்பாட்டை நடத்தி முடித்தவர். அவர் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டன, அவர் கடந்த காலத்தில் குற்றம் செய்வது பற்றி பல பிரச்சார முனைப்புக்களும் சர்வதேசம் எங்கும் நடைபெற்றது. இறுதியில் வெற்றியும் பெற்று மேற்குலகம் தமக்கு இசைவான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொண்டது.

அண்மையில் கிழக்கு தீமோரில் இறங்கிய அன்னியப் படையினர் போராளிகளின் ஆயுதங்களை களையவேண்டும் என முடிவெடுத்தனர். இந்தப் போராளிகள் போராடிய காலத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என அழைத்துக் கொண்ட ‘சர்வதேச சமூகம்‘ இன்று அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது போல் அவர்களின் ஆயுதங்களை களைவதில் மாத்திரம் அக்கறைப்படுகின்றனர். அந்தப் போராளிகள் போராடிய படியால் தான் சமாதானப்படையை அனுப்பிய பெருமை வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏகாதிபத்தியவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் அமைதியாக போராடிய படியாலும், இனத்தின் உரிமையை வாக்கெடுப்பின் மூலம் சட்டரிதியாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலமுமே பெற்றுக் கொண்டதாகவும் இலங்கை போன்ற தேசத்தில் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கைச் சக்திகள் விரும்பவும் கூடும். சமாதானப் படையைக் கூட அனுப்ப வேண்டும் என்று விரும்பவும் கூடும் இவைகள் ஆபத்தானவை என்பதை அந்தச் சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அவுஸ்ரேலியா தலைமை தாங்கி சமாதானப்படை இறங்கியதே ஏகாதிபத்தியங்கள் தாம் உலக பிரஜைகளுக்கு அணிவிக்க முற்படும் (Uniform) சீருடையை சிறப்பாக அணிவிக்கக் கூடிய பிரதிநிதி என்பதனால் ஆகும்.

 

புதிய போக்கு

இந்த ஆண்டு கொசவோ மக்களைக் மிலோசவிச்சிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு நேட்டே இராணுவ ரிதியாக தலையிட்டது. உலகின் பலபாகங்களில் மக்கள் அழிக்கப்படுகின்றார்கள், வெவ்வேறு ரக ஆட்சியாளர்களால் காலங்காலமாக மக்கள் இன்னல் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் புதிதாக அமெரிக்காவின் தலைமையிலான ஐரோப்பிய போன்ற பணவலிமை கொண்ட நாடுகள் கொசவோவில் மாத்திரம் தான் அதுவும் 1999 இல் தான் தேசிய இனப்பிரச்சனையும், இனஅழிவும் மேற்கொள்ளப்படுவதாக கண்டு பிடித்தவர்கள் என்பது போல் நேட்டோவானது ஐக்கிய நாடுகளின் ஒப்புதல் இன்றியே சுதந்திர நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர் வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஒரு நாட்டின் இறைமையை விட மக்களின் அழிவைப் பாதுகாப்பதும், அவர்களின் உரிமையைப் பாதுகாப்பது முக்கியமானதாக கருத்து முன்வைக்கப்பட்டது. இவ்வாறே அமெரிக்காவும், சககூட்டாளி ஏகாதிபத்திய நாடுகளும் கூறிக் கொண்டாலும், உண்மையில் ஏகாதிபத்தியங்களின் பொருளாதார, அரசியல் நலனின் அடிப்படையில் அமைந்து விடுகின்ற சதித் திட்டத்தின் வகையைச் சார்ந்ததே கொசவோவின் நலன்பால் கொண்ட அக்கறையாகும். பொருளாதார நலனானது யு+க்கோஸ்லாவியாவில் ஏற்பட்ட பல மிருகத்தனமான சம்பவங்களின் பின்னால் இவர்களின் சதி மறைக்கப்பட்டுள்ளது. மாறாக பழைய மற்றும் எஞ்சிய யூக்கோஸ்லாவியாவில் ஏற்படுகின்ற குழப்ப நிலையில் பணம்படைத்த நாடுகளின் முகமூடி கழராமல் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஐ.நாவின் ஒப்புதல் இல்லாமல் செய்ததை நியாமும் கற்பிக்க இலகுவாக முடிகின்றது.

இவ்வாறு நியாயம் கற்பிப்பதன் ஒரு பகுதியாகவும், முன்னர் இருந்த எதிர்ப்புக்களை தனக்கும் இன்னும் சாதகமாக மாற்றும் பொருட்டும் கொசவோ அல்ல எந்த பிராந்திய இந்த பணம் பலம் பொருந்திய நாடுகளுக்கு அரசியல், பொருளாதார, இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகின்றதோ அந்த பிராந்தியத்தில், தேசத்தில் எவ்வித இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என்பதற்கான ஒரு கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியாகின்றது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகவே MSF அமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசும், அங்கீகாரமும் ஆகும்.

MSF அமைப்பினர் சிறிய உதவி நிறுவனமாக இருக்கின்றபோது எந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் பிரச்சனை நடைபெறுகின்ற நாடுகளில் அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் ஒரு நாட்டினுள் நுழைகின்றது. (எவ்வகையில் சாத்தியமாகின்றது ?) இந்த உதாரணத்தைக் காட்டி நேட்டோ போன்ற பணக்கார நாடுகளின் சந்தையைப் பாதுகாக்கும் உபகரணமாகச் செயற்படுகின்ற இராணுவ அணியை சுதந்திர தேசத்தில் நுழைவதை ஏற்றுக் கொள்ளவோ, வரவேற்கவோ முடியாது.

இன்று சர்வதேச நாடுகள் பலவற்றில் ஐ.நாவின் போர்வையில் சமாதானத்தை நிலைநாட்டுகின்றனர் என்ற பெயரிலும் இன்னெரு நாட்டில் படைகளை அனுப்பி நுழைந்திருக்கின்றன. முன்னர் ஏகாதிபத்தியங்களைத் தவிர அண்டைய நாடுகளே அயல்நாடுகள் மீது நுழைந்திருக்கின்றன. இந்தியா பங்களாதேசத்தில், இலங்கையில், மாலைதீவிலும். தன்சானியா உகண்டாவிலும், வியட்னாம் கம்பூச்சியாவிலும் நுழைந்திருக்கின்றன. இவைகள் ஒரு வகையான படையெடுப்பாக இருப்பினும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகின் அழிவைக் காப்பாற்ற சோவியத் மற்றைய முதலாளித்துவ நாடுகளுடன் நேச அணியில் இணைந்து கிட்லரின் மனித குல அழிவிற்கு முற்றுப்புள்ள வைக்கப்பட்டது. இவைகள் வேறு அரசியல் சூழ்நிலையைக் கொண்டதாகும். அதேபோல் எண்ணைவளத்தைப் பாதுகாக்க ஏகாதிபத்தியங்களினால் தொடுக்கப்பட்ட ஈராக் மீதான யுத்தத்தை கிட்லருக்கு எதிரான யுத்தத்துடன் சமன்படுத்த முடியாது. ஈராக்கிற்கு எதிரான யுத்தம் சந்தையை பலப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது.

புரட்டாசி மாதம் கிழக்கு தீமோருக்கு அவுஸ்ரேலியா சமாதானப்படை என்ற போர்வையில் நுழைந்திருக்கின்றது. அவுஸ்ரேலியா தனது சொந்த மண்ணிலே பூர்வீகக் குடிகளான அப்ரோயின்ஸ் சொந்த மண்ணிலே முழுமையான உரிமையற்று இருக்கின்றனர். ஆனால் அயல் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட படையை மனித உரிமையை நிலைநாட்ட அனுப்பியது முரண்பாடாக தோன்றினாலும் இதுவேதான் சர்வதேச நியதியாக இருக்கின்றது. இதற்கு ஐ.நாவின் கையாலாகாத நிலையே இதற்கு காரணமாகும்.

நாடுகள் பல சேர்ந்து ஈராக்கிற்கு எதிராக ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் ஐ.நாவின் ஒப்புதல் இன்றி இராணுவத்தை அனுப்பி தலையீடு செய்தனர். இதனை இலகுபடுத்தும் முயற்சியில் பணக்கார வலிமைபடைத்த தேசங்கள் தமக்கு முக்கியத்துவம் உள்ள பிரதேசங்களில் தலையிடுவதற்கு இலகுவாக கருத்தை உருவாக்கும் பொருட்டு இவ்வாறான அமைப்புக்களுக்கு பரிசு கொடுத்து தமது செற்பாட்டை நியாயப்படுத்துவதற்குகாக விவாதத்தை தொடங்கி வைத்திருக்கின்றது. இன்று பல நாடுகளில் ஒரு தீர்விற்கு கொண்டு வரப்படவேண்டும் என்று பாடுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் இருக்கும் சக்திகள் இதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன. இவர்கள் பல முறை முயற்சி செய்தும் ஒரு முடிவிற்கு வரமுடியாத நிலையில் இருக்கின்ற வேலையில் இவர்களை உதறித் தள்ளிவிட்டு தீர்வைத் திணிக்க வேண்டும் என்றால் சமாதானம், மனித உரிமை என்ற போர்வையில் சுதந்திர நாடுகள் மீது நுழைய வேண்டியது அவசியமாகின்றது. இவர்கள் தமது நாடுகளில் அகதிகள் வருகையையும், குறிப்பாக கறுப்பர்கள் வருவதையும் தடுக்க பல முயற்சிகள் செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவும் தமது பொருளாதார நலனை; பேணிக் கொள்ளவும். இவ்வாறு நுழைய வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு முதல் கட்டமாக பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இன்றைய சமுதாயம் தொலைத் தொடர்பை நம்பியே வாழ்கின்ற சமுதாயம் என்ற காரணத்தினால் இவர்களின் கருத்தை பரப்பிக் கொள்ள இலகுவாக இருக்கின்றது.

பரிசு கொடுக்கப்படுவது யாருக்கு?

இதுவரை காலமும் தனிநபர்கள், சில தன்னார்வ அமைப்புக்கள், போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்டது. பரிசு கொடுப்பதற்குப் பின்னால் மிகவும் தந்திரமாக பலம் படைத்த நாடுகளின் நோக்கம் அடங்கியிருக்கின்றது. இந்தப் பரிசுகளின் மூலமாக தனிநபர்களை முன்னுக்கு நிறுத்தியிருக்கின்றன. இந்தத் தனிநபர்களே மாத்திரம் மக்களின் உரிமைக்கான போராட போதுமானது என்ற கருத்தை முன்வைக்கின்றது. இந்தத் தனிநபர்கள் எவ்வித தியாகம் செய்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களை முன்னுக்கு நிறுத்துவதன் மூலம் போராட்டங்களின் திசையை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கின்றது. அத்துடன் இவ்வாறான தனிநபர்களை விட்டால் மக்களுக்காக போராட எவரும் இல்லை என்ற கருத்துப் போக்கையும் உருவாக்கிக் கொள்கின்றது. போராடுகின்ற தேசங்களில் தனிநபர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர் தான். ஆனால் இவர்கள் மக்கள் திரள், போராளிகள் இல்லாமல் எந்த விடிவையும் தனிநபர்கள் கண்டு கொள்ள முடியாது. இவ்வாறான கருத்தை மறைப்பதவே முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

இதுவரை தனிநபர்களுக்குப் பின்னால் நடைபெற்ற போக்குக்களைப் பார்ப்போம். அன் சுன் சுசீ (பர்மா) நெல்சன் மண்டேலா, அரபாத், இக்சாத் ரபீன், ராமோஸ் கோர்த்தா, கார்லோஸ் பேலோ போன்ற எதிர்கால ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஏகாதிபத்திய பிரதிநிதியாக இருந்த கீசிங்கர் (Hendry Kissinger, Le Dic Tho) லீ டிக் தோ 1973 இல் நோபல் பரிசு என்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவர் வியட்னாம் யுத்தத்தின் முடிவிற்கு கொண்டு வரும் காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கியவர்கள். ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள ஆவணங்கள் அமெரிக்க நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள், ராணுவ நடவடிக்கைகள் பற்றி செய்திகள் வரலாற்றை மீளவும் எழுதத் தூண்டுகின்றது. சமாதானம் பேசுகின்ற இந்தச் சக்திகளின் உண்மை முகத்தை மீளவும் அறிந்து கொள்ள இவைகள் உதவுகின்றன.

இந்த அறிக்கையில் 22.11 63 அன்று கெனடி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக விட்னாமில் இருந்து படைகளை முற்றாக வாபஸ் வாங்க தமது ஆலோசகரான Maxell Taylor என்பவரிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தாக தெரிவிக்கின்றது. இந்த திட்டமான 1965 இற்கு முன்னர் படைகளை முற்றாக விலக்குவது தொடர்பாக தென் வியட்னாம் ஜனாதிபதி Dinh Diem என்பவருடன் கலந்துரையாடுவது பற்றியதாகும். இவரைப் போல் தென்னாபீரிக்க இனவெறி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த கிளாக்கிற்கு கொடுக்கப்பட்டது. அத்துடன் இஸ்ரேலிய இக்சாத் ரபீனுக்கும் கொடுக்கப்பட்டது. இதில் இருந்து யுத்தத்தை உருவாக்குபவர்கள், மக்களை அழித்தவர்களுக்கும் சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டது.

கண்ணி வெடி தடுப்பு, அன்னைத் தீரேசா போன்ற அமைப்புக்களுக்கு கொடுக்கப்பட்டது. அத்துடன் அரசியல் முரண்பாடு கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. முன்னர் சோவியத் ஒன்றியத்தில் சிறை இருந்த கைதிக்கு கொடுக்கப்பட்டது. இத்துடன் இம்முறை இரண்டு சீனர்களுக்கு கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இவர்களின் இந்தப் போக்கு நேரடியாக உழைக்கும் மக்களுக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்டவர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. இதன் கருத்து சீன, இறுதிக் கால சோவியத் ஒன்றியம் சோசலிச அரசுகளாக மாட்டாது. இருந்தாலும் சமாதானப் பரிசு வாங்குபவர்கள் எதிர்ப்புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்களாகவும், மேற்கு உலகத்தின் ஊதுகுழலாக இருப்பவர்களேயாகும்.

இந்தப் போக்கிற்கு பின்னால் பொதுவான நோக்கம் இருக்கின்றது. முதலாளித்துவவாதிகள் தாம் அநியாயத்தை, பிழையானவற்றை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்ற போதும் பொதுவாக உழைக்கும் வர்க்க அமைப்புக்களும், உழைக்கும் வர்க்க அரசுகளுகம் உருவாகக் கூடாது என்பதில் கவனம் கொண்டும், அவ்வாறான போக்கை சிதைக்கும்; நோக்கம் கொண்டதாகும். இந்த நோக்கங்களை பல வழிகளில் செயற்படுத்துகின்றனர். இவ்வகையான பரிசுகளும் ஒரு வகை லஞ்சமேயாகும். இவ்வகையான நிதியளிப்பை விடுதலை இயக்கங்களுக்கும் கொடுக்கின்றன. இந்த நிதியை உதவி நிறுவனங்கள் ஊடாக மேற்ககொள்ளப்படுகின்றது. இவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கொண்டுள்ள எதிர்ப்பு அலையை பயன்படுத்தி அவர்களை வளர்த்து பின்னர் நேரம் வரும்போது அவர்களை அப்படியே கவிழ்த்து விடுவார்கள். இதனை கொசவோ விடுதலை இராணுவத்தினை கவிழ்த்ததை அண்மைக் கால வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

திடீரென அக்கறை கொண்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசும், சர்வசன வாக்கெடுப்பும் ஆகும். உலக ஒழுங்கை சிறப்பாக மேற்கொள்ளக் கூடிய பிரதிநிதியான அவுஸ்ரேலியா தலைமையில் இறங்கிய சமாதான படை அனுப்பலும் கவனிக்கத்தக்கதாகும். இவர்கள் மக்களை ஒடுக்கியவர்களுக்கு பரிசுகளைக் கொடுப்பதும் மக்களுக்காக உண்மையாகப் போராடுபவர்களுக்கு பரிசு கொடுக்காமல் விடுவதில் சுரண்டும் வர்க்க நலன் அடங்கியிருக்கின்றது. இவர்கள் மக்கள் வீரோத சக்திகளுக்கு கொடுப்பதன் மூலம் இருக்கின்ற சித்தாந்தங்களை மறைத்துக் கொள்ளவும், கறுப்பு என்றால் பேய் என்பது போல வெள்ளை என்றால் சம்மனசு (Engel) என்பது போல் சரி பிழை என்பதைத் தவிர வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என்ற (முதலாளித்துவ) சித்தாந்தப் போக்கை நிலைநிறுத்துவதுமாகும். மேல்பார்த்த நிகழ்வில் இருந்து பின்வரும் பார்வையைப் பெறமுடிகின்றது.

அரசு வன்முறை பிரயோகிக்கும் போது அதனை எதிர்த்து தம்மைப் பாதுகாக்கும் முறையில் அமைந்த போராட்டங்களை எதிர்ப்பது

தனிநபர்களை வளர்ப்பது இதன் மூலமாக அவர்களை உதாரண புருசர்களாகக் காட்டி தமக்காக இவ்வாறான தனிநபர்கள் போராடுவார்கள் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவது.

தாம் சமாதானத்தின் நண்பர்களாக காட்டிக் கொள்ளதுடன், இவர்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதையும், சமாதான பரிசுப்பணம் ஆயுதம் விற்றுப்பெற்ற பணம் சமாதானப் பரிசாக கொடுப்பது இவர்களின் சிந்தனையோட்டத்தில் நியாயம் என கற்பிப்பது.

திட்டமிட்ட பிரச்சாரத்தை வளர்த்துக் கொள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்றது என்ற மாயையை ஏற்படுத்துவது.

எதிர்கால ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்வது. தீவிரவாதிகளை அகற்றி விட்டு மிதவாதிகளை உருவாக்கிக் கொள்கின்றன. இவர்களுக்கு ‘‘அங்கீகாரம் பெற்ற பரிசு‘‘ மூலம் அவர்களை மிதவாதிகளாக்கி விடுகின்றது.

இவ்வாறான பல செயற்பாடுகளைக் கொண்ட நோபல் பரிசு திட்டமானது பல

செய்ய வேண்டியது என்ன?

எதிர்விழைவுகளை கொடுக்கின்றது. நடக்கின்ற போராட்டங்கள் எல்லாம் சர்வாதிகளின் தோற்றத்தாலும், தேசிய இனங்களின் மோதுவதாலும் மட்டும் ஏற்படுவதில்லை. பொருளாதார அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்ற நிச்சயம் அற்ற தன்மை காரணமாக ஒவ்வொரு வர்க்கமும் ஒவ்வொரு இடத்தை பெறுவதற்காக போராடுகின்றது. இதில் ஒரு (சிறிய தேசிய இனத்தின் தேசிய முதலாளித்துவ) வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை பாவித்து (பாட்டாளிகளை) தனது நலனை பாதுகாக்கும் போது இன்னொரு இனத்தினை ஒடுக்குகின்றது. அதேபோல் (பெரும் தேசிய இனத்தின் தரகு முதலாளித்துவ வர்க்கம்) ஒரு தேசிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கம் தனது வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு இனத்தையே ஒடுக்கின்றது. தனது இனத்திற்கு சில சலுகைகளை வழங்குகின்ற போதும் அதே இனத்தைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கம் தனது வாழ்க்கையை இழந்து கொண்டு தான் இருக்கின்றது. இது புரிந்து கொள்ளவைக்கக் கூடிய சக்திகள் பலம் இல்லாத காரணத்தினால் தொடர்ந்தும் சுரண்டும் வர்க்கத்தின் பித்தலாட்டத்திற்கு பலியாகின்றனர்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள எல்லா மக்களும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இந்தச் சுரண்டலுக்கு எந்த இனமும் தப்பித்துக் கொள்ள முடியாது. அடுத்தது இனங்களும் ஒடுக்கப்படுகின்றன. இவைகள் இரண்டு இனங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொள்வதால் ஒரே நேரத்தில் எல்லா இனத்தின் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவது மறைக்கப்படுகின்றது. ஒவ்வொரு இனமும் தன் இனத்து முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக போர் தொடுப்பதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை தொடர முடியும். இதுவே வெவ்வேறு இனத்தின் பொதுவுடமைவாதிகளுக்கு உள்ள கடமையாகும். இல்லாவிடின் ஏகாதிபத்திய சூழ்ச்சியினை முடியடிக்க முடியாது. இவர்கள் எதிர்பார்க்கும் கழகத்தின் இணைந்து கொள்ளவோ அல்லது அவர்களின் தந்திரத்தை புரிந்து கொள்ளவோ இந்திய, இலங்கைச் சக்திகள் இல்லை. மாறாக ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சிக்குப் பின்னால் செல்லவும், பலியாகிப் போகவுமே இவர்களால் முடியும்.

ஏன் தற்பொழுது வெற்றி பெற்றிருக்கும் ‘‘இந்துத்துவ‘‘ ஐக்கிய முன்னணி கூட தனக்கான சுயவிளக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தேசியம் என்ற அங்கியை அணிந்து கொள்ள முடியும் ஆனால் இவர்களால் ஏகாதிபத்தியங்கள் ஓடுகின்ற ஒட்டத்திற்கு இவர்களால் நகர முடியாது. ஆனால் இந்தியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடுவது இலகுவானது. இந்த சிந்தனையோட்டத்திற்கு தற்கால நடிகர்கள், திராவிட உடன் பிறப்புக்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் இவர்கள் தமக்கே உரித்தான ஒரு இந்துத்துவத்திற்கு அப்பால் செல்ல முடியாது. இவர்கள் தமது தேவைக்காக ஏகாதிபத்தியத்திடம் சரணடையாமல் இருக்கப் போவதில்லை.

26101999

 

 

 

தொடரும் கழுகுப்பார்வைக்குள்,

இன்று சிரியமக்கள் சிக்குண்டிருக்கிறார்கள்

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், யப்பான் போன்ற நாடுகள் தனியாகவும், இவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற நிதிமூலதனக் கூட்டுக்கு ஊடாகவும், சீனா போன்ற சமூக ஏகாதிபத்தியமும் உலகைப் பங்குபோட நாயாய் பேயாய் அலைகின்றன. உலகை பங்குபோடும் வேலையில் மூன்று துருவங்களாக (அமெரிக்காவும் அதன் அடிவருடி நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சீனா – ரஷ்யா) பிரிந்துள்ள ஏகாதிபத்திய நாடுகளான இவை, தேவையானபோது சேர்ந்தும் அந்தந்தச் சூழலின் பொருட்டு தனியாகவும், இயற்கைவளம் பொருந்திய நாடுகளின் மீது தாக்குதல் நடாத்தி ஆக்கிரமிக்கின்றன. இதற்கு சமீபகால உதாரணமாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து என்ற தொடர்ச்சியில்; இன்று சிரியா மீது இவை தமது கோரப் பற்களைப் பதித்து, தமது அடிவருடிகள் மூலமான ஏவல் ஆட்சியை உருவாக்கப் பாடுபடுகின்றன.

மனித உரிமைக்கான யுத்தம், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இந்த “சர்வதேச சமூகம்” உலகின் பல பாகங்களிலும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்றன. முன்னர் ஐ.நாவின் அங்கீகாரம் என்ற போர்வைக்குள் தன்னை மறைத்து இயங்கிய மேற்கு ஏகாதிபத்திய நாடுகள், இன்று ஐ.நாவின் அங்கீகாரம் சீன – ரஷ்சியக் கூட்டினால் மறுக்கப்பட்ட நிலையில், இவை தனியாகவே சிரியா மீது பாய்ந்துள்ளன. ஐ.நாவின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் பிரித்தானியாவும், அமெரிக்காவும் மனித உரிமையைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி சிரியாவின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டுள்ளன. உண்மையில் இந்தத் தேசங்களே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன. சிறுபான்மை இனத்தவரையும், சிறுபான்மை மதத்தவரையும் கொல்லும் கிளர்ச்சிப் படைகளுக்கு இவை நிதியும் பயிற்சியும் கொடுகின்றன.

 

சிரியாவில் கூலிப்படை:

பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட சிரியாவில், தற்போதைய அதிபரான பாத் அல் அசாரின் தந்தை அல் அசாத்தினால் 1960களில் அவரது பாத் கட்சியின் ஒருகட்சிச் சர்வாதிகாரத்தின் கீழ் மதச்சார்பற்ற நாடாகவும், முதலாளித்துவ அரசியல் அமைப்பைக் கொண்டும் அந்த அரசமைப்பு உருவாக்கப்பட்டது. தனது தந்தை இறந்த பின்னர் இன்று வரை அவர் மகன் பாத் அல் அசார் அந்நாட்டின் அதிபராக ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆண்டு வருகிறார்.

மத்திய கிழக்கில் இருக்கின்ற மன்னராட்சி போல் அல்லாது அரைகுறை முதலாளித்துவ ஆட்சி இங்கு நிலவுகிறது என்றாலும் மதச்சார்பின்மையுடன் எண்ணை வளங்கள் அரசுடமையாக இருக்கின்றது. மேற்குத் தேசங்களின் தலையீட்டிற்கு முன்னரே இந்த எண்ணை வளமானது சிரியாவிலும் ஈராக், லிபியா போன்ற நாடுகளிலும் அரசுடமையாக இருந்தது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

சிரியாவில் முதலாளித்துவ அரசு முறைக்கேயான சமூக ஏற்றத்தாழ்வுகளும், வறுமை, இன ஒடுக்குமுறைகளும் இருந்தது. குறிப்பாக சிறுபான்மை இனமான குர்தீஸ் இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறையை அரசு பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.

ஒடுக்குமுறை அரசு என்பது மத்தியகிழக்கு எங்கும் வியாபித்திருக்கின்றது. மன்னராட்சி நடைபெறுகின்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் சில வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆயினும் தனது நட்பு நாடுகளான சவூதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய எவ்வித கரிசனையையும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வெளிக் காட்டியதில்லை. சிரியாவின் ஒடுக்குமுறை என்பது மற்றைய மத்திய கிழக்கு நாடுகளைப் போலவும், ஏனைய உலக நாடுகளைப் போலவும் ஒரேவகையான ஒடுக்குமுறை அம்சங்களைக் கொண்டதாகவே இருந்தது. அது சிரியாவிற்கான பிரத்தியேகமான தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் லிபியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவில் "முஸ்லீம் சகோதரக் கட்சியின்" கீழ் இயங்கும் சன்னி பிரிவானது "அரபு வசந்தத்திற்கு" அமைய அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு யுத்தத்தினை ஆரம்பித்தது. அத்துடன் சிரிய தேசிய கவுன்சிலில் உள்ள மேட்டுக்குடியினரையும், முன்னைநாள் இராணுவ அதிகாரிகளையும் தனது கையில் வைத்துள்ள அமெரிக்காவானது ஆட்சி மாற்றத்தை சிரியாவில் ஏற்படுத்த அவர்களை தனது பொம்மையாக பயன்படுத்துகின்றது.

இதுவரை சிரிய "உள்நாட்டு" யுத்தத்தில் சுமார் 50000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள் அமெரிக்க சார்பு கூலிப்படைகளால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன சியாபிரிவு இஸ்லாமியர், குர்திஸ், கிறிஸ்தவர்களாவர்.

சர்வதேச சமூகம்”

இன்று ரஷ்ய ஊடகங்களே பெரும்பாலும் சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வருவதுடன், ரஷ்ய - சீன அரசுகளும் இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மனித உரிமையைப் பேணுவதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா தனது அரசுக் கூட்டாளிகளான "அரபு லீக்" ஊடாக சிரிய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்க வைத்தது. இதன் அடிப்படையில், சிரியாவுக்குள் அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகள் அமைதிகாப்பு படையினரை அனுப்ப வேண்டும் என அமெரிக்காவின் அடிவருடி நாடான கட்டார் நாடு குரல்கொடுத்துள்ளது.

சிரியாவின் அசாத் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் கட்டார் பிரதமர், சிரியாவில் தினந்தோறும் திட்டமிட்டு நடக்கின்ற படுகொலைகளை தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீக மற்றும் மனிதாபிமானக் கடமை “சர்வதேச சமூகத்துக்கு” இருக்கிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மேற்கு ஏகாதிபத்தியத்தை சிரியாவுக்குள் இறக்குவதே அவரின் நோக்கம்.

இந்நிலையில் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் வைத்து, அரபுநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர், வெளிநாடுகள் கண்மூடித்தனமாக சிரியாவின் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் அப்படியான தலையீடுகளை ரஷ்யா எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளார். இதே கருத்தை சிரிய விவகாரத்தில் 'அதியுச்ச திமிர்' என்று விமர்சித்த அமெரிக்கக் கருத்தை சீனா வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ஈராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு, அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு எதுவித உரிமையும் கிடையாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கருத்து வெளியாகியுள்ளது. சிரியா குறித்த ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ வெட்டு வாக்கினை பயன்படுத்தியதை, ''வெறுக்கத்தக்கது'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் ஒரு வெளிப்படையான அறிக்கையில் விமர்சித்ததை அடுத்து இந்தக் கருத்தை சீனப் பத்திரிகை எழுதியிருந்தது.

இரத்தக் களரியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிரிய அதிபர் அசாத்துக்கு மறுசீரமைப்புகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. இதற்கு அமைய சீர்திருத்தங்களை அறிவித்துக் கொண்டது சிரிய அரசாங்கம். ஆனால் அமெரிக்காவோ அந்த ஆட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றது.

மனித உரிமைககள் பற்றி

மேற்குத் தேசங்களின் மனித உரிமைகளைப் பற்றிய பார்வை, முழுச் சமூகத்தின் உறுப்பினர்களின் நலனில் இருந்து நோக்காது, தனிமனிதனில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில் அமைந்திருக்கின்றது. “மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாதவாறு தடுத்தல், தனக்கு விருப்பமான தலைவரை அல்லது அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியாதவாறு மக்களின் அபிலாசைகளை அடக்கி விடுதல், இதை விட மேலாக சிறைச்சாலைகளில் சித்திரவதைகள், அரசியல் எதிரிகளை கைது செய்தல், அவர்களை சித்திரவதை செய்தல், போர் அல்லது உள்நாட்டு யுத்தம் இடம்பெறும் நாடுகளில் இராணுவத்தின் கெடுபிடி, சட்டவிரோதக் கொலைகள் இவைகள் தான் மனித உரிமைப் பிரச்சினைகளாக மேற்கு நாடுகளால் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது சோவியத் முகாம் இருந்தபோது பின்பற்றிய மறைமுக தலையீட்டுப் போக்காகும்.

ஒரு அரசாங்கம் தனது மக்களுக்குத் தேவையான கல்வி வசதிகள், வீட்டு வசதிகள், வாழ்க்கைத் தரவசதிகள், பொருளாதார வசதிகள் இப்படி அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வாழ்வதற்கான உரிமையை மனிதர் கேட்கின்ற போதும், அதனை நிறைவேற்ற தயாரில்லாத ஆட்சியாளர்கள் ஒடுக்குமுறைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இவைகளே பெரும் உள்நாட்டு யுத்தங்களாக வெடிக்கின்றன. அப்போது மக்கள் நலனுக்காகப் போராடும் அமைப்புக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது மேற்கு ஏகாதிபத்தியம். பயங்கரவாத அமைப்புகள் என தடைசெய்கின்றது. அதேவேளை தனது நலனை முன்னிறுத்தி, தமது "மனித உரிமை" பற்றிய பார்வையின் அடிப்படையில், அமெரிக்கா பல தடவைகள் வரலாற்றில் அல்கொய்தா தொடக்கம் இன்றைய அரபுவசந்தம் வரை எத்தனையோ எதிர்ப்புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி வந்திருக்கின்றது.

 

உலகை பங்கிடுதல்:

இந்தக் கட்டுரையை எழுதும் நிமிடத்தில் பாரிய தாக்குதலை இஸ்ரேல், பலஸ்த்தீன மக்கள் மீது நிகழ்த்துகின்றது. மனித அவலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிகின்றன. ஆனால் பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் இஸ்ரேல் மீது ஒரு சுண்டுவிரலை அசைப்பதற்கு இந்த “சர்வதேச சமூகத்தினால்” முடியவில்லை. அதேவேளை "மனித உரிமைகளை" முன்னிறுத்திய சிரிய, லிபிய, எகிப்திய "உள்நாட்டு" யுத்தங்களானது எண்ணை வளத்தை தனியார் மயமாக்கி, அதனை தனியாருக்கு கொடுப்பதும், தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டற்றதாக சாதகமான சூழலை உருவாக்கவும், தனக்கு சார்பான பொம்மை ஆட்சியை ஏற்படுத்தவுமே சிரிய அரசில் மாற்றம் என்கிறது.

மறுபுறத்தே ஒப்பீட்டு ரீதியில் பொருளாதாரத்தில் வளர்ந்திருந்த மக்கள் ஒட்டாண்டிகளாக ஆக்கப்படுகின்றனர். தனிமனித சொத்துத் தொடக்கம் அரச சொத்துகள் என்பன அழிக்கப்படுகின்றது. இந்த நாடுகள் அழிவில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் தேவையாகின்றது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியே பின்னோக்கிக் செல்கின்றது. நாட்டின் அழிவைக் கட்டியெழுப்ப ஆக்கிரமிப்புத் தேசங்களின் நிறுவனங்களே மறுசீரமைப்பினை மேற்கொள்கின்றது. இதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப வசதிபடைத்த மேற்குத் தேசங்களின் வங்கியினையே தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இவைகள் எல்லாம் “சர்வதேச சமூகத்தினால்” உலகைப் பங்கிட்டுக் கொள்ள ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு யுத்தங்களினால் ஏற்படுகின்றது.

உலக பிராந்தியங்களை தங்களின் ஆளுகைக்குள் கொண்டு வரும் பொருட்டு மேற்கு ஏகாதிபத்தியங்கள் கூட்டாக இயங்குகின்றன. இவைகள் குறிப்பிட்ட பிரதேசத்தினை கைப்பற்றிய பின்னர் தமக்கிடையே பிரதேசங்களை சினேகபூர்வமாக பிரித்துக் கொள்கின்றன. இதனை கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் 90களில் நடைபெற்ற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். இன்று ஆசிய, ஆபிரிக்க வளங்களை சூறையாட சீனாவும், ரஷ்யாவும் களத்தில் குதித்துள்ளன. சிரியாவில் நடைபெறும் யுத்தம் என்பது மக்களின் உண்மையான விடுதலை நோக்கியல்ல. வல்லரசுகளின் நலனைக் காப்பதற்காக ஆட்சி மாற்றத்தைக் கோரி நிற்கும் அநியாய யுத்தமாகும்.

-25/11/2012


ஆக்கிரமிப்பு யுத்தங்கள்

உலக ஏகாதிபத்தியங்களின் சந்தைக்கான யுத்தம் என்பது உலகின் பலபாகங்களில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதில் வெளிப்படையாக யுத்த மேகம் என்பது மத்தியகிழக்கில் தொடங்கி சுமார் 20 வருடங்களாகிவிட்டது. முதலில் மதப்பயங்கரவாதிகளை உருவாக்கிக் கொண்டு தனக்கு எதிரான சக்தி இருப்பதாக வெளிப்படுத்திக் கொண்டது. அதேவேளை மேற்கு ஏகாதிபத்தியம் உலகில் தான் தான் சமாதானத் தூதுவர் என்று பிரகடனப்படுத்த சோவியத் உடைவின் பின்னர் ஆயுதப் போராட்டம் என்பது அவசியமற்றது என்று போதித்தது.

சமாதானப் வழிகளில் நீதியை நிலைநாட்டமுடியும் என்று போதனை செய்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், பலஸ்தீனத்தில் தனது பங்களாளியாகிய நோர்வே ஊடாக சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டது. சமாதான ஒப்பந்தங்களின் ஊடாக ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட நாடுகளை சதிகள், ஏமாற்றுக்கள், கொடுப்பனவுகள் ஊடாக சிதைவை மேற்கொண்டதே கடந்த 25 வருடங்களில் காணமுடியும்.

இதில் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே வீரம் செறிந்த பலஸ்தீனர்களின் போராட்டத்தை சிதைத்தது. பின்னர் மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயக (பாத்கட்சி போன்ற) சக்திகளைக் கூட விட்டுவைக்காது சதிகள் ஊடாகவும், மதத்தீவிரவாதிகளின் பயங்கரவாதம், நேரடி ஆக்கிமிப்பு என்று தொடங்கி மத்திய கிழக்கு எங்கும் மனிதர்களின் வாழ்விடங்களை கல்குவியல்களாக மாற்றியிருக்கின்றது, தொழிற்சாலைகளை, பாடசாலைகள், வைத்திய சாலைகளை, அத்தியாவசிய தேவைக்கான கட்டமைப்புக்களை சிதைத்து வந்திருக்கின்றது.

ஏகாதிபத்தியங்களின் நேரடி தலையீட்டாலும், ஆக்கிரமிப்பினாலும், தடைகளாலும், இயற்கையாக வெளிப்படும் எதிர்ப்புணர்வு என்பது உள்ளுர் ஆட்சியாளர்கள், ஏகாதிபத்திய சக்திகள் என்றில்லாத நிலையில் பிற்போக்கு மதவாத சக்திகள் தான் சமூகத்தின் முன்னால் வந்து தலைமை தாங்கியிருக்கின்றது. இது தற்செயலாக ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக நிலவிருகின்ற சமூகத்தின் பிற்போக்கு சிந்தனையும், மேற்கின் ஆட்சியாளர்களினால் ஊக்குவிக்கப்பட்ட எதிர்ப்புரட்சிக் குழுக்களும் மத்திய கிழக்கு நாடுகளில் செயற்படுகின்றன.

பாத் கட்சிகள்-

பாத்கட்சிகள் என்பது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உருவாகிய முதலாளித்துவ கூறுகளைக் கொண்ட கட்சிகளாக இருந்திருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பல நாடுகள் சுதந்திரநாடுகளாகவும், அரச வம்சம் என்பது இல்லாதாக்கப்பட அதற்கு மாற்றாக மேற்கு ஏகாதிபத்திய அரசுகளினால் ஊக்குவிக்கப்பட்டது தான் பாத் கட்சிகள் போன்றன. இந்தக் கட்சிகள் சோசலிச முகாமிற்கு செல்ல விடாது தடுத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இந்தக் காலத்தில் பல மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த சர்வாதிகார அரசுகளுக்கு துணையாக இருந்ததே மேற்கின் ஏகாதிபத்தியங்களாலும் இவ்வாற அரசியலின் ஊடாக இருந்த உறவுதான் சதாம், அமெரிக்க உறவாகும். இந்த உறவு என்பது சோவியத் உடைவின் பின்னர் அவசியமற்றுப் போயின. சோவியத் உடைபின் பின்னர் நேரடியாகவே தமது சர்வாதிகார அரசுகள், மனிதவுரிமை, ஜனநாயக மீட்பு என முதலாளித்துவ தாராளவாதக் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டது, இப்பவும் தொடர்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளையும் அளவீடுகளையும் காவிக் கொண்டு வலம்வரும் கருத்துருவாக்கம் என்பது முன்னரையும் விட இப்பொழுது தீவிரமாக இருக்கின்றது. இன்றைய காலத்தில் நவீன ஊடகம் என்பது தீவிரமாக மதப்பயங்கரவாதம் என்ற பூச்சாண்டிக்குப் பின்னால் உள்ளது தான் இன்றைய மறுபங்கீட்டுக்கான ஆக்கிரமிப்பு யுத்தமாகும்.

 

திட்டமிட்ட ஆக்கிரமிப்பு

கடந்த 25 வருட வரலாற்றோட்டத்தில் முக்கிய கட்டத்தினை அடைந்துள்ளது. பாத் கட்சிகள் போன்ற முதிர்ச்சியற்ற முதலாளித்துவ சக்திகளை இல்லாக்கி வேட்டைக்காடாக்கிய ஏகாதிபத்தியம் சிரியாமீதும் ஈரான் மீதும் தொடுத்துள்ள கெடுபிடிக்கு நிலை என்பது ரஸ்யா, சீனாவின் தலையீட்டினை துரிதப்படுத்தியுள்ளது. இந்த கெடுபிடிகளின் தொடர்ச்சியாக ரஸ்யா நேரிடையாகவும் சீனா மறைமுகமாகவும் மதப்பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் தொடுப்பதாகக் கூறிக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுகின்றது.

இதன் பின்னர் ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்ட மதப்பயங்கரவாதிகளினால் பிரான்ஸ் நாட்டில் பரீஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தினை அடக்குகின்றேன் பேர் வழி என குண்டுகளைப் போடத் தொடங்கிவிட்டார்கள். பரீஸ் நாட்டில் இடம்பெற்ற படுகொலை கூட ஏகாதிபத்தியங்களின் உளவு நிறுவனங்களின் துணையுடன் இடம் பெற்றது இதில் இஸ்ரேல் என்ற கொடிய மனிதவிரோதியின் பங்கினை குறைத்து மதிப்பிட முடியாது.

யுத்தங்களுக்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிராக

இன்று மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு யுத்தம் என்பது தனியே மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது சிரியாவிற்கு மாத்திரம் பிரத்தியோகமானதல்ல. ஆனால் எதிர்க்கொள்வது மனித இனத்தின் முக்கிய கடமையாகும். இன்று தமது சந்தைக்கான போட்டியில் நேரிடைய களத்தில் இறங்கி மூன்றாம் உலகப் போருக்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்கையில் நாம் கடமையாற்ற வேண்டும்.

இன்று போராட்டம் என்பதை வலதுசாரிகள் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். மனித இனம் போராடக் கூடிய வழி என்பது ஆயுததாங்கித் தான் என்று தட்டையாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். போராட்டம் என்பது பல வடிவங்களைக் கொண்டதாகும்.

ஒவ்வொரு மனிதர்களும் தத்தம் சக்திக்கேற்ப போராடுவது போராட்டமல்ல. ஏகாதிபத்தியங்களின், உள்ளுர் ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதார நலன் சார்த அரசியல் போக்கை விளங்கிக் கொண்டு போராடுவதன் ஊடாகவே வெற்றி கொள்ள முடியும்.

மனிதகுலத்தின் முன்னால் நடக்கின்ற ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்க்க வேண்டும். இது தான் மனிதகுலத்தின் முக்கியகடமையாகும்.

இன்று தன்னியல்பான அரபு ஏகாதிபத்திய உணர்வுகளையும், மதப் பயங்கரவாதத்தையும் ஒன்றாக இணைத்து பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இன்று மதப்பயங்கரவாத அமைப்புக்களை ஒடுக்குகின்றோம் என்று அழிக்கப்படுவது ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளை இனம்காண்பதும், அவர்களை ஆதரிப்பது கடமையாகும்.

ஏகாதிபத்தியங்களின் சந்தைக்கான யுத்தத்தை எதிர்ப்போம்.

ஏகாதிபத்தியங்களுக்கு துணையாக நிற்கும் உள்ளுர் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவோம்

ஒடுக்கப்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள், சர்வதேச ஜனநாயக சக்திகளுடன் கைகோர்ப்போம்.

 

========================================== = = = == =

 

 

சுற்றாடல் மாடுபடுதலை அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு சூழலை முழுமையாக ஆய்வு செய்வதன் ஊடாகவே தடுக்க முடியும்.  பொருளாதார திட்டங்களின் ஊடாக இயற்கையை அழிப்பதும், கழிவுகளை அகற்ற முறையான வடிகால்அமைப்புமுறை பற்றாக்குறை  அதிகமாக பாதிக்கப்படுவது வளரும் நாடுகளாகும்.  சொந்த நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவர்களுக்கு தஞ்சமாக கிடைப்பதும் இவ்வாறு மாசுபடுத்தப்பட்ட நிலங்களை அண்டிய பிரதேசங்களே. 

இயற்கையை மனிதர் அழிப்பதும்  முறையான வடிகாலமைப்பு, சுத்திரிகரிப்பு நிலையங்கள், மறுசுழர்ச்சி மையங்கள் இல்லாமையால் கட்டுப்பாடற்று கழிவுகள் எங்கும் காணமுடிகின்றது.

 

நாட்டை சுத்தமாக்குவது என்பதற்கு அடிப்படையான இரண்டு விடயங்கள் முக்கியமானதாகும்.

 

1. திட்டமிட்ட வடிகால் அமைப்புத் திட்டம் இது சாக்கடை- மலங்களை இணைத்து துப்பரவு செய்யும் திட்டம்.

2. குப்பைகூழங்களை திட்டமிட்ட முறையில் சேமித்து பகுத்து அகற்றுவதும் மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது எவ்வாறு என்ற திட்டங்களை முன்னிறுத்துவதற்குப் பதிலாக வீட்டை துப்பரவாக்கி எங்கே குப்பையை கொண்டுவது என்ற தீர்வையே முன்வைக்காது உள்ள கவர்ச்சி திட்டத்தை முன்வைப்பது சிறந்த தீர்வாக அமைந்து விடாது.

 

தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக குப்பையைக் கூட்டி தமது வீட்டு எல்லைக்கு அப்பால் அகற்றிவிட்டு செல்லும் சமூக அமைப்பே இருக்கின்றது.

இவ்வாறு அகற்றும் குப்பைகள் தெருவோரங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றது.

இலங்கையில் மலத்தினை அகற்றும் முறை 1983 பின்னர் வடக்கு கிழக்கில் இல்லாது போயிற்று எனலாம். சிறிய வயதில் மனிதர்கள் வண்டியில் தள்ளிக் கொண்டு போவதையும் அதனை கடலிக் கொண்டப்படுவதையும்  காணமுடிந்தது.

இந்தியாவில்  மலத்தை கையாள் அள்ளும் சமூகமும் இருக்கின்றது. மேலைநாடுகளில் எத்தனை இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றது. அவ்வாறான இயந்திரங்களை அறிமுகம் செய்து வைக்க முடியும். அவ்வாறான இயந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி சமூக இயக்கங்கள் நடத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தான் இருக்கின்றது.

பல அரசியல் லாபத்திற்காக முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை  எடுத்து இவ்வாறான இயந்திரங்களை வாங்கி அந்த மக்களை துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும்.

அன்னிய மூலதனத்தை வரவழைப்பவர்கள். துப்பரவுத் தொழிலாளர்களின் துன்பத்தை போக்க இந்த அரசியல்வாதிகளாக முடியாது.

ஆனால் தன்னார்வ அமைப்புச் செய்யும் வேலையை தனது கவர்ச்சி அரசியலுக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்துவது  அவர்களது அரசியல் வாழ்விற்கு பயன்படும். ஆனால் சமூகம் இதனால் முழுமையாக பயன்னடைய முடியாது.

 

 

 

மேற்கு தேசங்கள் உண்மையாகவே வறிய நாடுகள்

மீது அனுதாபம் கொண்டுள்ளனவா?

ஐரோப்பிய செய்திச் சாதனங்கள் அனைத்திலும் யுரேனியத்தினால் ஏற்படும் பாதிப்புப் பற்றி தொலைத் தொடர்பு சாதனங்கள் அறிவித்தன. யுரேனியத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் இன்று வெள்ளையர் தேசத்தவர்களின் சிற்பாய்கள் தமது குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர். பத்திரிகைகள் பலவாறான செய்திகளை எழுதிக் கொள்கின்றனர்.  யுரேனியம் சம்பந்தப்பட்ட நிகழ்வில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் ஒருபக்கமும் மற்றைய ஐரோப்பிய நாடுகள் ஒரு பக்கமும் இருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் யுரேனியத்தின் எதிர்விழைவு பற்றிய குறிப்பு எதுவும் தமக்கு தரப்படவில்லை என மற்றைய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இதனால் மேற்குறிப்பிட்ட நாடுகள் தமது படைவீரர்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்திக் கொண்டு மற்றைய நாடுகளின் படைவீரர்கள் பாதிப்புப் பற்றி அக்கறைப்படவில்லை என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதப்பட்டன. விடயத்தினை தெரிந்து வைத்திருந்த நாடுகள் செய்தியை மறைத்துக் கொண்டதினால், உணவுகள் விடயத்தில் தமது வீரர்களுக்கு குண்டு வீசப்பட்ட இடத்தில் விழைந்த மரக்கறிகளை தமது வீரர்கள் மாத்திரம் உண்டிருக்கக் கூடும் என பத்திரிகைகள் எழுதிக் கொண்டன.

நோட்டோவின் செயலாளர்நாயகம் (orge Robertson)) ஜோர்ச் றொபெட்சன் கூற்றுப்படி 9.3 தொன் எடையுடைய யூரேனியம் உள்ளடக்கிய குண்டு வீசப்பட்டுள்ளது. மொத்தம் 31000 rounds 30mm தலா 300 கிராம் எடையுடையாதாகும்.

இங்கு யுரேனித்தின் காரணமாக ஏற்படும் தாக்கம் பற்றிப் பார்ப்போம். யுரேனியம் மக்களை பலவாறாக தாக்கும்.

1.      தூசி ஊடாக பரவுகின்றது.

2.      பயிர்செய்கை நிலத்தில்  குண்டு தாக்குதல் நடத்தப்படுமானால் அந்த இடத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவினை உண்ணுகின்ற போது பரவும்.

3.      குண்டுத் தாக்குதலின் பின்னர் ஏற்படும் மிகுதிப் பொருட்களை நியாபகச் சின்னமாக எடுத்துச் செல்வதன் மூலம் பரவும்.

4.      சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்களாக பயன்படுத்தும் போது பரவும்.

 

மேற்கு நாடுகளின் தாக்குதல்களால்

1.      பயிர்செய்கை நிலங்கள்,

2.      ஆறுகள், குளங்கள், ஏரிகள், குடிநீர் கிணறுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

3.      தொழிற்சாலைகள்

4.      இடங்களுக்கு இடையிலான தொடர்பு வழிகள் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதன் காரணமாக மக்களின் வாழ்வே சூனியமாகியது.

5.      பிறக்கும் பிள்ளைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. (Down syndrom)

6.      படைவீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது. இன்றைய நிலைக்குக் காரணம் சதாம் குசையின், மிலேசவிச் என இன்றைக்கு மேற்குலகம்  கூறுகின்றது. உண்மையில் இவ்வாறான சர்வாதிகாரிகள் ஒரு தனியே செயற்பாட்டிற்கு காரணம் எனக் கொள்ளமுடியாது. இவர்களை உருவாக்கிய பொருளாதார அமைப்பே காரணமாகும். பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான தனது நண்பன் என்ற ரீதியில் மேற்குலகம் இவர்களுக்கு உதவிசெய்தது.

ஆனாலும் இன்று உலக நாடுகள் பலவற்றை தமது நோக்கங்களுக்காக ஆளுமைக்குள் கொண்டு வந்துள்ளனர். பிராந்தியங்களின் செல்வாக்கு கருதி அந்தந்த பிரதேசங்களில் தேசங்கள் சுயநிர்ணய உரிமை பெறுவது, தேவையானது போது சுதந்திர தேசங்கள் உருவாக்குவது இன்று பலம் பொருந்திய நிதிமூலதனத்தைக் கொண்ட தேசங்களின் வாடிக்கையாகிவிட்டது. (முன்னர் ஐ.நாவின் பெயரைப் பாவித்து கொரியாவினுள் நுழைந்தனர்.)

பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்ற தேசங்களில் ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், மனித உரிமையை பாதுகாத்துக் கொள்ளவும் ஐ.நாவின் தலைமையிலான படைகளை அனுப்பி மனித உரிமைகளையும், உயிர்ப்பலிகளையும் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுகின்றன. அத்துடன் ஐ.நா மூலமாக எல்லாவற்றையும் செய்யலாம் என நம்பிக்கை கொள்கின்றனர்.

உதாரணத்திற்கு ஒரு சில கணக்கைப் பார்ப்போம், மிலோசவிச், இலங்கை அரசு, சதாம், இந்தோனேசிய அரசு மக்களை கொல்லுகின்றனர். உதாரணத்திற்கு 50 000 சிங்கள மக்களை பலிகொண்டுள்ளனர்.  இந்தோனேசிய (500 000 பொதுவுடமைவாதிகள், ஆதரவாளர்கள் என சுகர்ட்டே அரசு கொண்று குவித்தது 1966 களில்) அரசு கிழக்கு திமோர் மக்களுக்கு செய்த கொடுமைகள், போட்ட குண்டுகளின் பாதிப்பு, இலங்கை அரசு இலங்கை மக்கள் பிரிவினரிடையே செய்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள், அதன் விளைவுகளையும், ஏகாதிபத்திய தேசங்கள், ஐ.நா சபையின் உதவியுடன் நடைபெற்ற ஜனநாயக மீள் நிறுத்தம் செய்யும் (ஈராக், யூக்கோஸ்லாவியா) போராட்டத்தில் எவ்வளவு சேதாரம் என கணக்குப் போட்டுப் பார்த்தால் மக்கள் திகைக்கும் அளவிற்கு இருக்கும். இது அமெரிக்கா வியட்நாமில், ஈராக்கில், யூக்கோஸ்லாவியாவில் செய்த சேதம் அதிகமானதாகும். போராட்டம் நடைபெறுகின்ற தேசத்தில் ஒடுக்குமுறை அரசு கொலை செய்யுமானால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கின்றது. பாதிப்பு சங்கிலி வட்டம் போல் தொடர்கின்றது. ஆனால் ஏகாதிபத்தியங்கள் வீசிய குண்டு வீச்சில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நிரந்தர இசைஞ்சலாக உருவாகின்றது.

இவ்வாறாக நிரந்தர ஊனம் உள்ள சமூகமாக ஆக்க வேண்டிய தேவை ஏகாதிபத்தியங்களுக்கு உண்டா? ஆம் நிச்சயம் வெள்ளையர்கள் அல்லாத தேசத்தவர்களை இவ்வாறு அழித்துக் கொள்ளது நவீன மல்தூசரின் (சனத்தொகையே உலகின் பசி பட்டினிக்கு காரணம் எனக் கொள்கின்றது) கொள்கையாகும். உலகில் நடைபெற்ற யுத்தங்களில் உயிரியலின் தொடர்ச்சியான பாதிப்பு அணுவில் இருந்து பெறப்படும் கதிர் அலை, மற்றும் காடுகளை அழிக்கவென வியட்னாமில் (தற்பொழுது கொலம்பியாவில் வீசப்படுகின்றது) வீசிய குண்டு வகை போன்றவற்றால் ஏற்படுவது போல் இல்லை.  பெரும் அழிவைக் கொண்ட ஜேர்மனியில் இவ்வாறான உயிரியல் ரீதியான பாதிப்பு இன்றைய காலத்தைப் போல் இல்லை. ஆனால் மீளவும் ஜேர்மனியை (துருக்கிய தொழிலாளர்கள்) கட்டமைத்தனர். இங்கு இரண்டு யுத்தங்களுக்கும் மாற்றம் இருக்கின்றது. இந்த யுத்தத்தில் பாவிக்கப்பட்ட ஆயுதங்களிலும் மாற்றம் இருக்கின்றது. ஏன் வரலாற்றில் நடைபெற்ற யுத்தங்கள் அனைத்திலும் மனித சமுதாயம் அழிந்து தான் இருக்கின்றன. அத்துடன் பொருளாதார உறவுகள், சமூக உறவுகளும் சிதைத்து தான் இருக்கின்றன. (ஒரு மனிதனை கொல்லும் போது அவன் இறக்கின்றான். ஆனால் குறையுடைய மனிதர்களை உருவாக்கிய பின்னர் குறையுள்ள சமூகம் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றது உதாரணத்திற்கு வறுமை எவ்வாறு சங்கிலித் தொடர்போல் தொடர்கின்றதோ அதே போலதான்.) ஆனாலும் உயிரியில் ரீதியான பாதிப்பை மனித சமுதாயம் அடைந்தது இன்றையக் காலத்தில் தான்.

யுத்தத்தில் பாவிக்கப்படும் ஆயுதங்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உயிரியல் ரீதியாக எமது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் எமது தேசமானது அதனை சமாளித்துக் கொள்ள தொழில் நுட்ப ரீதியாக, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவில்லை. இவற்றை கட்டுப்படுத்தவும்  எமது தேசங்களில் வசதிகளும் இல்லை. யுத்தத்தின் பாதிப்பைப் பற்றிக் கூறுவதால்  போராட்டங்களை மறுதலிக்க முடியாது. இங்கு போராட்டம் என்பது வாழ்வதற்காக போராடுவதாகும். போராடும் போது அழிக்கப்படுவதற்கு எதிரானது பாதுகாப்பு போராட்டம் இது நீதியானது. ஆனால் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு எதிராக நடத்தப்படும் அடாவடித்தனங்கள், தாக்குதல்கள் இவைகள் நீதியற்றவை.

இங்கு அன்னியச் சக்திகளை வரவழைத்து, அவர்கள் சமாதானத்தை நிலைநிறுத்துவர் எனக்கூறி ஒரு நாட்டினுள் நுழைந்து கொள்கின்றனர். பின்னர் ஆயுதக்குழுக்களை, அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஆயுதரீதியாக அடிபணிய வைக்கின்றனர்.. இதனால் ஏற்படும் பாதிப்புக் பற்றித் தான் அலசப்படுகின்றது. யுத்தம் என்பது மனித குலத்தினிடையே வர்க்கங்கள் தோன்றிய பின்னர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு முழுமையாக கைப்பற்றி பிற்பாடுதான் யுத்தங்கள் ஒழிக்கப்படும். யுத்தத்தை வெறுப்பது என்பது போராட்டத்தை எதிர்ப்பது என்பதாகாது. அழிவை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக எந்த விலையும் கொடுக்க முடியாது, அதாவது போராட்டத்தை காட்டிக் குடுத்து சரணடைய முடியாது. நீதியான முறையில் தான் அழிவுகள் நிறுத்தப்பட வேண்டும்.

 

யுரேனியம் 

யுரேனியம்  என்பது இயற்கையில் இருந்து கிடைக்கப்பெறுவதாகும்.  இது அணுஆயுத, அணு மின்ஆலை போன்ற இயக்கப் பாவிக்கப்படுவதாகும். இதற்கு பாவிக்கப்படும் யுரேனித்தினால் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் எற்படும் வடி அல்லது கழிவாகும். இதனை ஆங்கிலத்தில் Depleted  uranium (DU) எனக் கூறுவார்கள். இதில் ஏற்படும் சக்திவாய்ந்த uranium கழிவை இதிலும் இருந்து பொறப்படும் கழிவில் இருந்து பெறப்படும் கழவில் இருந்து உருவாக்கப்படும் ரசயnரைஅ 238 இது 40 வீதம் கதிர் அலை குறைவானதாகும். 1970 களில் கழிவுகளில் இருந்து கனரக, மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரிக்க பாவிக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் முடிவிற்கு வந்தனர். யுரேனியத்தைக் கொண்டு பாவிக்கப்படும் குண்டுகள் வெடிப்பதில்லை. ஆனால் எரியும் தன்மை கொண்டது, இது காற்றில் தூசி மாதிரி பரவக் கூடியது. யூரேனியமானது பாண் அல்லது (bread) ரொட்டியில் வெண்ணெய் (butter)  தடவினால் எவ்வாறு கசித்து போகுமோ அதேபோல் கனரக வாகனங்களை ஊடறுத்துச் சென்று கனரக கவசவாகனத்தை எரிக்க வல்லது.

 

50 பிரான்ஸ் நாட்டு இராணுவ வீரர்களை பரிசோதித்த பின்னர் வெளியிட்டு பிரான்ஸ் நாட்டு ஆய்வுக் குழுவினர் யூரேனியத்திற்கும், இரத்தபுற்று நோய்க்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். இவ்வாறான முடிவிலை ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

7 ஸ்பெயின் நாட்டவர் புற்றுநோய் தாக்கியுள்ளது.

1 ஜேர்மனியர்  புற்றுநோய் தாக்கியுள்ளது.

6 இத்தாலியர் இறந்துள்ளனர்.

1 நோர்வே நாட்டவர் புற்றுநோய் தாக்கியுள்ளது.

பெல்யியம் 9 நோய் தாக்கப்பட்டவர்களில் 5 இறந்துள்ளனர்.

 

ஈராக் தடையின் விழைவுகள்

சர்வதேச எதிர்ப்புக்களையும் மீறி ஈராக் மீது சர்வதேச சமூகம் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட தடையால் மக்கள் மடிந்து கொண்டு இருக்கின்றனர். சர்வதேச சமூகம் ஏற்படுத்திக் கொண்ட தடையென அமெரிக்காவாலும், பிரித்தானியாவினாலும் பிதட்டப்படும் தடையினால் பாதிக்கப்படும் மக்கள் பற்றி ஆங்காங்கே சில தொடர்புச் சாதனங்கள் பேச முற்பட்டிருக்கின்றன. சர்வதேச சமூகம் விதித்த தடைக்கே சர்வதேச சமூகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது தான் வேடிக்கை.

இதில் ஒரு திருப்புமுனையாக unicef கவனம் செலுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும். யுனிசெவ் இனுடைய சில தரவுகளை இங்கே தரப்படுகின்றது. 

      1990 பின் பிறந்த ஒவ்வொரு 20 சிசுக்கள் ஐந்து வயது அடைவதற்கு முன்னர் இறக்கின்றனர்.

      ஒவ்வொரு 8 பிள்ளைகள் வயது முதிர்வதற்கு முன்னர் இறங்கின்றனர். குடிநீர் பற்றாக்குறை, உணவு, மருந்து வகை போன்ற காரணங்களால் மடிகின்றனர்.

      தென் ஈராக் பகுதியில் புற்றுநோய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

      1 நாளுக்கு 300 குழந்தைகள் வீதம் வருடத்திற்கு 73 000 குழந்தைகளை காவு வாங்குகின்றது.

      UNICEF ன் கருத்துப்படி 3 இல் 2 வீதமானவர்களை தடையில்லாத பட்சத்தில் காப்பாற்றிருக்க முடியும் எனக் கருதுகின்றது.

இவ்வாறாக கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பத்தாத் பிரதிநிதியான Beate Schweizer என்பவர் தடையினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுதவதாக கூறியுள்ளார்.

பிரான்ஸ், சீனா, ரஸ்யா தடைக்கு எதிராகவும், பிரித்தானியாவும் அதன் எஜமானன் அமெரிக்காவும் தடைக்கு எதிராக உள்ள ஐ.நா பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகளாகும்.

Iren Denis Haliday 1998 பின்பகுதியில், Hans Von Sponeck 2000 போன்ற ஐ.நா உதவிப் பிரிவுத் தலைவர்களாக செயற்பட்டவர்கள் தடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் எதிர்ப்புத் தெரிவித்து  பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

எண்ணைக்குப் (oil for food and medisin) மாற்றாக உணவு, மருந்து என்ற ஒப்பந்தத்தை மேற்பார்வை செய்தும் தற்போதைய தலைவராக இருந்த Jutta Burghart  பதவி விலகியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கவலை கொண்டுள்ளது. ஐ.நாவின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் தடையை விலக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சலரோகம்,இருதய நோய், ஈரல், சிறுநீரகம் ஆகியவற்றிற்கான மருந்துகள் தட்டுப்பாடாக இருப்பதாக தெரிவித்துள்ள கோபி அன்னன் தடையினால் தடுப்புமருந்து போடும் திட்டமும் இத்தடையினால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நாவின் ஒப்புதலுடன், ஐ.நா எடுத்த தீர்மானத்தின் மூலம் தான் நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்காவும், தொலைத் தொடர்பு சாதனங்களும் கூறுகின்றன. ஆனால் இன்று ஐ.நாவில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியாவுடன் சேர்ந்த சில நாடுகளைத் தவிர மற்றைய நாடுகள், ஏன் கோபி அன்னன் உட்பட தடையை ரத்து செய்யவே கோருகின்றனர். ஐ.நா தடையை ஏற்படுத்த முடியுமானால் ஏன் அதனை தளர்த்த இந்த ஐ.நாவினால் முடியவில்லை. இதனை தடுப்பது அமெரிக்க, பிரித்தானியா ஆகியன எண்ணை மேல் கொண்ட நலனே. எண்ணை வளநாடுகள் தடையைப் பயன்படுத்தி விலை அதிகரிப்பின் மூலம் தமது கல்லாப் பெட்டியை நிரப்புகின்றனர். இதனால் உற்பத்தி செய்யும் தேசங்களில் நாணய வருவாய் அதிகரிக்கின்றது.

பத்திரிகையாளரான (The Guardian – Maggie O’Kane)  மகி என்பவர் துறைமுக (Basra) நகரில் 3 மடங்காக (Down Syndrom) டவுன் சின்ரம் என்ற குறைபாடு உடைய பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. இவை மாத்திரம் அல்ல புதிய உடல் உறுப்புக்கள் வளர்ந்தும், உடல் உறுப்புகள் சிலவை வளராமலும் பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. இவ்வாறான நிகழ்விற்கு காரணம் பணம் படைத்த தேசங்களின் பணத்தின் மீதான ஆசையே.

 

பரிசோதனைக் குழுக்களின் முடிவுகள்

உண்மையாக யுரேனியத்தினால் தான் புற்றுநோய் போன்ற வருகின்றது என பல பரிசோதனைக் குழுக்கள் யுரேனித்தால் வரும் பாதிப்புகள் பற்றி ஆய்ந்து அறிக்கைகள் சமர்ப்பித்தனர். இதில் முதலில் பிரான்ஸ் நாட்டின் ஆய்வுக்குழுவின் அறிக்கையின் படி சிற்பாய்களின் புற்றுநோய்க்கு யுரேனியம் காரணம் இல்லை என அறிவித்திருந்தது.

இதேபோல் ஐ.நா உலக சுகாதார நிறுவனமும் புற்நோய்க்கு யுரேனியம் காரணமாகாதென தெரவித்திருந்தது.

ளுர்யுPநு என்ற நேட்டோவின் விஞ்ஞான பரிசோதனை நிறுவனம் பல நாடுகளின் வேண்டுகோளுக்கு இனங்க யுரேனியம் பற்றி தகவல்களை வளங்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

ஜேர்மன் தலைவர் (Gerhard Schôder)) கெர்காட் ஸ்ரோடர் மற்றும் போர்த்துக்கல் நாட்டுத் தலைவர் (Antonio Guteress) அந்தோனியோ நோட்டோவினுடைய எந்த வித விளக்கத்திலும் நம்பிக்கை கிடையாது எனவும் தெரிவித்தனர்.

ஐ.நா சூழல் நல பிரிவைச் சேர்ந்த ((Klaus Tôpfer) கிளவுஸ் இதயசுத்தியற்ற ஆய்வு முறைகளையும், எந்த இடத்தில் (கொசவோ) யூரோனியம் உள்ளடக்கிய குண்டு வீசப்பட்ட உண்மையான இடத்தின் தரவுகள்  கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.

3 எழுத்தாளர்கள் எழுதிய (Uranium Appauvri: La Guerre Invusible :- Fredric Loore (Bel) Roger Trilling (USA) Martin Meissonnier (Fr)  கற்புலனாகாப் போர் என்ற நூல் பற்றி (The Independent) பத்திரிகையில் வெளியாகியது)  கெனத் (Kenneth Becon) என்ற பென்ரகன் பேச்சாளரை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட குறிப்பில் யுரேனியமானது கவசவாகனத்தை தகர்ப்பதற்காக பாவிக்கப்பட்ட ஆயுதத்தில் (Plutonium) பிளாட்டேனிய நச்சு படிந்துள்ளது என்றும், இது அணுவாயுத (Pandacan in Kentucky) நிலையத்தில் ஏற்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் எறிகுண்டில் யுரேனியம் படிந்துள்ளதை சுவீஸ் நாட்டில் உள்ள பரிசோதனை நிலையத்தில் பரிசோதித்தும் உறுதிப்படுத்தினர்.

 

யுரேனியம் வெளியிடும் கதிர் நேரடியாக தோலில் மூலமாக செல்வதில்லை. ஆனால் தூசிவடிவமாக மனிதரினுள் நுழைகின்றது.  இதனால் மனிதர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இதனால் ஈரல், நுரையீரல், இதயத்தில் பாதிப்பு, நரம்பத் தளர்ச்சி ஏற்படும் அத்துடன் கலங்களும் பாதிப்படையும். இதனால் நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் என்ன உருவாகும்.

யுரேனியத்தால் உருவாகும் பாதிப்புப் பற்றி உலக மக்களில் ஒரு பகுதியினரே தெரிந்து வைத்துள்ளனர். அதேபோல் பயங்கர ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், ஆயுதங்களை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும், ஆளும்வர்க்கமும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

ஆளும் வர்க்கத்தில் பிடியில் இருக்கின்ற ஒடுக்குமுறைச் சாதனங்கள் சாதாரண மக்களுக்கு யுரேனியத்தினால் ஏற்படும் பாதிப்புப் பற்றி அறிய அழிவிற்கு துணைபோகும் அறிவு இடம் கொடுப்பதில்லை. இன்று பல பரிசோதனைகள் மூலம் யுரேனியமானது புற்றுநோய் அல்லது பால்கன் (Balkan Syndrom) நோய் அறிகுறிக்கு காரணம் இல்லை என முடிவுகள் அறிவிக்கின்றன. இந்நோய்க்கான காரணமாக யுரேனியம் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய காரணியாக இல்லை என்பதே பரிசோதனை நிலையங்களின் கருத்தாகும்.

இரசாயனத்தின் தாக்கம் பற்றி 1955- 1970 வரையில் அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் மனிதரில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரணப்படத்தினை Discovery Chanel , Deadly Experiments என்ற பெயரில் ஒளிபரப்பி இருந்தது. அதில் அமெரிக்காவில் மான்கெற்ரன் (Manhatten Project) திட்டத்தின் 6000 இறந்தவர்களின் உடலை பரிசோதித்துள்ளது. அமெரிக்காவில் Mannhatten project, Sunshine project என்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் Mannhatten project பிளட்டினத் திரவம் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. Sunshine project ஆனாது (Iron radioactiv) அயன் திரவத்தை ஊசி மூலம் செலுத்தியது.

பிரித்தானியா 390 கருவறையில் இருக்கின்ற போதே (Sodium redioactiv, Iron radioacti) சோடிய கதிரலை செலுத்த்தினர். இதே போல இறந்த சிறார்களின் உடல் பாகங்களை உறவினர்களின் ஒப்புதல் இன்றி  துண்டித்து பரிசோதனை செய்யப் உபயோகித்தனர். இவ்வாறான பரிசோதனையில் (Coventry) பிரித்தானியாவில் பாக்கிஸ்தான், இந்தியர்களிடையேயும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரித்தாம் (Pritam) என்ற பெண்மணியும் அடங்கும் இவரைப் போன்று 20 பேருக்கு சப்பாத்தியில் திரவங்கள் கலந்த சப்பாத்திக் (உணவு) கலவை கொடுக்கப்பட்டது. இங்கு முழு விபரணப்படத்தின் உள்ளடக்கத்தை இங்கு எழுதவில்லை. இனி விடயத்துக்கு வருவோம்.

யுரேனித்தின் தாக்கம் காரணம் இல்லை என அறிவிப்பவர்கள் பரிசோதனை நடத்துவதற்காகவே இவ்வாறான ஆபத்தான இரசாயன திரவங்கள் அடங்கிய குண்டுகளை வீசு விழைவுகளை ஆராய்வதற்கு நடத்தியிருக்க மாட்டார்கள் என ஏன் கொள்ள முடியாது? யுரேனியமே காரணமெனக் கொள்ள பிரதிநிதித்தப்படக் கூடியதாக இல்லை என காரணம் கூறும் பரிசோதகர்கள் இன்று வீசப்பட்டதின் தாக்கத்தை இன்னும் 50 வருடங்களின் பின்னர் தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்களை (பெரும் தேசங்கள் அரச பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட செய்திகளை 50 வருடங்களின் பின்னர் வெளியிடுவர் இதனையே இங்கு குறிப்பிடப்படுகின்றது) வெளியிடும் வரும்வரை நாம் தெரிந்து கொள்ளாது இருந்து விடுவோம்.

 

ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற போது நேட்டேவும் சரி, ஐரோப்பாவும் (Euro controll) சரி தமக்கிடையே (ஏன் தற்பொழுது நடைதபெற்றுக் கொண்டிருக்கும் துருக்கிய போராளிகளின் உண்ணாவிரதமும் ஐரோப்பிய தரத்தின் கீழ் அமைந்து கொண்ட சிறை தீர்திருத்தத்தின் காரணமாகும்.) தரக்கட்டுப்பாடை கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் முடிவிற்கமையவே ஆயுதங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி தமது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதனால் எல்லா நாடுகளிலும் ஒரே தரமுடைய ஆயுதங்கள் உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு ஆட்சியாளர்களும் முன்வந்து தமக்கு தெரியாதது போல் காட்டிக் கொள்வது தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காகும். எதிர்ப்புக் குரல்களை நேட்டோ, ஐரோப்பிய அரசியல், இராணுவ வட்டம், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை எதிர்ப்புக்குரல்களை பரஸ்பர ஒத்துழைப்புடன் ஏற்றுக் கொண்டு இவர்கள் நாடகமாடுவர். பயங்கர புதிய நோய்களை கொண்டு வரும் எனத் தெரிந்து உலகை ஆட்டிப்படைக்கவும், தனது நாட்டில் சிற்பாய்கள் படைகளில் சேருவதில் ஏற்படும் தட்டுப்பாடை தவிர்த்துக் கொள்ளவும், மரபுயுத்த முறையை தவிர்த்து தொழில் நுட்பத்தின் மூலம் யுத்தினை நடத்தவும் இவ்வாறான புதிய ஆயுதங்களை செய்கின்றனர்.

 

வானத்தைப் பார்த்தல்

தடையை ஆதரிக்கும் பகுதியினர் தமது வாதங்களுக்காக சதாதம் ஒரு உலகத்தின் விரோதி என சொல்லிய பாடத்தைதே திரும்பவும் கூறிக் கொள்ளகின்றது. மேலும் 23 மில்லியன் மக்களுக்கு எண்ணை மாற்றுத் திட்டத்தின் மூலம் பெறப்படும் பணமானது காணக் கூடியது என்றும், அதில் இருந்து பெறப்படும் நிதியானது ஈராக்கின் அயல் நாட்டில் உள்ள மக்களின் தேவையை விட 3 மடங்கு அதிகமானது என பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுவான பரிசோதகர்கள், அவதானிகளின் கருத்தின் படி ஈராக் பயங்கர ஆயுதங்களை வைத்துக் கொள்ளவோ, தயாரித்துக் கொள்ளவோ தற்பொழுது முடியாது என தெரிவிக்கின்றனர்.

இந்தக் தடையால் சர்வாதிகாரியை (எதிர்க்கட்சிகளுக்கு 4 மில்லியன் டொலர் கொடுத்துள்ளது) ஒழிப்பதற்காகவும், மத்திய கிழக்கு மக்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காகவும் தடை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவது ஒரு நாட்டின் எதிர்காலச் சந்ததியினர் ஆகும். இந்தச் சிறார்கள் தாயின் வயிற்றில் இருக்கின்ற போதே போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டனர். உலகத்தின் வந்தபின்னர் நச்சுக் காற்றை சுவாசிக்கின்றனர், சிறுபிராயத்தில் வேளைக்கு உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். பஞ்சத்தைப் போக்க படிப்பை இடைநடுவில் விடுகின்றனர். வயிற்றுப் பசியைப் போக்க சிறுவயதில் தமது உழைப்பை விற்பதற்காக செல்கின்றனர். தனிமனித சுதந்திரம், சிறுவர் உழைப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்காக போராடும் பணம் படைத்த தேசத்தின் ஆட்சியாளர்கள் எவ்வாறு சிறுவர்கள் உழைப்பை விற்பதற்கு வருகின்றனர் என்பதை பார்க்க மறுத்து காகிதத்தில் திட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.

அண்மையில் திறந்த பொருளாதார சந்தையை ஏற்படுத்தும் பொருட்டு கூட்டப்பட்ட மாநாட்டில் (கியூபாவை சாடும் முகமாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் நாடுகளைத் தான் இங்கு குறிப்பிடுகின்றனர்.) ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் தான் இக்கூட்டமைப்பில் பங்குபற்ற முடியும் என தீர்மானம் நிறைவேற்றினர். ஜனநாயகத்தை பின்பற்றுவதாகவும், தனிமனித சுதந்திரத்தை பேண வேண்டும் எனில் (ஈராக்கின் அழிவில் எண்ணை விலை ஏற்றத்தின் மூலம் பெறப்படும் லாபத்தை கொண்டே தமது தேசிய சேமிப்பை பெருக்குகின்றனர்) சிறுவர்கள் பாதிக்கப்படுவது மட்டும் ஜனநாயத்தின் கொள்கை முரண்பாடு அல்லவா?

உள்நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி மேலை தேசங்களை நோக்கி கோரிக்கை விடப்படுகின்றது. இவர்கள் வந்து பிரச்சனை நடக்கும் தேசங்களில் எல்லாவகை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதன் மூலம் கோரிக்கை விடும் சக்திகள் தாம் ஏதோ பெரும் பிரச்சனைக்கு தீர்வை முன்வைத்து விட்டார்கள் போன்று கோரிக்கை விடுத்துவிடுவர்.  அதேவேளை பணம்படைத்த நாடுகளின் வரவை எதிர்பார்ப்பவர்கள் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தாலும் ஏகாதிபத்திய விஸதரிப்பு, அமெரிக்கா கவனம் செலுத்தாவிடின் மனித உரிமை மீது அக்கறை செலுத்தவில்லை என அமெரிக்கா மீது குற்றம் சாட்டுவதாக கருதப்படுகின்றது. இந்தக் கருத்தைக் கொண்டவர்கள் அமெரிக்காவை உதாரணமாக, இலச்சினையாக காட்டுவர். அமெரிக்காவே உலகின் பாதுகாவலனாக எதிர்பார்ப்பது சாதாரண மக்களின் பார்வையாகும். (இது ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களிடையே மாறுபடும்) ஆனால் இந்தப் பார்வை மாற்றப்பட வேண்டும். அமெரிக்காவை பாதுகாக்கவல்ல தொலைத் தொடர்புச் சாதனங்களும் தொடர்ந்தும் குரல்கொடுக்கின்றன.

இந்த நிலையில் சர்தேசியப் பாதை என்னவாக இருக்க வேண்டும் என்றால் ஒரு உள்நாட்டு மக்கள் கூட்டம் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கும் போது அந்நாட்டின் மீது இரக்கம் கொண்டு தனது நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்திற்காக நுளைந்து கொள்ளும் நிலையில் சொந்த தேசம் தனது சொந்து இயந்திரத்தை அந்நிய நாடுகளில் தலையிடவோ, படைகளை அனுப்புவதை ஏற்றுக் கொள்ளவோ கூடாது.

போராடும் தேசத்து மக்களை பொறுத்தவை மக்களை தங்கி நிற்பதும், அந்நிய சக்திகளை தேச எல்லைக்குள் அனுமதிக்கவோ கூடாது. போராடும் தேசத்து மக்களும், ஒடுக்க முற்படும் தேசத்தின் நட்புசக்திகளையும் இணைத்து சொந்த சுரண்டும் வர்க்கத்தையும், அவர்களைப் பாதுகாக்கும் அந்திய தேசத்தின் பணம் படைத்த நிறுவனங்கள், ஒடுக்குமுறை இயந்திரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் அனைத்து உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரிப்பதன் மூலம் பொரும்பான்மை, சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து அன்னியச் சக்திகளை எந்தக் காரணம் கொண்டும் எமது தேசத்தில் காலடி எடுத்து வைப்பதை  தடுக்க முடியும்.

 

சுதன்17.05.2001


 

 

புரட்டாசி 11 2001 அமெரிக்காவில் ஒப்பாரி

“Operation Infinite Justice”

“Operation enduring freedom” ‘endeløs frihet’

15$billion to flight recovery

 

அமெரிக்க தேசத்தில் நடைபெற்ற தாக்குதலினால் 63 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இறந்துள்ளர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர்களேயாவார். உலக வர்த்தக வலயத்தில் இறந்தவர்களின் தொகை 2977 எனக் கணிப்பிடப்படுகின்றது. முதலில் இறந்த தொழிலாளர் தோழர்களுக்கு நாம் அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற மாற்றங்களை எடுத்து நோக்குவோம். இந்தச் செயற்பாட்டினால் உலகத்தில் இடம்பெறும் பல நீதியான போராட்டங்கள் பலவற்றிற்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் தாக்குதலினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மிருகக்கரங்களை இறுக்கமாக பிடித்துக் கொள்ள ஏதுவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் தாக்குதலினால் பல சக்திகள் தமது நலனைப்பாதுகாக்கும் அடிப்படையில் செயற்பட தொடங்கிவிட்டன. இத்துடன் தேசியவாதம் பல வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க தேசியவாதம், இஸ்லாமிய தேசியவாதம் தோற்றம் பெற்றிருக்கின்றன. இந்தச் தேசியவாதங்கள் தத்தமது நிலையில் இருந்து அதனை ஆதரிக்கின்ற வேளையில் நியாயப்படுத்தப்படுகின்றது எனினும், எழுப்பப்பட்ட தேசியவாதக் கோசங்கள் தீமை விழைவிக்க கூடியவையாக அமைந்திருப்பதையும் பார்ப்போம்.

 

தற்பொழுது அமெரிக்கா மீது இனம் தெரியாத நபர்கள் நடத்திய விமானக் கடத்தலும், ஒரு விமானம் இலக்கை அடைவதற்கு முன்னாடியே வீழந்துள்ளது. ஏனைய விமானங்களை வேகமாக செலுத்தி உலக வர்த்தக நிலையத்தின் மீதும், பென்ரகன் (தாக்குதலின் விழைவைக் குறிப்பிடும் போது பென்ரகன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இராணுவத்தின் மீதான இலக்கு எனினும் பொதுமக்களைக் கொண்ட விமானத்தை கொண்டு மோதியதை ஏற்றுக் கொள்ள முடியாது.) மீதும் நடத்திய தாக்குதலின் காரணமாக தொலைக்காட்டி நிலையங்கள் எல்லாம் நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

இத்தாக்குதலை எதிர்க்காதவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாளர்களாக காட்டும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தாக்குதலை கண்டிக்காதபட்சத்தில் நாகரீக உலகைச் சாராதவர்களாகவும், ஜனநாயகத்தை விரும்பாதவர்களாகவும், legal அரசு (சட்ட   ஒழுங்கை மதிக்காத) வகையை ஏற்றுக் கொள்ளாதவர்களாவும் கணிக்கப்படுகின்றது. இதனை ஆய்வாளர்கள், ஊடகங்கள் மற்றும் இவர்களின் எஜமானர்களாக மேற்கு தேசங்கள் கூறிக் கொள்கின்றன.

 

தற்செயலாக நடைபெற்ற நிகழ்வா?

இந்தத் தாக்குதல் ஒரு தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக் கருத முடியுமா? அமெரிக்க தேசம் யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. யார் மீது இந்த யுத்தப் பிரகடனம்? கண்ணால் காணாத எதிரி என எல்லா தொடர்பு சாதனங்களும் ஊகித்துக் கொள்கின்றன. இங்கு இஸ்லாம் தீவிரவாதிகள் மீதான ஒடுக்கலின் முனைப்பு எனக் கொண்டு மௌனித்து விட முடியாது. இவர்கள் ஜனநாயத்தின், நாகரீகத்தின் வெளிப்பாடுகள் எனக் கொள்ளப்படுவது முதலாளித்துவம் சார்ந்த உற்பத்தி உறவுமுறை, நாகரீகம், சிந்தனை,  ஏவல் அரசுகளையாகும். இருப்பில் இருக்கும் பொருளாதார அமைப்பினால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து மீள போராடும் போது பயங்கரவாதம் என்ற வகைக்குள் அடக்கி விடுவதில் மிகவும் கவனமாக செயற்படுகின்றனர். இங்கு இஸ்லாம் தீவிரவாதம் என்று வரையறுத்து இதுதான் பயங்கரவாதம் என எந்த நிலையிலும் எவரும் கூறிவில்லை. தற்காலத்தில் போராட்டங்கள் கூட பெரும் தேசங்கள் ஆதரிக்கும் போதுதான் நியாயம் உடையாதாக கொள்ளப்படுகின்றது.

போராட்டங்களை நாகரீகம், ஜனநாயகம் என்ற போர்வையில் ஒடுக்குவதற்கு உலக சக்திகள் அனைத்தும் ஒன்றி சேர்ந்திருக்கின்றன. இஸ்மாமிய தீவிரவாதிகள் மீதான அல்லது பச்சை எதிரி மீதான எதிரி மனப்பான்மை நிச்சயம் நீண்ட காலத்திற்கு நிலைக்கக் கூடியது அல்ல. உலகின் பாகங்களில் வர்க்கப்புரட்சி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது இன்றைக்கு எதிரிகள் என்று கொள்ளப்படுபவர்கள் உடனேயே நட்புக் கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் சமூக ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்த போது அதனை எதிர்த்துப் போராடிய சக்திகள் அனைத்துக்கும் அமெரிக்கா உதவி செய்தது. உதவி பெற்றுக் கொண்டு போராடியவர்தான் ஒசாமான் பின்லாடின். அவர்களிடமே பயற்சி உதவி பெற்று அவர்களுக்கே சவாலாகவும், எதிரியாக தோற்றம் பெற்றிருக்கின்றார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஈராக்கில் குர்டருக்கு எதிராக சதாமிற்கு பௌதிக இரசாயனத்தை கொடுத்தனர். இவைமாத்திரம் அல்ல உலகின் பல பாகங்களில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகளிலும், சர்வாதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பாக இருந்தவர்களும் நாகரீகம், ஜனநாயம் பேசும் அமெரிக்காவே. வரலாற்றை ஒதுக்கி விட்டு தற்கால நிகழ்வுகளைப் பார்ப்பது பின் நவீன பார்வையாக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இவைகள் கருத்துக் கணிப்பின் போது வரலாறு பார்க்கப்படுவதில்லை.

 

மனித இனத்தின் எதிரி

 

1845-48 மெக்சிக்கோவுடனான யுத்தம்

1898 ஸ்பெயின் மீதான யுத்தம் (Puerto Rico) பற்றிய மோதல்

1898 கவாய் (Hawai)) இணைத்துக் கொள்வது

1901 பிலிப்பீனை பிரதேச அரசாங்கமாக இணைத்து (J William H Taft) கவர்னரா நியமித்தல்

1903 பனாமா ஆக்கிரமிக்கப்படல் பின்னர் பனாமா கால்வாய் உருவாக்கப்படல்.

1906 இல் கியூபாவில் பிரதேச அரசு நியமித்துக் கொள்ளல்

1912- 33 வரையில் நிக்கரகுவா மீது படைகளை தங்கவைத்துக் கொள்ளல்

1914 Haitiயில் தலையிடல்

1914 மெக்சிக்கோவில் Veracruz ஆக்கிமித்தல்

1915- 1934 வரை கெயிற்ரியில் தலையிடல்

1916- 1924 டொமினிக்கன் குடியரசில் தலையீடு

1945 யப்பானில் கீரோசீமா, நாகசாக்கி மீது அணுக்குண்டு வீச்சு

1947 பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான போர்ப்பிரகடனம் Turman, Mc Carty

1950 -1953இல் கொரியா யுத்தம்இ ஐ.நாவின் பெயரில் அமெரிக்கா தலையிட்டுக் கொண்டது.

1957 மத்தியகிழக்கில் பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான உதவிகள் (Eisenhowe)

1961 கியூபா மீதான ஆக்கிரமிப்பு தோல்வியில் முடிவடைகின்றது

1962 missile crisis (Cuba- US)

1962 லாவோஸ் தலையீடு

1964 பனாமா நெருக்கடி

1965 டொமினிக்கன் குடியரசிற்கு ஆயுதங்கள் வழங்கல்

1964 வியட்னாமிற்கு படை அனுப்புதல்

1965-73 வரை வியட்னாம் யுத்தம்

1966 இல் இந்தோனேசிய எதிர்ப்புரட்சிக்கு ஆதரவு கொடுத்தல்

1967 ஒக்ரோபர் 8 சர்வதேசியவாதியான சேகுவரா கொல்லப்படல் (பல தடவைகள் பிடல் காஸ்ரோவை கொல்ல முயற்சி எடுக்கப்பட்டது.)

1968 இல் வியட்னாமில் படுகொலை நிகழ்வு

1971 வங்கத்தின் மீதான இந்திய தலையீடை அடுத்து அமெரிக்கா தனது ஏழாவது கப்பற் படையை இந்துமாக்கடலில் கொண்டு வந்து நிறுத்தி அச்சுறுத்தியது.

1973 இல் சிலிநாட்டில் பினோச்சேயின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உதவுதல்

1979 நிக்கரகுவாப்புரட்சி நடைபெறல்

1983 கிரனடா மீது ஆக்கிரமிப்பு

1986 இல் கொண்டுராஸ் - ஈரான் ஆயுதவிற்பனை விசாரணை

1989 பனாமா ஆக்கிரமிப்பு

1991 இல் ஈராக் மீது தாக்குதல்

1999 யூக்கோஸ்லாவியா மீது தாக்குதல்

2000 கொலம்பியாவில் போதைப் பொருள் அழித்தல் என்ற பெயரில் கிருமிநாசினி தூவுதல்

ஈரானின் 270 பயணிகளுடன் விமானத்தை (flight 655) சுட்டுவிழுத்தியது இந்த விமானம் சுட்டு விழ்த்திய போது அன்றைய சம்பவத்தில் மூன்று பெரும்

போர்க்கப்பல்கள் பங்குபற்றியிருந்தன.

USS sides, Montogomery, Vincennes (Admiral Willian Roger  செலுத்தியிருந்தார்) என்பனவாகும்.

வின்சென்ஸ் என்ற கப்பலானது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சென்றதாகக் கூறியதுடன் யுத்தக் கப்பல் கூட ஈரானிய கடல் எல்லையினுள் வைத்தே விமானத்தை சுட்டு விழுத்தியது.

Uss aide கருத்துப்படி பிரயாணிகளுடன் சென்ற விமானம் சீரான வேகத்தில் சென்றது என்றும், ஆபத்துக்குரியதாக இல்லை எனவும் தெரிவித்துக் கொண்டனர்.

(தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்துக் கொண்டார் Willian Crowe)

தென்சூடான் கிறிஸ்தவ விடுதலைப்படைக்கு 4 மில்லியன் டொலர்இ ஈராக் (Irak National congress) எதிர்க்கட்சிகளுக்கு 4 மில்லியன் டொலர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் 2-3 பில்லியன் டொரை இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றது.

 

 

இவற்றின் மூலம் ஒரு நாட்டின் உள்விடயங்களில் தலையிடுவதை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதையே இவை நிரூபிக்கின்றன. அமெரிக்க தேசமோ அல்லது மற்றைய மேற்கு தேசங்களோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ பிறநாடுகளில் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் நிலைத்து நிற்குமா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பணம்படைத்த தேசங்களின் உலகக் கண்ணோட்டத்தின் பிறப்பிடமாகவும், அத்திவாரமாகவும் இருக்கின்ற ஒரு இடம் என்பதாலும், இருக்கின்ற அரசியல் அமைப்பு முறையானது மேற்கு தேசங்களின் அரசியல் பொருளாதார நலனுக்கு உட்பட்டதாக இருப்பதினாலும்  தொடர்ச்சியாக உதவிகளை செய்து கொண்டேதான் இருப்பார்கள். இதற்கு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் குறிப்பாக இஸ்ரேல் தேசத்தில் உலகக் கண்ணோட்டம், பொருளாதார உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும் வரை சாத்தியம் இல்லை. அதாவது பொருளாதார உற்பத்தி முறை மாற்றம் ஏற்படுவதின் மூலம் மாத்திரம் அல்லஇ அதற்குப் பிற்பாடும் அவர்களின் உலகக் கண்ணோட்டம் மாற்றம் கொள்ள அத்தேசத்து மக்கள் போராடும்வரை பிரச்சனையை மேற்கு தேசங்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தியே ஆகும்.  இஸ்ரேலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் மேற்கு தேசங்களிலும் உற்பத்தி முறை சார்ந்த வகையில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் அவ்வாறான உற்பத்தி முறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படச் சாத்திமேயில்லை.

 

அமெரிக்கா முதலாளித்துவ அரசியல்

சித்தாந்தத்தை கொண்ட ஒரு தேசம்.

பொருளாதார சித்தாந்தத்தை உலகின் பாகங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

ஜனநாயகம் என்ற போர்வையிலும், சந்தைப் நிலைமைதான் பொருளின் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி தனியார்மயமாதலை ஊக்குவிக்கின்றது. இதனை பெரும் நிறுவனங்களைக் கொண்டு செயற்படுத்துகின்றது.

பெருநிறுவனங்களை வறிய நாடுகளுக்கு நகர்த்துவதன் மூலம் தனது பொருளிற்கான சந்தையை பிடிக்கின்றது. இவைகள் தடுக்கப்படும் போது படைகளை அனுப்பி ஆக்கிரமிப்புச் செய்கின்றது.

தனது கொள்கையை அனுசரித்து நடக்கக் கூடி ஏவல் பிரதிநிதிகளை ஆட்சியில் அமர்த்துகின்றது. தேவையான போது ஆட்சிக் கவிழ்ப்புக்களை நடத்துகின்றது. இதுவரை பல நூற்றுக்கணக்கான தலையீடுகளை நடத்தியிருக்கின்றன. இவர்களின் கொள்கையினால் கடந்த காலத்தில் அமெரிக்க தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசங்களை மேலே கண்டோம். அதேபோல் இவர்களின் கொடுமையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது மனக்குழுறல்களை வெவ்வேறு வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக தனது பொருளாதார, அரசியல் சதித் திட்டத்திற்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்காவினதும் சக ஏகாபத்தியங்களான மேற்கு யப்பான் தேசத்தின் பொருளாதார நலனுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்த வகையிலேயே அமெரிக்காவானது உலகில் ஏன் உலக மனித இனத்தின் எதிரியாகின்றது. வெறுமனே தாக்குதல் நடத்தியதன் பலனாகத் தான் அமெரிக்க தேசம் உலகத்தின் பாதுகாவலனாக தோற்றம் கொடுத்துள்ள நிலையில் மேற்கு தேசங்களும், வறிய தேசங்களின் ஏவல் பிரதிநிதிகளும் அமெரிக்காவின் பின்னால் நிற்கின்றனர். இன்றைக்கு மேற்கு தேசங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராடுவதாகக் கூறிக் கொண்டு நட்புநாடுகளை அணிதிரட்டிக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத்தை எவ்வாறு முற்றாக தவிர்க்கலாம் என்பதற்குப் பதிலாக அவர்களை எவ்வாறு எதிர்காலத்தில் சமாளிப்பது என்பது பற்றியே தற்பொழுது மும்முரமாக சம்பாசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

யார் இந்த பின்லாடன்

இவர் சவூதி அரேபியாவில் 54 சகோதரர்களுடன் 17 வது ஆளாக பிறந்தார். இவரின் தகப்பன் சவூதி மன்னரின் நண்பரும் பெரும்கட்டிடம் கட்டும் நிறுவனத்தின் சொந்தக் காரரும் ஆவார். பின்லாடன் முதலில் லெபனான் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த போது அங்கு சென்று போராடினார். இந்தக் காலத்தில் எகிப்தின் ஹிகாத் தலைவரான (Mohammed Ayman Zawalir) மொகமத் சந்தித்தார். பின் சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்பு யுத்தத்தில் இணைந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றார். அன்றையக் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றில் இருந்தும் வந்திருந்த பல கூலிப்படைகளுக்கு தலைமை வகிக்கும் சந்தர்ப்பத்தையும் பெற்றுக் கொண்டார். இந்த கூலிப்படைக்கு அமெரிக்கா முழுஆயுதப்பயிற்சிஇ ஆயுதங்கள்இ நிதியுதவி ஆகியவை பெற்றுஇ அமெரிக்காவின் உற்ர நண்பன் தான் பின்லாடன். அகதிகள்இ போதைப்பொருள்இ மதஅடிப்படைவாதிகள்இ ஆயுதங்கள் போன்றவற்றை அமெரிக்கா விட்டு விட்டே சென்றது.

ஆனால் இன்று இஸ்லாமின்;இ அனைத்து அரபு உலகத்திற்கும் பாதுகாவலராகவும் தற்பொழுது தோற்றம் பெறும் பின்லேடனைப் பற்றி ஆப்பானிய புரட்சிவாதிகள் மிகவும் எச்சரிக்கையான கருத்தை முன்வைத்துள்ளனர். அதாவது அவர் தொடர்ந்தும் அமெரிக்காவினதும்இ உளவுத் துறையினதும் உறுப்பினராக தொடர்ந்தும் இருக்கலாம் என்பதே. “But who is Osama? He is a product of the CIA. For years he was an open and obedient servant of the Yankees, and it is possible that even now he may be linked to a section or sections of the imperialist powers. The American imperialists themselves created, bred and trained this “great terrorist”. The gangs connected to this “great mujahedin” havetaken an active part in a series of the most terrifying and barbaric acts against the masses of Afghanistan,with the direct and indirect consent, encouragement and support of the American imperialists and their allies, who have built up these gangs to use them against our people and invade our country.” (By the Communist Party of Afghanistan, 17 September 2001) (கோடிட்டது ஆ-ர்)

இது நிச்சயம் உண்மையானது தான். ஏனெனில் இவரின் அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட உலகத்தின் அனைத்து புரட்சிகர போராட்டங்கள் மாத்திரம் அல்ல. அரபு தேசியத்தின் போராட்டத்தையே இவாpன் செயற்பாடு பாதிப்பை உருவாக்கியுள்ளது. இவைமாத்திரம் அல்ல புரட்டாசி 11 க்குப் பிற்பாடு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒவ்வொரு நாடுகளும் உருவாக்கிக் கொள்ள அமெரிக்கா நெருக்கடி தொடுத்துள்ளதுடன்இ அமெரிக்காவைத் தொடர்ந்து நாடுகள் பலவும் சட்டத்தை இயற்றிக் கொள்ளவும் முடிவெடுத்துச் செயற்படுகின்றன. இந்தச் சட்டங்கள் மனித இனத்தின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் இருக்கின்ற அரசாங்கத்தை கனவில் கூட நிந்திக்க முடியாதபடி அமைந்திருக்கின்றன. எவ்வாறெனில்

 (1993 World Trade center), 1998 Kenya and Tanzania, prøvde sprenge atomkraftverk  -2001 USS Cole 17 soldater drept i Yemen)

 

 

தேசியவாதக் கோசங்கள் 

அமெரிக்க தேசியவாதத்தினைப் பார்க்கின்றபோது godbless america, We are americans  என்றகோசம் we shall overcome என்றபாடல் போன்றவையும், கொடியை அசைத்துக் காட்டுவதும், கொடியின் வடிவத்தில் உடுப்புக்கள் அணிவது போன்றவை முன்னிறுத்தப்படுகின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக சிலுவைப்போர்  பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பாடல் இசைக்கப்படல்

தொடர்ச்சியான இணைந்த பரஸ்பர ஒத்துழைப்புக்கள்

நடிகர், பிரமுகர்களின் நிகழ்ச்சிகள் பணம் சேகரிப்பு ( பல்மதவழிபாடுகள்)

பலர் சுயமாக படைகளில் இணைந்து சேவை செய்வதற்கு முன்வந்து

 

இதற்குமாற்றீடாக இஸ்லாமியதேசியவாதமானது ஹிகாத் எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தப் பிரகடனம் கூட ஒரு வரலாற்றின் நிகழ்வு என்பதை இக்கட்டுரையில் பலவற்றில் பார்க்கப்படுகின்ற போதிலும் இப்பிரகடனம் சமயத்துக்கும் அரசியலுக்கும் தொடர் என்ன என்பதைப் பார்க்கின்ற போதே இந்த சின்னத்தின் உள்விளக்கத்தை அறிந்து கொள்ள முடியும்.

 

ஹிகாத் என்றால் என்ன?

ஹிகாத் என்னும் போது கடவுளை (அல்லாவை) நம்பும் உலகமும், அதனை நம்பாத உலகத்தையும் குறித்து நிற்கின்றது. 

அமெரிக்கா பெரிய சாத்தானாக பார்க்கப்படுகின்றது, உலகில் அக்கிரமத்தை உருவாக்குபவர்களாக பார்க்கப்படுகின்றது.

 

மதங்களை அரசியல் நோக்கத்திற்காக பாவிப்பது உலகில் புதுமை அல்ல. காலவரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப்பட்டுத் தான் வந்திருக்கின்றன. காலவோட்டத்தில் பாவிக்கப்பட்டாலும் ஒரு சக்தியின் நலன்பட்டதாகவே இருந்திருக்கின்றன.

 

 

பொது அடையாளத்தை முன்வைத்தல்

இந்தத் தாக்குதலின் மூலமாக அமொpக்க ஜனாதிபதியும், ஈராக் அதிபர்களும் தமது பதவியை ஸ்திரப்படுத்திக்க கொள்ள உதவி புரிந்ததே ஒழிய நாளாந்தம் வறுமையில் வாடுபவர்களுக்கு உழைக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வித பலனும் கொடுக்கவில்லை. இந்தத்தாக்குதலின் மூலமாக இஸ்லாமிய மத ஒற்றுமையும், அரபு இன ஒற்றுமையையும் பொது அடையாளச் சின்னதாக முன்னிறுத்தி மத்திய கிழக்கு மக்களை தனக்கு ஆதரவாக திரள சந்தர்ப்பம் பொறுத்த அதேவேளை மனித குலத்தை நேசிப்பவர்களும் ஈராக்கிற்கு எதிராக எதிரான தாக்குதலை எதிர்த்து நின்றனர். மனித குல முன்னேற்றத்தை ஆதரிப்பவர்களும் ஈராக்கின் சர்வாதிகாரத்தை ஆதாpப்பவர்கள் எனக் கொள்ள முடியாததுஇ அத்துடன் இத்தாக்குதல்களை ஈராக்கிய ஜனாதிபதியின் எதிர்ப்பாளர்களும் எதிர்த்து நின்றனர். இங்கு ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார நலன்களையும் மக்கள் நலன்களையும் பகுத்தறிந்து உழைக்கும் மக்களுக்கு விரோதமாக எதிர்க்கட்சிகள் சில தாக்குதலை ஆதரித்தனர். இஸ்லாமிய மத ஒற்றுமை பயன்படுத்தி சதாம் ஆதரவாக திரட்டிக் கொண்டாலும் மேற்கு நாடுகள் வரையறுத்துக் கொள்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற வரையறைக்குள் சதாமை அடிப்படைவாதியாக கொள்ள முடியாது. ஆனால் சாதாரன மக்கள் ஈராக்கிற்கு கொடுத்த ஆதரவை ”இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்று முத்திரை குத்தி தப்பித்துக் கொள்ளவும் முயற்சி செய்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது நேரிடையாகவே மேற்கத்தைய, மெரிக்க எதிர்ப்பு என கூறி எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் ஒரே அளவு கோள் கொண்டு கணிப்பிட்டு  ஏகாதிபத்தியங்கள் திசை திருப்பும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதேவேளை அமொpக்காவின் இந்தத் தாக்குதல் அமொpக்க அதிபர்  தனது  பதவியை பாதுகாக்கும் நோக்குடன் நடத்தப்பட்டதாக கருதப்படுகின்றது. இந்தக் தாக்குதல் இடம் பெற்ற நேரமும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டும் (impeachment) மணித்தியால வித்தியாசத்தில் இடம் பெற்றது. தாக்குதலை அடுத்து கொங்கிரசில் எடுக்க விருந்த வாக்கெடுப்பு பின்போடப்பட்டது. பலகாலங்கள் பின்போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வாக்கெடுப்பு மறுநாளே வாக்கெடுக்கப்பட்டது. தாக்குதலுக்கும் வாக்ககெடுப்பதற்கும் சம்பந்தம் இல்லை என காட்டப்படுவதற்காக தாக்குதல் சிலநாட்கள் நீடிக்கப்பட்டது. அதேநாளின் அவாpன் துணைவியார் நாடு இக்கட்டான சூழலில் இருப்பதாகவும்இ படையினர் யுத்த களத்தில் இருப்பதாகவும் அனைத்து முரண்பாடுகளையும் மறந்து விட்டு நாட்டின் நலனில் அக்கறை கொண்டு ஒன்று சேரும் படி இரங்கலாக வேண்டுகோள் விடுத்தார். இங்கு இரண்டு விதமான தேசத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்களை உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அமொpக்காவும்இ ஈராக்கும் தத்தமது தேசத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இரண்டும் தேசிய கோசங்களே இரண்டு விதமான நாடுகள் தத்தமது தேசங்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்படுவதை ஒவ்வொரு தேசத்தவரும் சரியென வாதிடுக்கின்ற காரணத்தால் இந்த மாதிரியான கோசங்களை மக்கள் முன் வைக்கின்றனர். அதாவது அமொpக்காவும் ஈராக்கின் தேசியத்தை முன் வைத்து மக்களை அணிதிரட்ட முற்படுகின்றனர். இரண்டும் சுரண்டும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் தாம் ஒரு தேசத்தவர் தாம் ஒரே இரத்தம் என்ன நடந்தாலும் எமது தேசம் என்ற எண்ணப்பாடு மக்களிடத்தில் உறைந்திருப்பதினால் அந்த உணர்வைப் பாவித்து ஒன்று சேர்க்க முயற்சிக்கப்ட்டது. இதன் மூலம் தமது வர்க்க நலனை பாதுகாக்க முற்பட்டனர் என்பதை இங்கு கவனிக்கப்பட வேண்டும். பொதுச் சின்னத்தை அடையாளத்தை மையப்படுத்தி தேசிய இனங்களை அணிவகுப்பது அனைத்து தேசியப் போராட்டங்களுக்கும் பொதுவானதாகும். இங்கு இரண்டு வகை தேசிய இனக் கோசங்களுக்கும் இடையே நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் ஈராக்கை பொறுத்தவரை  ஒடுக்கும் வர்க்கம் ஆனால் அது மிகப் பொpய வல்லரசுடன் மோதுவது மாத்திரம் அல்ல ஈராக்கையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகின்றது. மக்கள் இல்லாது நாடு இருக்க முடியாது ஈராக் அதிபரை பொறுத்தவரை அமெரிக்காவின் நெருக்குதல்களை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்துள்ளார். அதாவது ஈராக் மக்கள் தம்மீது ஈராக் அதிபரும் பொருளாதார அமைப்பும் புரியும் ஒடுக்குமுறையை இரண்டாம் பட்சமாக்கி விட்டு அல்லது அடக்குமுறையை புரிந்து கொள்ள முன்னராக அமெரிக்காவினதும் அவர்களின் கூட்டாளிகளின் தாக்குதலே முன்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு முரண்பாடுகள் என்பது இரண்டாம் பட்சமாகமாகின்றது. இவ்வாறான நிலையே இலங்கை போன்ற தேசிய இனப்பிரச்சினை உள்ள நாடுகளில் காணப்படுகின்ற தேசியமும் வர்க்கப் போராட்டம் தான் ஆனால் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறை என்பது (Universal) சர்வதேசத்திற்கும் பொதுவானதாகும்.

 

 

சந்தேகங்கள்

சந்தேகம் கொண்டு வேற்று இனத்தவர்களைப் பார்க்கும் நிலை என்பது ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு தேசத்தில் தனக்கு எதிரிகள் உள்ளனர் என சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலை ஏற்படுமாயின் பல இன்னல்களை சாதாரண மக்கள் சமாளிக்க வேண்டியேற்படும். மற்றைய இனமக்களை சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலை என்பது அமெரிக்க வரலாற்றில் புதியவை அல்ல. இரண்டாம் உலக யுத்த காலத்தில் யப்பானிய மக்கள் பல விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த மக்கள் அந்த முகாம்களில் இருந்த வேளையில் தமது உழைப்பை இனாமாக கொடுத்தனர். விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அண்மைக் காலத்தில் தான் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒரு நாட்டில் உள்ள இனத்தவர் இடையே சந்தேகம் தோன்றும் இடத்தில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும். ஓரு இனத்தின் மீது நடத்தப்பட்ட பாரபட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது மோதல் நிலை தோன்றுவதற்கு நிச்சயம் இடமுண்டு. அமெரிக்காவை எடுத்துக் கொள்ளும் இடத்தில் கறுப்பர் வௌ;ளையர் என்ற மோதல் தற்காலத்தில் நடந்து வரும் ஒன்றே. பல வருடங்களுக்கு முன்னர் கொரிய வம்சாவழியினருக்கும் மற்றைய இனத்துக்கும் மோதல் நடந்திருகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை பல மில்லியன் முஸ்லீம் மதத்தை பின்பற்றுவர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

அரசியல் ரீதியாக மக்களை நம்பி போராட வேண்டும். சொந்தச் சக்தியை நம்பிக் கொள்ளாமல் எதிரிகளை நம்பி போராட்டத்தின் தந்திரோயத்தை வகுக்கும் போகு முதலில் நண்பனாக இருப்பவர்கள் பின்னர் எதிரியாக மாறுவர் என்பதை வரலாறு பல தடவைகள் நிரூபித்துள்ளது.

காட்டிக் கொடுப்புகள், காழ்ப்புணர்ச்சி, விமானங்களில் கெடுபிடி அதிகரிக்கும்இ இச்சைகள் அதிகரிக்கும்இ மாற்று இனத்தவர்கள் சந்தேகம் கொண்டு பார்க்கப்படுவர்.

கடந்த கால வரலாற்றில் சோவியத் என்ற பேய் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் உலகின் நாடுகளை சோவியத் ஒன்றியம் தனக்குள் ஆக்கிரமித்து அடக்கும் என்ற நிலை இருந்தது. சோவியத் எதிர்ப்பை ஆழும் வர்க்கம் திட்டமிட்டே பிரச்சாரம் செய்து வந்திருந்தது. இந்தப் பிரச்சாரத்திலும் இடதுசாரிகளின் பலபிரிவினர் பாதிக்கப்பட்டிருந்தனர். மொஸ்கோவை ஆதரித்தவர்களும் சமூக ஏகாதிபத்தியம் என சோவியத்தை வரையறுத்துக் கொண்டவர்களும், உலகப் புரட்சிக்கு இடையூறாக இருக்கின்றது என்ற காரணத்தினால் கிட்லருடன் கூட்டுச் சேர்ந்து சோவியத்தை அழிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இவர்களின் வீடுகளை கண்காணிக்கப்பட்டன.

தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன.

தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதில் பாரபட்சம் காட்டப்பட்டன.

தொழிற்சங்கத்தில் முக்கிய பதவிகள் இடமளிக்கவில்லை.

நாசிக்களின் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்தெந்த பிரிவுகளில் சேர்ந்து போராடினர் என முழுமையாக விசாரணை செய்யப்பட்டனர்இ குறிப்பாக கைதிகள் ஏன் சிறைப்பட்டிருந்தனர் என்பதை தீரவிசாரித்து சமூகத்தினுள் இணைக்கப்பட்டனர். (அதாவது பொதுவுடமைவாதிகள் தேசிய சக்திகளை இணைத்து எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர் எனின், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றின் வழிகாட்டலில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களையும் தெளிவாக பாகுபாடுபடுத்தினர்)

அன்றாடம் எமது வாழ்க்கை முறையில் அமைந்து கொண்ட வெளிப்பாடுகளின் மூலம் வெளிப்படும் தன்மைகள் எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவைகள் பெரும் வேகம் கொண்டு எதிரிக்கு சேவகம் செய்யாவிடினும், இவற்றின் மூலம் எதிரிகள் தொடர்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்து விடும். இவற்றில சிலவற்றைப் பார்ப்போம், இவைகள் எமது சமூகத் தன்மைகளுடன் ஒன்று கலந்தவையாகும்.

·      எதிர் அரசியல் கருத்துக் கொண்டவர்களை பட்டப்பெயர் கொண்டு அழைப்பது.

·      குடும்ப உறுப்பினர்களிடையே அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் இடத்தில் இவர்கள் இரகசிய முறையை அறிந்து கொள்ளாத காரணத்தினாலும், பெயர் பெறவேண்டும் என்ற காரணத்தினால் சமூகத்தில் கதையாக பரவுகின்றது.

·      குடும்ப உறுப்பினர்கள் தமது தேவையை பூர்த்தி செய்வதற்காக மிரட்டும் தன்மையைக் காண முடியும்.

·      ஊர்க்கதை கதைப்பதில் எம்மவர்கள் அதிகம் பழக்கப்பட்டவர்கள், தமக்கு கிடைக்கும் விடயங்களை கண், மூக்கு, காது வைத்து மிகைப்படுத்தி உரையாடுவதன் மூலம்

·      அரசியல் எதிர்த்துக் கொண்டவர்களை அரசயில் ரீதியாக சமாளிக்க முடியாத காரணத்தினால் வெளியாரின் உதவி கொண்டு எதிர்க் கொள்ள முற்படுவது.

 

 

 

மாற்று இனத்தவர்கள் மீது தாக்குதல்

தாக்குதல் நடைபெற்றதன் எதிர்விழைவாக தாடி, தலைப்பாகை வைத்தவர்கள் என கண்டவர்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதல் தொடுத்தனர். பழிவாங்கும் நடவடிக்கைகள் கனடாஇ மற்றும் ஐரோப்பிய தேசங்களுக்கும் தொடர்ந்தன. அரிசோனா (Arizona) என்ற ஒரு சீக்கியர் சுட்டுக் கொள்ளப்பட்டார். மொத்தம் 3 நபர்கள் இறந்தனர்.  (Ontario) ஒன்ராறியோவில் 5 பாடசாலைச் சிறுவர் இம்சிக்கப்பட்டனர். நெதர்லாந்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டது 

பலர் தமது தாடி, தலைமுடிகளை சவரம் செய்தனர். வெள்ளையர்கள் போடும் உடுபுடவைகள் போல் உடுத்தவும் செய்தனர்.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக, நாகரிகத்திற்கு எதிரானதாகவும்,  ஜனநாயக பாரம்பரியத்தினை அறியாதவர்களாக சிந்தரிக்கப்படுவர். ஏனெனில் அமெரிக்காவானது ஜனநாயத்தின் பாதுகாவலராக உறுதிப்படுத்துபவராக இருப்பதினால் ஆகும்.

முஸ்லீம்கள் மீது காழ்ப்புணர்ச்சியானது ஊடகங்கள் செய்தியை பரப்பிய முறையில் ஏற்பட சாத்தியம் இருக்கின்றன. உலகத்தில் ஒருவருக்கும் துன்பம் விழைவிக்காத ஒரு தேசத்தின் குடிகளுக்கும், தேசத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எப்பவும் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடங்கலாம் என்ற மாதிரி செய்திகள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

 

 

சொற்பதங்கள்

ஊடகங்கள் நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக அதனை வர்ணிக்கும் பொருட்டு பல சொற்கள் பாவிக்கப்படுகின்றன. பாவிக்கப்படும் சொற்பதங்கள் போலி உருவங்கொண்டதாக இருக்கின்றது. போலி உருவம் எனக் கொள்கின்ற போது எல்லாத் தேசங்களிலும் பாதிக்கப்படும் நிலைகளில் சமத்துவ நிலை கொண்டு வர்ணிப்பதாக அந்தச் சொல் அமைந்து கொள்ள வேண்டும். சொற்பதங்கள் ஒரு தேசத்தில்இ ஒரு இனத்திற்கு பாதிப்பு வரும் போது மாத்திரம் பாவிக்கப்படுவதாக இருக்கக் கூடாது.

அமெரிக்க ஜனாதிபதி தனது உரையில் திரும்பத்திரும்ப கூறிய விடயத்தை இங்கு நோக்குவது அவசியமாகின்றது. தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் சேவையுணர்வுடனும்இ ஒருவருக்குகொருவர் ஆதரவுடனும் நடந்து கொண்டதை இட்டு உலகத் தலைவர்கள் ஆச்சரியம் தெரிவித்திருப்பதாகவும் நியூயோக் மேயருடன் நடைபெற்ற தொலைபேசி சம்பாசைனையில் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் அவரும் மக்கள் ஒருவருக்கொருவரும்இ பொறுமையுடனும்இ தேசத்தின் மீது பற்றுக் கொண்டதையும் பாராட்டினார். இந்த விடயத்தில் ஒரு சில விடயங்களை உற்றுநோக்குவது பொருந்தும். உலக வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க தேசத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த அழிவின் மூலமாக அழிவு என்ன என்றால் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கின்றது. தனித்துவவாத உறவில் வாழ்ந்து வந்த சமூகம் இழப்பு என்று வரும்போது ஒன்று சேர்ந்துள்ளது. ஆனாலும் இந்த இழப்பின் மூலமாக ஒரு வெறியை ஏற்படுத்தியதன் மூலம் ஒன்றிணைவு இடம் பெற்றுள்ளது. ஆனாலும் இந்த இணைப்பு தனித்துவவாத வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்க முடியாது. இன்றைய பரஸ்பர ஒத்துழைப்பு என்பது வெறும் துன்பியல் கொண்டதேயன்றுஇ பிரச்சனையை முழுமையாக விளக்கம் கொண்டால் அன்று.

பிரச்சனையை புரிந்து கொள்வது என்பது அமெரிக்க தேசத்தின் அரசியல்இ பொருளாதாரத்தை  புரிந்து கொள்வதும்இ அரசியல் பொருளாதார கொள்கையினால் ஏற்படும் விழைவுகளையும் விளங்கிக் கொள்வதில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அமெரிக்க தேசத்தவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஏற்பட்ட விழைவின் நிமித்தம் தமது தேசத்தின் அரசின் கொள்கைக்கு ஆதரவளிப்பதானதுஇ போராட்டங்கள் நடைபெறுகின்ற தேசங்களில் ஒவ்வொரு தேசிய இனமும் தத்தம் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகளை ஆதரிக்கும் நிலைக்கும் வித்தியாசம் இருப்பதாக தோன்ற முடியாது.

அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதையிட்டு தமது தேசத்திற்கு உரைநிகழ்த்திய புஸ் தமது நாட்டை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கின்றார்கள் எனத் தெரியவில்லை என கூறிக் கொண்டார். (விபரமாக வேறு இடத்தில் பார்ப்போம்.) மேலும்இ அத்துடன் பயங்கரவாதிகளின் நாடுகளைப் போல் அல்லாமல் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் சுதந்திரத்தையும்இ பேச்சுசுதந்திரம்இ சமயத்தை பின்பற்றும் சுதந்திரம் போன்றவற்றை உடைய நாடாக இருப்பதாகவும் கூறிக் கொண்டார். இந்தப் பேச்சானது அமெரிக்க தேசத்தவர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறந்த பேச்சாக அமைந்து கொள்ளும். ஆனால் வெள்ளையர் தேசத்தவர்கள் தவிர்ந்த மற்றைய மக்களிடம் கருத்தறிந்து ஒரு ஆய்வினை வெளியிடும் இடத்தில் பல மாறுபட்ட அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ள முடியும். புஸ் தூக்கத்தில் இருந்த எழுந்தவர் போல் உரைநிகழ்த்துவது இன்றைய காலத்தில் கோட்பாட்டில் அமைந்த ஒரு தந்திரோபாயமாகும். கடந்த காலத்தை பார்க்கமாமல் நிகழ்காலத்தையும்இ எதிர்காலத்தையும் நோக்கிப்பார்க்கும் படி கோருவது உலக மக்களை தமது கோரிக்கையின் நிமிர்த்தம் இசைந்து கொள்ள வலியுறுத்தும் ஒரு தந்திரோபாயமாகும்.

பேச்சுக்குப் பேச்சு நாகரீகமாக நடந்து கொள்ளல்இ நாகரீகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட யுத்தம் எனவும் உரைக்கப்படுகின்றது.

போராடிக் கொள்வதில் உள்ள வகைமுறை தாம் வரைந்த அமைப்பு வடிவத்தினுள் அமைந்து கொள்ள வேண்டும்.

ஆட்சி முறை தமது வடிவத்தை ஒத்ததாக அமைந்து கொள்ள வேண்டும்.

தாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் உறவை வைத்துள்ளனரே அவ்வாறே மற்றைய தேசத்தவர்கள் உறவைக் கொள்ள வேண்டும்.

இவர்கள் நாகரீகம் எனக் கூறுகின்ற போது உலகில் அனைத்துப் பாகங்களிலும் ஒரே மாதரியாக இருந்ததில்லை. உலகில் எகிப்துஇ சிந்துவெளிஇ மெசப்பத்தோமியாஇ மாயஇந்தியஇ பபிலோனியாஇ சீனம் போன்ற இடங்களில் மனித இனம் வளர்ச்சியடைந்துதான் இருக்கின்றன. இந்த நாகரீகத்தின் வளர்ச்சியும் ஒரு காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. ஓவ்வொரு கலாச்சாரமும் தனது சந்ததிக்கு விட்டுச் சென்ற பல உன்னதமிக்க கண்டுபிடிப்புக்களினால் இன்;று உலகம் பலன் பெற்றிருக்கின்றன. நாகரீகம் என்ற சொற்பதத்தின் உள்ளடக்கம் என்பது இன்று ஒரு மக்கள் கூட்டத்திற்கு சொந்தமானவற்றையே முன்னிறுத்தப்படுகின்றது. ஆனாலும் ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சியிலும் அந்தந்தச் சமூகத்திற்கு உரிய நாகரீகங்கள் இருக்கின்றது என்பதை இங்கு மறுக்கப்படுவதுடன்இ தமது கருத்தமைவை திணிக்கின்றனர்.

இவ்வகையான நாகரீகம் வளர்ச்சியடைந்து சிதைந்த பின்னர் தொழிற்துறை வளர்ச்சியடைந்த பின்னர் ஏற்பட்ட நாகரீகம் தேசங்களைக் கடந்து வந்து மற்றைய தேசத்தை ஆட்சிக்குட்படுத்திஇ அடிமைகளாக மனிதர்களை (இலங்கை போன்ற தேசத்தில் இருந்தது சுதந்திர அடிமைவகையே) கொண்டு உபரி உழைப்பைப் பெற்றுக் கொண்டு இன்றைக்கு நாகரிகத்தின் முதல்வர்களின் முன்னோர்கள் வளர்ந்தனர். இவர்களுடைய நாகரீகத்தினை அன்றைய காலத்தில் வாழ்ந்த மனித இனம் தன்னால் முடிந்த வரை போராடியிருந்தது. ஆனால் அன்றையக் காலத்துப் போராட்டங்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டன. அடிமைகளாக இருக்கையில் போராடி போது உயிருடன் எரிக்கப்பட்டனர்இ முடமாக்கப்பட்டனர். இவைகள் அன்றைய கால நாகரீகத்தின் தோற்றப்பாடு தானே?

இன்றைய உலகில் நாகரீகம் தான் என்ன கூறுகையில் முதலாளித்துவ வர்க்கச் சமூக உறவும்இ முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு தனிமனிதர்களும்இ தேசங்களும் இசைந்து நடைப்பதையே கருதிக் கொள்கின்றனர். இதன் காரணமாக உடனடியாக அனைத்துப் பிரிவினரும் தாக்குதலையும்இ போராட்ட முறைகளையும்இ அமெரிக்காவையும் ஆதரித்துக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு செய்யாத பட்சத்தில் கனிவிரக்கம் அல்லாதவர்களாகவும்இ நாகரீக நடப்புக்குள் அடங்கி நடக்கத் தெரியாதவர்களாகவும்இ

 

சிலுவைப் போர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலுவைப் போர் உலக வரலாற்றில் கிறிஸ்தவம் இஸ்லாமின் மீது தொடுத்த யுத்தத்தை குறிக்கின்றது. யுத்தத்தை குறித்து நிற்பது மாத்திரம் அல்ல பல லட்சக் கணக்கான மக்கள் இந்த யுத்தத்தினால் மடிந்து போயினர். இன்று 

((grusomt, barbarisk, hensyns)

நல்லதுக்கும் (Good and evil) (தீயதுக்கும்) சாத்தானுக்கும் எதிரான போராட்டம்

பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்! ஒன்று எம்முடன் அல்லது பயங்கரவாதிகளுடன் (புஸ்)

((hunt and punish என தெரிவித்தது மாத்திரம் அல்ல அடைக்கலம் கொடுத்தவர்களும் ஒரே தண்டணை பெறுவர். இது கடந்த சோற்றுப் பாசல் கொடுத்தவர்இ

 

(grusomt, barbarisk, hensynløs)

நல்லதுக்கும் (Good and evil) (தீயதுக்கும்) சாத்தானுக்கும் எதிரான போராட்டம்

பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்! ஒன்று எம்முடன் அல்லது பயங்கரவாதிகளுடன் (புஸ்)

(hunt and punish என தெரிவித்தது மாத்திரம் அல்ல அடைக்கலம் கொடுத்தவர்களும் ஒரே தண்டணை பெறுவர். இது கடந்த சோற்றுப் பாசல் கொடுத்தவர்,

 

(--“--“Jihad against American blasphemy”)

 

நாகரீகம்?

நாகரீகம் பற்றி மேற்கு தேசங்கள் அதிகம் பேசுகின்றன. பயங்கரவாதிகளின் தாக்குதல் நாகரீக உலகத்திற் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என நாளாந்தம் பேசப்படுகின்றது. நாகரீகத்தை கற்றுக் கொடுக்க முற்படுபவர்கள் தற்காலத்தில் என்ன செய்கின்றனர். பணத்தை கொடுத்தே தமக்கு இசைவாக ஆட்சியாளர்களைஇ சர்வதேச மன்றத்தை விலைக்கு வாங்குகின்றனர். இவை நாகரீகம் என்று கருதும் போது பணம்படைத்தவர்கள் எதுவும் செய்யலாம் என்ற ஒரு பொது விதியை நிலை நிறுத்த முனைவதையும் நாம் அவதானித்துக் கொள்ள முடியும். 580 millon $ to UN கொடுக்கப்பட வேண்டியிருந்த தொகையில் சுமார் 25-28 வீதமான தொகையை கொடுத்தனர். இதன் மூலம் தன்மீது இருந்த ஆத்திரத்தை குறைப்பதற்காக வேண்டியேயாகும். முன்னர் இரண்டு முக்கிய பொறுப்புக்களில் அங்கம் வகிக்கும் சந்தர்ப்பத்தை இழத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Northern allianse 600 milloin $ Afghan refugees)(மேற்கு தேசங்கள் தற்பொழுது கொடுத்தார்கள்)

பாக்கிஸ்தான் செலுத்த வேண்டிய கடனைக் குறைத்துள்ளதுடன்இ ஏற்படுத்தியிருந்த பொருளாதார தடையை தளர்த்தியுள்ளது. அத்துடன் ரலிபான் (ழேசவாநசn யடடயைளெந) எதிர் அணிக்கு உதவியளிக்கவும் முன்வந்துள்ளது. அத்துடன் குண்டையும் போட்டுவிட்டுஇ உணவுப் பொதிகளையும் விமானத்தில் இருந்து  போட்டனர். (மேற்கு தேசங்களே கொசவோ மக்களை பகிர்ந்து எல்லா நாடுகளிலும் அகதிகளாக தற்காலிக தஞ்சம் கொடுத்தீர்கள் முடிந்தால் 2 மில்லியன் மக்களையும் உங்கள் தேசங்களில் அகதிகளாக அடைக்கலம் கொடுக்கலாம் பார்ப்போம். அப்போ வேண்டுமென்றால் நீங்கள் கொண்ட ஜனநாயக மீட்சிமீதான பாசத்தை ஏற்றுக் கொள்வோம்.)

 

 

அமெரிக்க மண்ணில் பாதிப்பு ஏற்பட்டால்

உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் போது அதற்கான வைத்திய உதவிகள்

நட்டஈட்டுக் கோரிக்கை எழும்

ஒரு வீடு துப்பரவு செய்ய 1500 டொலர் செலவிடப்பட்டதாக பிபிசி செய்தியில் அறியமுடிந்தது. கூலி அதிகமாக இருப்பதனால் மீளவும் ஒன்றை உருவாக்கிக் கொள்வதில் உள்ள செலவினங்கள் அதிகமானமாகும்.

அமெரிக்கா என்ன எம்மைப் போல் பிச்சைக்கார நாடா? அமெரிக்கா குண்டு போட்டுவிட்டுப் போவார்கள் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட இடத்தை கட்டியெழுப்புவதற்கு உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்கும். அதனைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதுடன், எமது நாடுகளும் கடனாளியாக மாறி, பின்னர் வரலாறு முழுவதும் கடன் பெற்றே தேசம் முழுவதும் பணம்படைத்த தேசங்களுக்கு சொந்தமாகிவிடும்.

தாக்குதலின் பின்னர் வேலை இழந்தவர்கள் 100 000 எனக் கொள்ளப்படுகின்றதுடன்இ வேலையிழந்தவர்களுக்காக 3 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளனர். இங்கு தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் அரசில் தனிநபர்களிடையேயான உறவில் மாற்றங்கள் தோன்றியுள்ளதை ஊடகங்களின் மூலம் அறியக் கிடக்கின்றன. இவ்வகையான புதியவகை உறவு முறை என்பது உருக்குழைந்த நிலையில் இருக்கின்ற சமூக உறவுகளை மறுபடியும் ஒட்டவைக்கும். ஆனாலும் முன்னர் வாழ்ந்த முறையில் ஏற்பட்ட பழக்கத்தினால் தற்போது ஏற்பட்ட சமூக உறவு வகை கூட காலம் செல்ல பழைய நிலைக்கே இட்டுச் செல்லும். அதனால் அமெரிக்கர்களிடையே ஏற்பட்ட மாற்றம் கூட தற்காலிகமானதே.  இதனால் மக்களின் நுகர்வில் கூட மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைக் கண்டுகொண்ட வர்த்தக வர்க்கத்தவர்களின் முயற்சிக்கு இடையூறாக அமைந்து விடுகின்றது. இதனால் முன்னர் பொருட்களை வாங்கியது போல மீண்டும் அதே பழக்கத்தை கொண்டுவர புஸ் கூட வேண்டுகோள்விடுத்துள்ளார்.

நாளாந்த வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வேண்டுமென்று பல முயற்சிகள் செய்யப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதில் புஸ் கலந்து கொண்டு உற்சாகத்தை ஊட்ட முயற்சி எடுப்பது. விமானத்தில் பயணம் செய்யும்படி கோரிக்கை விடுவது போன்றவாறு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு இரண்டு விடயத்தைப் பார்க்க முடிகின்றது. உதிர்ந்த சமூகம் மறுபடியும் உறவை மேற்கொள்ள முயற்சி எடுப்பதும் இது தொடர்ந்தும் நிலைபெறுமா என்பதும்இ மக்களின் நுகர்வில் மாற்றம் ஏற்படுகின்ற போது பொருளாதாரத்தில் விழுக்காடு ஏற்படும் எனப் பயம் கொள்வதுமாகும்.

தற்பொழுது தொடர்ந்து வந்த தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினர் தொகையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டதை எதிர்த்து பல நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் 2.11.01 அன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ்வமைதி ஆர்ப்பாட்டம் நகர பாதுகாவலர்களுடன் கைகலப்பில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் தேசத்தின் வீரர்களாக கணிக்கப்பட்ட தீயணைக்கும் படையினர் 12வர் கைது செய்யப்பட்டனர். தேசத்தின் வீரச்சின்னம் மாத்திரம் அல்ல கிடைக்கப்படாதா தமது சுமார் 350 சகாக்களின் இறுதியடக்கம்இ மற்றும் காணாமல் போயுள்ளவர்களை கண்டெடுத்து மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்றும்இ இதனால் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் தொகையை குறைக்கக் கூடாது என கோரிக்கையிட்டே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

·      தேசிய வீரர்கள் புறம் தள்ளப்பட்டனர்.

·      காணாமல் போயுள்ளவர்களை கண்டுஎடுப்பதில் காலத்தை போக்குதல்.

·      பொருளாதாரத்தை கணக்கில் எடுத்து ஆள்குறைப்பில் ஈடுபட்டிருக்கின்றது.

இந்த மூன்று விடயத்தை பெரிதாகக் கொள்ளாமல் பயங்கரவாதிகளை கைது செய்வதற்கென அன்னிய நாட்டின் மீது போரைத் தொடுத்துள்ளது. இங்கு சொந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கின்றனர் என்பதை இதன் மூலம் அவதானிக்க முடியும். இதனை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்வது இலகுவல்ல. ஏனெனில் முதலாளித்துவ நிறுவன அமைப்பினுள் சமூக மயப்பட்ட மக்கள் ஒரு புரட்சிகர சிந்தனையின் தாக்கம் இல்லாது ஏகாதிபத்திய போலித்தனத்தை நிரூபிக்க முடியாது.

தற்பொழுது தாக்குதலின் பின்னால் அதில் இருந்து வெளியேறிய தூசியைத் சுவாசித்தவர்கள் மூச்செடுக்கக் சிரமப்படுவதாகவும்இ முட்டு இழுக்கின்றனர் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் சுகயீனம் ஏற்படும் பட்சத்தில் ஒவ்வொருவரும் மருத்துவத்திற்கு என செய்யப்படும் காப்புறுதி பணத்தில் இருந்தே உபயோகப்படுத்த வேண்டிருக்கும். ஏனெனில் சுகயீனம் என்பது தனிமனிதர்கள் சார்ந்ததாகவே பார்க்கின்றது அமெரிக்க மருத்துவ ஒழுங்குமுறை.

 

உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மக்கள்

உளவியல் ரீயாக பாதிக்கப்படும் நிலையானது தோற்றம் பெற்றுள்ளது. தாக்குதலுக்கு முன்னர் மேற்கத்தைய சமூகம் என்பது தனிமனிதனுடைய வளர்ச்சிக்கு இடைஞ்சல் இல்லாதவாறுஇ தனிமனிதனுடைய ஒய்வு நேரம் என்பது தனிமனிதர்களின் நிலையில் இருந்து தீPர்மானிக்கப்பட்டதாகவும்இ எவ்வகையான நண்பர்களை தேர்தெடுக்க முடியும் என்பதிலேயும் அதிக கவனம் செலுத்திய சமூகம் தன்னகத்தே உளவியல் பிரச்சனைகளையும் கொண்டிருந்தது. அதாவது மனிதர்களின் சமூக உறவானது தனிமனிதர்களின் சித்தத்திற்கு ஏற்றவாறான நிலையில் இருந்து பேனப்பட்டு வந்த காரணத்தினால் அயலவர் யார் என்றே சூழ்நிலை இருந்து வந்திருக்கின்றது. இதன் காரணமா 40வீதமாக அமெரிக்க குடிமக்கள் மனவுழைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக பல மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆய்வில் வெளிவந்திருந்தது. இன்று தாக்குதல் நடைபெற்ற பின்னர் மக்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைப்பதுஇ குசலம் விசாரிப்பதுஇ நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது போன்றவற்றில் ஈடுபடும் அளவின் விகிதம் அதிகரித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பல தூக்கம் வராது அவதிப்படுவதாகவும்இ என்ன நடக்குமோ என்ற பீதியில் இருப்பதாகவும் தெரியப்படுகின்றது. இங்கு எமது தேசங்களைப் போல் அல்லாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும் போது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வேலைக்கு செல்ல முடியாத காரணத்தின் சுகயீனத்தால் ஏற்படும் வரவு குறைக்கப்படும். இதனால் காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. அமெரிக்க தேசத்தைப் பொறுத்தவரை நோய் நொடி ஏற்பட்டால் அதற்கு செலவு செய்வதற்காக தனிநபர்களாகவே காப்புறுதிகளை செய்கின்றனர். இலவச வைத்திய சேவை இல்லாத காரணத்தினால் தனிநபர்கள் தமது காப்புறுதியின் மூலமாகவே செலுத்தப்படுகின்றது. தனிநபர்கள் ஒவ்வொருவரும் காப்புறுதிகளைச் செலுத்தி தமது சுகவீன காலத்தில் பயன்படுத்திக் கொள்கின்றன.

 

 

ரஷ்யாஇ செர்சேன் போராட்டத்தில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ளல்இ போராட்டக் குழுக்கள் பெற்றுக் கொள்ளும் உதவிகளை நிறுத்துவது.

இந்தியாஇ விமானக் கடத்தலின் மூலம் பெற்ற கசப்பான அனுபவத்தை மறந்திருக்கமாட்டார்கள். அத்துடன் காஸ்மீர் பிரச்சனையில் பயங்கரவாதிகளுக்கு பாக்கிஸ்தான் உதவுகின்றது என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி போராடும் குழுக்களை அன்னியப்படுத்த எத்தனிக்கலாம்.

 

சீனா, Uyghur-சின்ஜாங் மாநிலத்தில் முஸ்லீம் (உவைகூர்) மதக்குழுவினரின் பிரிவினைப் போராட்டத்தில் ஏற்பட்ட அன்னியத் தலையீட்டை நிறுத்திக் கொள்ள இந்த முயற்சி இடம்கொடுக்கின்றது. அத்துடன் தாய்வான்இ தீபெத் போன்றவற்றில் மேற்கு தேசங்கள் கொள்ளும் அக்கறையை தடுப்பதற்கும் இந்த முயற்சி சாதமாக அமைந்திருக்கின்றது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது சீனம் வேறுறோர் விதத்தில் மேற்கு தேசங்களின் நலனை பாதிக்கின்ற வகையில் சீனம் கருத்தை முன்வைத்தது. தாய்வான்இ தீபெத் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும்இ ஐ.நாவின் தலைமையின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும்படியும் கூறியுள்ளது.

 

ஈரான்இ -சின்னி முஸ்லீமான தலிபானை  சிதைப்பதற்கும்இ வடக்கில் போராடும் குர்து மக்களை ஒடுக்குவதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி துணைபுரியும். அகதிகளின் பெருக்கத்தினால் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடியை தவிர்த்துக் கொள்ள அவசியம் இருந்தது எனினும் ஆப்கான் மீதான எந்தவித இராணுவ நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

பாக்கிஸ்தான் -அணுக்குண்டுச் சோதனையை அடுத்து இந்தியாஇ பாக்கிஸ்தான் மீதும் தடையை அமெரிக்கா விதித்திருந்தது. அமெரிக்காவிற்கு உதவிசெய்வதன் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாயை தனக்கு தரவேண்டிய கடனில் இருந்து கழித்துள்ளது. அத்துடன் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலை மாறி ஜனநாயகத்தின் பாதுகாவலராக பாக்கிஸ்தான் அரசு உருப்பெற்றுள்ளது.

 

 

பாதிக்கப்பட்ட போராட்டங்கள்

தேசியப் போராட்டங்கள்

வர்க்கப் போராட்டங்கள்

சட்டரீதியான அரசியல் உரிமைகள் பறிக்கப்படும்இ போராடும் அமைப்புக்கள் எனும் போது பயங்கரவாதத்தை உற்பத்தி செய்பவர்கள் என முத்திரை குத்தப்படும்.

உலமயமாதலுக்கு எதிரான சர்வதேசங்களின் போராட்டங்கள்

பலஸ்தீனர்கள்

பொதுமக்களுக்கு (முஸ்லீம்) காழ்புணச்சி உருவாக்கப்படல் (இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்காவில் யப்பானியர் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர்)

அதிக உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

அகதிகளின் வருகை கட்டுப்படுத்தப்படும்

பிற்போக்கு அரசுகள் பயங்கர வாதத்தை ஒடுக்கல் என்ற பெயரில் உதவிகள் பெற்றுக் கொள்ளும்.

 

தற்பொழுதைய சூழ்நிலையானது சர்வதேசக் கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈரானுக்கும் விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் மூலமாக இஸ்லாமிற்கு எதிரான யுத்தம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என நிரூபிக்கும் முயற்சியாகும். மேற்கு நாடுகள் தமது தேவைக்காக (persuade சம்மிக்க வைப்பது என்பது தமது தேவைக்கு இசைவாக (manupulate) மற்றவர்களை அணைத்துச் செல்வதேயாகும்.

இன்று தாக்குதல் காரணமாக அனுதாப அலையை பயன்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளை கையைக் கட்டி வைத்து விட்டு இடைவிடாத தொடர்புச் சாதனங்களின் உதவியுடன் யுத்த சூழலை உருவாக்கியிருக்கின்றன. எப்போ யுத்தம் தொடங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன.

 

இன்றைக்கு பின்லேடன் மீது தொடுக்கும் தாக்குதல் இரண்டு சக்திகளுக்கும் இடைப்பட்ட முரண்பாடாகவும் பார்க்கப்பட வேண்டும். இங்கு பாதிக்கப்படுவது பொதுமக்கள் என்பதால் இரண்டு பக்கத்தின்

 

Al qaede என்ற பின்லாடன் அமைப்பு

பின்லாடன்

எகிப்து இஸ்லாமிய ஹிகாத்

உக்பெகிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு

 

தற்போதைக்கு தடைசெய்யும் பெயரில் வராதவை

ஹமாஸ்

ஹிஸ்புல்லா

பலஸ்தீன ஹிகாத்

macao என்ற இடத்தில் 5 சந்தேக நபர்கள் சீனப் படையால் கைது

இன்றைக்கு பலஸ்தீனர்கள் தமது உயிரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராடி இழக்கின்றனர். மேற்கு தேசத்தை பொறுத்தவரை பயங்கரவாதம் தான். இங்கு பலஸ்தீனர்களின் வாழ்க்கையோ நாளாந்தம் மாற்றடைந்து மிகவும் துன்பகரமாக மாற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றது. இங்கு அவர்களையும் பயங்கர பட்டியலில் இட ((Ariel Sharon) சரோன் பாடுபடுகின்றார். பயங்கரவாதிகள் என பலஸ்தீனர்களை பலஸ்தீனர்களைக் கொண்டே அழிக்க மிகவும் பாடுபடுகின்றார். இங்கு பொதுமக்களை சாகடிப்பது பயங்கரவாதம் என்பது ஒரு புறமிருக்க இஸ்ரேலிய அரசோ மென்மேலும் இவ்வாறான தற்கொலைப் போராளிகளை உருவாக்கிக் கொள்கின்றது. இங்கு தற்கொலைப் போராளிகளை நிறுத்துவது என்பது தற்கொலைப் போராளிகளை உருவாக்காத அரசியலை கொண்டிருக்க வேண்டும். பயங்கரவாதம் என்ன என்ற வரையறைறுத்துக் கொள்வதில் கூட சிரமங்களைக் கொண்டிருக்கின்றது.. இதனை 140 நாடுகள் பங்கு பற்றிய ஐ.நாவின் அமர்வில் ஒரு பொது தீர்மானத்தை அடையமுடியாது அமர்வானது முடிவடைந்தது.

 

மேற்கொள்ளப்பட்டிருக்கும் யுத்தமானது இஸ்லாமிற்கு எதிராகவோஇ ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிராகவோ தொடுக்கப்பட்டதல்ல. மாறாக பயங்கரவாதிகளுக்கும்இ பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் எதிராகவே தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இவ்வாறான பிரச்சாரத்தை தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்லஇ மாறாக 'பயங்கரவாதிகளான” புலிகளுக்கு எதிரான யுத்தம் எனக் கூறிக் கொண்டு தாக்குதலை நடத்தினர். இதனால் புலிகளைக் கொல்ல முடியவில்லை. மாறாக மக்களைக் கொண்றனர், மக்களை அகதிகளாக்கினர், தமது பொருளாதாரத்தை இழந்தனர், தமது கல்வியை இழந்தனர், இளம் வயதினர் விளையாடும் பருவத்தை இழந்தனர். தமது சகோதரர்களை காப்பாற்ற கல்வியை துறந்து சிறுவர் வேலைக்குச் சென்றனர். எமது தேசங்களை யுத்தக் களமாக மாற்றி எமது அடையாளத்தை மாற்ற முற்பட்டனர்.

இவ்வாறான அனுபவத்தை எமது தேசத்தில் பெற்றுக் கொண்டோம். எனவே மேற்கு நாடுகளின் பிரச்சாரம் எவ்வகையிலும் உண்மை அல்ல என்பதை எமது மக்களுக்கு அதிகம் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் சர்வதேச நிலை அவ்வாறு அல்ல மாறாக மேற்கு நாடுகளின் பிரச்சாரத்தை ஊடகங்கள் அப்படியே ஒலிபரப்புகின்றன. இதற்கு ஆதரவாக வறிய தேசங்களின் ஆட்சியாளர்களும் தமது வர்க்க பாசத்தை தெரிவித்துக் கொண்டிருப்பதனால் சாதாரணமாக உலக மக்களின் அபிப்பிராயம் தமக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துக் கொள்கின்றன. இங்கு சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் உடன்படுபவர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எவ்வித பேச்சும் இன்றி ஊடகங்கள் தமது பிரச்சாரத்தை தொடர்கின்றன.

 

புதிய எதிரி

முன்னர் சோவியத் என்ற பூதத்தைக் காட்டி உயர்வர்க்கங்கள் பொருளாதாரஇ அரசியல்இ இராணுவக் கூட்டணியை அமைத்துக் கொண்டனர். சோவியத்தைக் காட்டியே மக்களையும் சித்தப்பிரமை பிடித்தவர்களாக மாற்றியமைத்திருந்தனர். சோவியத் என்றாலே பூர்சுவாக்களின் பிரச்சாரத்துக்கு அடிமையாயிருந்த மக்கள் நிபந்தனையின்றி தமது ஆட்சியாளர்களுக்கு துணையாக இருந்தனர்.  40 வருடங்களாக மேற்கு தேசங்கள் சோவியத் என்ற சித்தப்பிரமையைக் கொண்டு தனது கட்டமைப்பை பாதுகாத்து வந்திருந்தது. (சோவியத் சிதைக்க வேண்டும் என்று கிட்லருடனும் சேர்ந்து போராடினர். அதேபோல் சர்வதேசம் முழுவதற்குமான புரட்சிக்குத் தடையாக இருந்தது என்ற காரணத்தினால் சோவியத்தையும் எதிர்த்து நின்றனர்.) சமூக ஏகாதிபத்தியம் என்ற எதிரி தோற்கடிக்கப்பட்டிருந்த வேளையில் உயர்வர்க்கத்திற்கோ இன்னொரு எதிரி தேவைப் பட்டது. முன்னர் சிகப்பு தற்பொழுது பச்சை எதிரியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது எங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒழிந்திருக்கின்றனரா என்ற மனப்பயம் ஏற்பட்டுள்ளது. எதனைப் பார்த்தாலும் பயப்படும் நிலை தோன்றியிருக்கின்றது. பயப்பட தேவையில்லை என்ற நிலையை தோற்றுவிக்க பல காலங்கள் எடுக்கும் ஏனெனில் ஒரு நிரந்தர எதிரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையை அடைந்து விட்ட நிலையில் எதிரியின் நிழல் படத்தை தொடர்ந்து வைத்திருப்பதும் அவசியமானதாகும். இன்று ரஷ்யாஇ இந்திய ஆகியன ஏகாதிபத்தியத்திற்கு சோரம் போன நிலையும்இ உறங்கிக் கொண்டிருக்கும் சீனம் எப்போ தனது ஆதிக்கத்தை நோக்கி நகரத் தொடங்கும் என்ற பயமும் இருக்கின்ற வேளையில் தற்போதே மத்திய ஆசியாவில் தளத்தை உருவாக்கிக் கொள்வது இலகுவானதாக இருக்கின்றது. இன்று உலக சமூகம்  எல்லோருடைய நல்லெண்ணத்தின் காரணத்தினாலேயே பயங்கரவாதத்திற்கு எதிராக போராட இலகுவாக இருப்பதாக கூறிக் கொள்ளப்படுகின்ற போதிலும் இன்றைக்கு தொடுக்கப்படும் யுத்தமானது விஸ்தரிப்பை நோக்கிய யுத்தம் என்பதே உண்மையானதாகும்.

 

பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதி எவ்வாறு உருவாகின்றனர்?

பயங்கரவாதம் நடவடிக்கைகள் போராட்டத்தின் ஒரு வகையாகும். போராட்டத்தின் வகை எனப்படும் போது இது மக்களை அணிதிரட்டிப் போராடுவது அல்ல. மாறாக குறைந்த மனிதர்களைக் கொண்ட நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைகள் மக்கள் அணிதிரட்டப்படுவது இல்லை எனினும்இ இதற்கு ஒரு அரசியல் கோட்பாடுஇ கோரிக்கை பின்புலனாக இருக்கின்றது. (ஆதிக்க சக்திகள் அரசியல் உள்ளடக்கம் இல்லை என பறைசாற்றுகின்றன. ஆனால் இது உண்மையல்ல)  குறைந்த நபர்களைக் கொண்டு எதிரியை நிலைகுலைய வைப்பதாகும்.  இதனால் மற்றைய இனத்தின் இரத்தங்கள் சுண்டுவதினால் மக்களை போராட்டத்திற்கு ஆதரவாளர்களாக உருவாக்குவதை விட்டுவிட்டு எதிரிக்கு ஆதரவாளர்களாக மாறுகின்றனர். நியூயோக்கில்  நடந்த தாக்குதல் காரணமாக அனுதாபம்இ இழப்புகள் மக்களை ஒன்றுதிரட்டியுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்ட நிலைகாரணமாக  இரங்கலினால் ஏற்படும் ஆத்திரத்தில் மக்கள் சிந்தனையை இழக்கின்றனர். சிந்தனையை இழப்பதினால் ஏற்படும் ஆத்திரத்தை எதிரி பயன்படுத்தி தமது ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவர்.

மேற்கு தேசங்கள் ஜனநாயக வழிகளில் இருந்து போராடும் படி கோருகின்றது. இலங்கையில் அவர்கள் கருதுவது போலதான் ஜனநாயக வழிகளில் போராடப்பட்டது. ஜனநாயகத்தின் பாரம்பரியத்தில் அடிப்படையில் போராடுகின்ற போது ஆளும் வர்க்கமானது போராட்டங்களை ஆயுதம் கொண்டு அடக்கத் தொடங்கினர். ஆயுதத்தை ஆயுதத்தின் மூலமாகவே எதிர்க்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் தமிழ் இளைஞர் ஆயுதங்களைத் தாங்கினர். இவ்வாறு ஆயுதம் தூக்கிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்றுதான் இலங்கை அரசும்இ சர்வதேச சமூகமும் அழைத்துக் கொண்டது.

அமெரிக்காவின் விஸ்தரிப்பினால் ஏற்பட்ட வெறுப்பானது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருந்த போதிலும்இ வெறுப்பானது அமைப்பு வடிவம் பெற்று சிறுசிறு குழுக்களாக வெளிப்பட்டது. போராட்டங்கள் நடைபெறுகின்ற போது மத்திய கிழக்கு நாடுகளில் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு மேற்கு நாடுகளின் ஆதரவு இருந்து வந்ததும்இ ஆட்சியாளர்கள் பெரும்பான்மையினர் மேற்கு தேசங்களின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஆதரவு தெரிவிக்காத ஆட்சியாளர்கள் இருந்திருப்பினும்;இ முதலாளித்துவ பொருளாதார அமைப்மை கொண்டிருந்த காரணத்தினால் சொந்தத் தேசங்களின் நலன்பால் கொண்ட அரசியல் பொருளாதார திட்டங்களை கொண்டிருக்கவும் முடிவதில்லை. மேற்கு தேசங்களின் விஸ்திரிப்பை ஆட்சியாளர்கள் தமது இருப்பின் பொருட்டு அனுமதித்தே வந்திருக்கின்றனர். 7.10.01 செய்தியின் படி பின் லேடன் கொடுத்த பேட்டியில் 'அமெரிக்காவானது முஸ்லீம்களைத் தாக்குவதை நிறுத்தும் வரையில் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும்  என எண்ணிக் கொள்ள முடியாது எனவும்இ கடந்த 80 வருடங்களாக முஸ்லீம் தேசங்கள் அனுபவித்து வருவதையே அமெரிக்கா அனுபவிக்கின்றது எனவும்இ தாம் அமெரிக்காவினால் அடக்கியொடுக்கப்படும் போது எவரும் தமது குரலை செவிசாய்க்கவில்லை எனக் கூறினார். முஸ்லீம்கள் தமது நாடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என எண்ணிக் கொள்ளும் வரையில் அமெரிக்காவும் தான் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்ளமுடியாது.” (CNN) இந்தக் கருத்தை பார்க்கின்ற போது பின்லேடனின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் அவர்களின் அன்னியர் மீதான வெறுப்புணர்வை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவரின் அரசியல்இ உலகக் கண்ணோட்டத்தை அல்ல.

ஜனநாயக பாரம்பரியத்தை பாதுகாக்கும் நாடாக கொள்ளும் அமெரிக்காவானது உலகில் மனித உரிமையை அதிகமாக மீறும் நாட்டின் ஆட்சியாளர்களையே தமது நண்பர்களாகவும்இ ஆதரவாளர்களாகவும் கொண்டுள்ளனர். அமெரிக்கா பாதுகாத்து வரும் தேசத்தை சேர்ந்தவர்தான் இந்த பின்லேடன். குறிப்பாக மெக்காஇ மெதினா இருக்கும் இடமான சவூதியில் குறிப்பாக அவவிசுவாசிகளின் படை இருப்பதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு இந்தப் பிரிவானது இன்று நேற்று உருவாக்கப்படவில்லை. இது ஆயிரம் வருடம் பழமையான சிந்தனையாகும். (பிறயினத்தார்- விவிலியத்தை ஏற்றுக் கொள்பவர்கள் என்ற வரையறை அதைவிட 1000 வருடம் பழமை கொண்டது) இவ்வாறான மதப்பிரிவினை என்பது மத்திய கிழக்கு நாடுகளில் தாக்கத்தில் இருந்து கொண்டிருந்ததை வரலாற்றில் மறுக்க முடியாது.

தேசங்களின் பொருளாதார துறைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது மக்களை தெருவிற்கு கொண்டு செல்கின்றது. அத்துடன் மேற்கத்தைய வாழ்க்கை முறையை புகுத்துவதன் மூலமாக தமது அடையாளத்தை தேடிப் போராடும் சக்திகள் தமது அரசியல் பாதையை தெரிந்தெடுத்துக் கொள்வதில் எல்லாச் சக்திகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மதப்பிடிப்பில் இருக்கின்ற தேசங்களில் மதத்தின் உலகக் கண்ணோட்டத்தின் ஊடாகவே சின்னங்களை தேர்ந்தெடுக்கின்றனர். மதச் சின்னங்களைத் தேர்ந்தெடுத்து தமது அரசியல் போராட்டத்திற்கு அணிதிரட்டுகின்றனர்.  இவ்வாறு போராட முன்னவந்தவர்கள் ஆயுதரீதியாகவே எதிரியை எதிர்க் கொள்கின்றனர்.

போராட்டச் சக்திகளை அரசபயங்கரவாதம் தாக்கி அழிக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அடையாள நடவடிக்கையாக தனிமனிதர்கள் கொண்ட சாகசங்கள் மூலம்  எதிரியை திகைக்க வைக்கின்றனர். இதனால் அவமானமடைந்த ஆதிக்க சக்தி எதிர்நடவடிக்கையில் மேற்கொள்ளும் இதனை இலங்கையில் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்க முடியும். உதாரணமாக தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பொது நூலகம் எரிக்கப்பட்டதுஇ 1983 கண்ணி வெடி தாக்குதலை அடுத்து நாடுபூராகவும் தாக்குதல் தொடுக்கப்பட்டனஇ இந்திய இராணுவத்துடனான மோதலின் போது வல்வெட்டித்துறையில் கிரனைட் தாக்குதலை அடுத்து சந்தையில் நின்றவர்களை இந்திய இராணுவம் சுட்டுக் கொண்றது. (இவ்வாறு நடைபெறவில்லை என அன்றைய இந்திய ஆதரவு முதல்வர் பிரச்சாரம் செய்தார்) தனிநபர்கள் சேர்ந்து செயலை செய்கின்ற போது அது தனிமனிதபயங்கரவாதமாகவும்இ அதற்கு எதிராக அரசு தொடுக்கும் தாக்குதலை அரசபயங்கரவாதமாகவே வரையறுத்துக் கொள்ள முடியும்.

மக்கள் திரள் போராட்டங்களை அடக்கியொடுக்குவதும் அரச பயங்கரவாதத்தின் மூலமேயாகும். அரச பயங்கரவாதம் தனிநபர் பயங்கரவாதம் நிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து செல்லக் கூடியதாகும். அரச பயங்கரவாதத்தின் மூலமாகவே மக்கள் திரள் போராட்டங்களை ஒடுக்க முடியும். வறிய தேசங்களில் தொழிற்சாலைகளை குறைந்த கூலியில் கொண்டு நடத்த முடியும் என்பதற்காகவே வறிய தேசங்களுக்கு நகர்த்துகின்றனர். (அண்மையில் மேற்கு தேசங்களில் உலக மயமாதலுக்கு எதிரான போராட்டங்களை சமாளிக்க முடியாத காரணத்தினால் இத்தாலிய அரசானது சர்வதேச கருத்தரங்கு ஒன்றை மத்திய ஆபீரிக்க தேசத்தில் நடத்த வேண்டும் என பிரேரித்து இருந்தது.)  அத்தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காகவும்இ கூடிய ஊதியம் கோரி போராடுகின்ற போது வறிய நாடுகளின் ஆட்சியாளர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை இலகுவாக அடக்குகின்றனர். இவ்வகையாக ஒடுக்கு முறைக்கு ஆதரவாகவும்இ நட்பாகவும் நடந்து கொள்பவர்கள் மேற்கத்தை ஜனநாயகத்தை பாதுகாக்கவென போராடும் மேற்கு தேசங்களே.

அரசபயங்கரவாதம் தொடர்பாக உலக நாடுகளின் ஆதிக்க சக்திகளிடையே ஒரு உடன்பாடு இருக்கத்தான் செய்கின்றது. இந்த உடன்பாடு அரசியல் சூட்சுமத்தினால் மக்களின் எந்தப் பகுதியினரும் நுணுக்கமாக கவனிப்பதில்லை. ஒடுக்கப்படும் மக்களைக் கொண்ட இனங்களின் பிரதிநிதிளை உடனடியாக எந்த தேசங்களும் அங்கீகரிப்பதில்லை. அரசியல் அங்கீகாரமானது 1990 க்குப் பின்னர் மாற்றமடைந்துள்ளது. முன்னர் அரசியல் கொள்கைகளில் திரித்து நடைமுறைப்படுத்திக் கொண்டாலும் சீனாஇ சோவியத் ஒடுக்கப்படும் மக்களின் நண்பனாக இருந்தது. இவர்கள் முதலாளித்துவ மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதால் அரசியல் ஆதரவு என்பது அவர்களின் நலன்பால் கொண்டதாகவே இன்று இருக்கின்றது. இன்றிருக்கும் ஒரே போக்கு முதலாளித்துவ பொருளாதாரப் போக்காகும்.

 

 

எது பயங்கரவாதம்

உலக வர்த்தகத்தை தனது நலனுக்கு சாதகமாக ஒப்பந்தத்தின் மூலம் சுருட்டிக் கொண்டிருப்பது பயங்கரவாதம் இல்லையா?

(coyrights) பிரதியுரிமை என்ற பெயரின் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்ட பெரும் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சிறிய தேசங்கள்விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனை என்னவென்பது?

ஈராக் தடையினால் சிறுவர்களின் இளம்பருவம் பாளாகுவதுடன், அவர்களின் சந்ததியினரே எதிர்காலம் சூனியமாகி விடுகின்றது.

உள்கட்டுமானத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் காடுகளை, அணைகளைக் கட்டி இயற்கையை அழிப்பதை என்னவென்பது?

இதனை எதிர்த்துப் போராடும் போது முகவர்களால் கொல்லப்படுவதை என்னவென்பது?

அமெரிக்க மண்ணிற்கு வெளியில் கொல்லப்பட்டர்இ இதனை 1976 இல் தடைசெய்தனர் இதனை மீளவும் அமுல்படுத்த ஆலோசிப்பதாகவும்இ 2000 இல் பின்லாடனை கொல்ல உத்தரவிட்டதாக கிளின்ரன் கூறினார். அப்படியாயின் ஜனநாயக மரபுதான் என்ன?

1988களில் ஈராக் குர்துகளை விசவாயு பாவித்து கொண்ற போது அமெரிக்காவானது ஈராக்கின் நண்பராகத் தானே இருந்தது.

 

இன்று பழிவாங்கப்படுவது தமது மனித உரிமை என அமெரிக்கா கொள்கின்ற வேளையில் சர்வதேச சமூகம் என்பது அவர்களுடைய நிலைப்பாடை ஆதரிக்கின்றனர். அப்படி இருக்கையில் நலிந்த தேசங்கள் எவ்வாறு தமது உரிமையைப் பாதுகாப்பது. இந்தக் கேள்வி முக்கியமானதே ஏனெனில் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நேட்டோ கூட்டமைப்பின் 5 பிரிவின் படி ஒரு நாடு தாக்கப்படுமாயின் எல்லா நாடுகளும் தாக்கப்பட்டதற்கு ஒப்பானது என்றும்இ அதற்கினங்க எல்லோரும் அதற்கு உதவ தயாராக இருக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இங்கு யார்மீது யார் போர்ப்பிரகடனம் செய்வது. இங்கு ஒரு நாடு சம்பந்தப்படவில்லைஇ மாறாக ஒரு அரசியல் கருத்தை பிரதிநிதித்துவம் செய்த குழுவே பங்குபற்றியிருக்கின்றது. அப்படி இருக்கையில் போர்ப்பிரகடனத்தின் தன்மையை எடுத்து நோக்கும் போது

 

        ஒப்பந்தங்களில் கைத்சாத்திட மறுப்பு

அமெரிக்கா பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மறுப்புத் தெரிவித்துள்ளதை அறிந்திருக்க முடியும். இந்த ஒப்பந்தங்கள்

கண்ணிவெடி தடுப்பு

RMB உடன்படிக்கையை காலாவதியென தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டது.

பௌதீக ஆயுதங்களை தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

கெயற்ரே ((Kyoto) காலநிலை பாதுகாப்பு ஒப்பந்தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இவைகளை இன்று முன்வைத்துக் கேள்வி கேட்கின்ற போது உலகத்தை பாதுகாப்பது தமது முதல் நோக்கமல்ல. மாறாக

 

 

பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்வதற்கு

அமெரிக்க தேசம் மற்றைய தேசங்களின் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் சந்தையை கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

பிரதிக் காப்;பு உரிமை முறையை ரத்து செய்தல் வேண்டும்.

எந்தவித பயங்கர ஆட்சியாளர்கள் வந்தாலும் பரவாயில்லை பொருளாதார தடை போன்றவற்றை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உலகின் பாகங்களில் உள்ள அனைத்து படைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் திரும்பி அழைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாடும் தனக்குத்தேவையான ஆட்சி முறைஇ பொருளாதார முறை போன்றவற்றை தெரிவு செய்வதில் தலையிடக் கூடாது.

நீண்டகால குறிகிய காலத் தீர்வு

சர்வதேச சட்டமூல அரசுகள்

 

நவீனகாலத்தில் பெரிய கட்டிடங்கள்இ நெருக்கமான குடியிருப்புகள்இ மக்களை கையாலாதவர்களாக ஆக்கி விட்டிருந்தது.

 

ஐ.நாவின் நம்பகத்தன்மை பற்றிய

ஐ.நா உருவாக்கப்பட்டு (முன்னர் வேறு வடிவத்தில் இருந்தது எனினும்) 50 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இவ்வளவு கால வரலாற்றிலும் வல்லமை படைத்த நாடுகள் தமது நலன் கருதி அம்மன்றத்தை பாவித்துக் கொண்டிருப்பதைப் பற்றி முழுமையாக ஆராயப்பட வேண்டும். ஆனாலும் இங்கு வரலாறு முழுவதையும் ஆராய்வது நோக்கமல்ல. எனினும் சர்வதேச அமைப்பு என்னும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு அழசயட

(moral ஆழசயட) நீதிமுறையில் கொண்டதாகவே இருக்க வேண்டும். வல்லமை கொண்ட தேசங்கள்இ சுரண்டும் வர்க்கங்களைக் கொண்ட தேசங்களின் நலனை மாத்திரம் பேணக் கூடியதாக அமைந்திருக்கின்ற போது ஒரு மௌனப் பெரும்பான்மை உலக அமைப்பின் மீது சந்தேகத்தையும்இ வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும் என்பதை அதிகாரத்தில்இ பதவிகளில் இருப்பவர்கள் கருத்தில் கொள்வதில்லை. ஒரு நீதியான அமைப்பு வடிவமாக இருக்க வேண்டும் என்பதில் ஒரு பாமரக இருந்து வேண்டுவதில் எந்த தவறும் இல்லை. இந்த எதிர்பார்ப்பிற்கு இவ்வுலக அமைப்பு இடம் தருகின்றதா எனப்பார்ப்போம்.

கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கும் இடத்தில் பலம்படைத்த தேசங்கள் ஒவ்வொன்றும் தத்தமது நிலைகளில் இருந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. ஈராக்கில் நுழைந்த போது பல ஏற்பாடுகளை செய்து கொண்டனர்.

இதற்கு நட்புத் தேசங்களை தயாரித்துக் கொண்டனர்.

ஐ.நாவில் தேவையான பிரேரனையை நிறைவேற்றிக் கொண்டனர். 

ஊடகத்தின் மூலமாக யுத்தத்திற்கான ஆதரவு நிலையை ஏற்படுத்திக் கொண்டனர். (இவைபற்றி விரிவாக ஊடகங்கள் பற்றிய பகுதியில் பார்ப்போம்.)

ஒரு நாடு இன்னெரு நாடு ஆக்கிரமிப்பது தவறானது ஒன்றே. எவ்வகையாக பிரச்சனைகள் இருப்பினும் அந்தந்த நாட்டு மக்கள் தாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில் ஈராக்கானது குவைத்தை ஆக்கிமித்தது தவறானதே. (இந்தக் காலத்தில் பின்லேடன் அன்னியப் படை தேவையில்லை தமது மக்களைக் கொண்டே குவைத்தை விடுதலை செய்வோம் என சவூதி மன்னனுக்கு அழைப்பு விடுத்ததாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.) ஆனாலும் அதனை மக்கள் கிளர்ச்சியின் மூலமே தான் குவைத்தை விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து அவசர அவசரமாக ஐ.நா மன்றத்தில் பிரேரனை நிறைவேற்றி யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. இன்று அமெரிக்கர்களே கூறுகின்றனர்இ அதாவது அமெரிக்க நலன்இ சவூதியின் நலனின் பொருட்டே ஈராக் மீது தாக்குதல் நடத்தியதாக கூறுகின்றனர். அப்படியாயின் 10 வருடங்களுக்கு முன்னர் நீதியை நிலைநாட்ட முற்பட்டது என்ற கருத்தினை எவ்வாறு பார்ப்பது? அப்படியாயின் ஐ. நாவின் பிரச்சனை பற்றிப் பார்க்கின்ற அறிவு எவ்வகையானது என்பது சாதாரணமாக எழும் கேள்வியாகும்.

உலக பொது மன்றம் என்பது அமைதியைப் பேணவேயாகும். மாறான யுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அழிவுகளை ஏற்படுத்துவதற்கு அல்ல. ஒரு உலக மன்றம் அவ்வாறு இருக்க முடியாது. இது ஒரு சாதாரண ஒரு பாமரர் கேட்கும் கேள்வியாகும். இன்று தாம் நிறைவேற்றிய பொருளாதார தடையை மீளவும் பெறமுடியாத கையாலாகாத நிலையில் இருக்கின்றது. முன்னர் ஐ.நாவின் பெயரைப் பாவித்து ஒரு சிந்தனைக்கு எதிராக நேரடியாக போரிட்டது. யுத்தங்கள் ஒரு வர்க்கத்தின் மறைமுக நலன் சார்ந்தது. ஆனால் உலக பொதுமன்றத்தை பாவித்து ஒரு சித்தாந்தத்திற்கு எதிராக போராடுவது என்பது வேறுபட்டதாகும். இங்கு குறிப்பது ஈராக் மீதான யுத்தத்தினை விட மாறுபட்டதாகும். (ஆனால் அடிப்படையில் பொருளாதார நலன் சார்ந்தது என்பது உண்மை.) இங்கு குறிப்பிடுவது கொரியா மீதான யுத்தத்தையே. கொரியாவை மீட்கப் போனதுஇ உலக அமைதியைஇ நீதி நிலைநாட்டவல்ல. மாறாக ஒரு சித்தாந்தத்தின் மீதான தாக்குதலாகும். அதே நிலைதான் இன்றும் தோன்றியுள்ளது.

அமெரிக்க தேசத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நாவும் உலக பயங்கர வாதத்திற்கு எதிராக போராடப் போவதாக கூறியுள்ளது. இங்கு பயங்கரவாதம் என்றால் என்ன என்பது பற்றிய அல்ல இங்கு பிரச்சனை. மாறாக பயங்கரவாதம் எவ்வாறு உருவாகின்றது என்பது தான்? ஒவ்வொரு தேசங்களை எடுத்துக் கொண்டாலும் அடக்கப்படும்இ அவமானப்படுத்தப்படும் பெரும் பகுதியினரான மக்களின் செவிசாய்க்கப்படுவதில்லை.

ஐ.நா பொதுவாக அமைப்பு என்கின்ற போதும் பாதிக்கப்பட்ட தேசம் என்பதால் நியூயோக் மேயரை பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். ஒரு நாட்டின் பிரதிநிதி அழைக்கப்படுவது என்பது ஐ.நா அமர்வில் ஏற்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரச நிலைக்கு அப்பால் ஒரு பிரதிநிதியை அழைப்பதும்; விசேட நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு ஒரு இடத்தில் நடத்த அழிவை முதன்மைப்படுத்தி ஒரு பிரதிநிதியை அழைப்பது என்பது வேறு. உலகின் பாகங்கள் பலவற்றில் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுகின்றன. ஒடுக்கும் இனத்தின் குரலை அம்மன்றத்தில் ஒலிக்கச் செய்வது என்பது இலகுவானது அல்ல. அம்மன்றத்தில் இலங்கையின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்திய போது மறைமுகமாக சென்றே அதனைச் செய்ய முடிந்தது. தமிழ்மக்கள் கடந்த 18 வருடங்களில் எத்தனையே அழிவைச் சந்தித்தனர். ஆனாலும் தமிழ் மக்களின் பிரிதிநிதியாக ஒருவரையும் அழைத்து உங்களுக்கு என்ன குறை இருக்கின்றது என அம்மன்றம் கேட்கவில்லை. இங்கு ஊர் ஓடும் போது ஒத்துஓடு என்ற முறையில் அமெரிக்காவின் பின் எல்லோரும் ஒடுவோம் என்ற நிலையில் ஐ.நாவும் அதில் அங்கம் வகிப்பவர்களும் சென்றுள்ளனர்.

இவைமாத்திரம் அல்லஇ உலக சுகாதார மன்றத்தின் தலைவர் அமெரிக்க நாடுகளின் சுகாதார மந்திரிகளிடையே பேசும் போது எதிர்காலத்தில் பௌதீகஇ இரசாயனத் தாக்குதலை எதிர்நோக்க வேண்டிவரும் என எச்சரித்தார். பௌதீகஇ இரசாயனத் தாக்குதல்கள் ஒன்று மேற்கு தேசங்கள் வறிய தேசங்கள் மீது தொடுக்க வேண்டும். அல்லது தன்னையே துற்சம் என மதிக்கும் ஒரு வறிய நாட்டவன் அதனைச் செய்ய வேண்டும். இங்;கு அதன் தலைவர் தமது தேசங்கள் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்ற பயத்தினால் தன்னினத்தின் மீதான பாசத்தைத் தான் அவரும் காட்டினார். இங்கு 1988களில் குர்துகளின் மீது இரசாயன வாயுவை ஈராக் அரசு செலுத்திக் கொண்றனர். இந்த இரசாயன வாயுவை ஈராக்கிற்கு கொடுத்ததே அமெரிக்காதான் உலகின் கொடுமைக் காரருக்கெல்லாம் பாதுகாவலராக செயற்பட்டதே அமெரிக்காதான். ஆனால் இன்று மாத்திரம் எவ்வாறு தாம் சார்ந்த உலகைத் தவிர மற்றவைகள் எல்லாம் பயங்கரவாதத்தை உருவாக்கும் நாடுகளாக உருவாகின?

இதில் ஐ.நாசபையானது ஆப்கான் மீதான தாக்குதலிலும் சரிஇ மேயரை வரவழைத்ததிலும் சரிஇ சுகாதார நிறுவனம் எச்சரித்ததிலும் சரி ஒடுக்கப்படும் மக்கள் மீதுஇ வறிய நாடுகளின் மீது ஒரேமாதிரியான அளவுகோலைக் கொண்டு செயற்படவில்லை என்பதைத் தான் கூறிக் கொள்ள முடியும். இந்த மன்றம் தனிநபர் பயங்கரவாதம் என்றால் என்னஇ அரச (ஏகாதிபத்திய) பயங்கரவாதம் என்றால் என்ன இவை இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியதே என்பதை முன்னிறுத்தியிருக்க வேண்டும். (இதை யார் ஐ.நா தலைமையிடம் கூறுவது? இங்கு கூட எமது கருத்தை கூறமுடியவில்லை என்ற விரக்தி தான் மிஞ்சும்) இதில் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை தனிமனித பயங்கரவாதத்தை ஏற்படுத்துகின்றது என்பதை புரிந்து கொண்டு ஐ.நா நடப்பதன் மூலமே வறிய மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியும்.

 

பாதிப்புக்குள்ளாகிய சொந்தப் பொருளாதாரம்

சுற்றுலாத்துறை

நுகவின் தன்மை மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்வதில் பயம் ஏற்பட்டுள்ளது

தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமெங்கும் சந்தையை நோக்கிய பொருளாதார உற்பத்தி முறையினால் பல நாடுகள் தேசிய தேவையை மையமாகக் கொண்ட பொருளாதார கட்டமைக்கப்படாமையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடியது எதிர்பார்க்கப்பட கூடியதேயாகும். உலகில் இருக்கின்ற பெரும்பான்மையான வறிய தேசங்கள் அன்னிய மூலதனத்தின் ஆதிக்கத்தைக் கொண்ட காரணத்தினால் எவ்வகையான பொருளை உற்பத்தி செய்வது என்பதை அன்நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்கின்றன. அத்துடன் பொருளின் விலையை மேலை தேசங்கள் ஒப்பந்தங்களின் மூலமாக மேலை தேசங்களின் விருப்பின்படியே விலையை தீர்மானித்துக் கொள்கின்றன. பொருளிற்கான (copy rights) காப்புரிமையையும் கொண்டிருக்கின்ற காரணத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருளிற்கான உரிமையையும்இ உற்பத்தி செய்யப்படும் பொருளிற்காக ஒரு தொகையையும் காப்புறுதிக்காக பெற்றுக் கொள்கின்றன. இவை அனைத்தையும் உலக வர்த்தக மையத்தின் ஊடாக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி மேலை நாடுகள் தமது ஆழுமையின் கீழ் வைத்துள்ளன.

வறிய தேசங்களை எடுத்துக் கொண்டால் உல்லாசப் பிரயாணம் ஒரு அன்னியச் செலாவனியை பெற்றுத் தரும் ஒரு நிறுவனமாக பரிணமித்துள்ளது.  முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையானது வறிய தேசங்களில் அமுல்படுத்தப்படுகின்ற போது இயற்கையுடன் ஒன்றித்திருந்த மனிதர்கள் உழைப்பாளிகளாக மாற்றம் கொள்கின்றனர். இவர்கள் உழைப்பாளிகளாக மாறுகின்ற போது எமது தேசத்தில் அத்தனை தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலை காரணமாக தம்மிடம் உள்ளவற்றைக் கொண்டு

 

 

இன்று உலகப் பொருளாதாரத்தை மையம் கொண்ட நிலை தாக்கம் பெற்ற பின்னர். குறிப்பாக சொந்தப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பத் தடையாக இருந்த உலகப் பணக்காரர்களும், வறிய நாட்டைச் சேர்ந்த

 

 

ஊடகங்களும் அமெரிக்காமீதான அனுதாபமும்

ambulance conscription Rack PR

 

ஊடகங்கள் தயாரித்து வழங்கும் நெஞ்சை உருக்கும் காட்டிகளை பார்த்து மக்கள் தமது சுயசிந்தனை மறந்துஇ இரக்கத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் மக்களும் சரி பத்திரிகைகளும் சரி தீர ஆராயாமல் உள்;ர் ஆட்சியாளர்கள் அல்லது  மேற்கு ஆதிக்க சக்திகள் கொடுக்கும் செய்தியை அப்படியே பிரசுரிப்பதுஇ ஒளிபரப்புவதன் மூலம் உணர்ச்சியை தூண்டி மக்களை மயக்கி தமது காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக ஊடகங்களில் ஒளிபரப்பில் காட்சியமைப்பில் தந்திரங்கள் அடங்கியிருக்கின்றன. காட்சியமைப்பின் ஊடாக மனிதரின் உள்ளத்தில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஊடகங்கள் குறிப்பாக தேசியத்தை ஊட்டவும் தயங்கவில்லை. நடந்த தாக்குதலுக்கான காரணத்தை தேடிக் கண்டுபிடிப்பில் குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவதாக ஊடகங்களில் தென்படுகின்ற போதிலும் பார்க்க தேசியத்தின் மீதான களிவிரக்கம் கொள்ள ஊடகங்கள் அதிகமாகவே கவனத்தை செலுத்துகின்றது. காட்சியமைப்பில் கவனம் கொள்ளும் இடத்தில் குறிப்பாக கொடியை நாட்டுவதுஇ புதிதாக கொடிகள் பறக்கவிடுவதையும்இ கொடிகள் விற்பனையில் சூடுபிடிப்பதையும் திரும்பத்திரும்பக் காட்டுதல்.

கட்டிப்பிடித்து அழுவது தாம் இறுக்கமாக ஒன்று சேர்ந்திருப்பதாக காட்டிக் கொள்வது. குறிப்பாக தீயணைப்புப் படையினரை வீரத்திற்கும்இ கடமையுணர்ச்சிக்கும் உதாரணமாகவும்இ தேசியத்திற்கு உதாரண சின்னமாக காட்டப்பட்டிருக்கின்றன. இவர்களுடன் (ambulance) அவசர வைத்திய உதவி வாகன சேவையினரையும் தேசியத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதாவது சிரமத்தைப் பார்க்காது சிரமப்பட்டுஇ தன்னுயிரை துற்சனமென மதித்து நடப்பதுஇ பிரச்சனை என்று வரும்போது ஒன்றிணைவது போன்றவற்றை வலியுறுத்தி காட்சிகளை அமைத்துக் கொள்வதில் முக்கியத்துவம் காட்டப்படுகின்றது. காட்சியமைப்பின் ஊடாக ஒரு நாடக அரங்கை நடத்தி விடுகின்றனர்.  இவ்வாறு செய்வதன் ஊடாக மற்றைய நாட்டை தாக்குதல் நடத்துவதை நியப்படுத்தும் பிரச்சார முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதும்இ யுத்தத்தினை எதிர்ப்பவதை சத்திர அறுவைச் சிகிச்சை செய்து மக்களிடம் இருந்தே அகற்றுவது. அதாவது யுத்தத்தை எதிர்ப்பவர்களிடைய கேள்விக் கணைகளை தொடுக்கின்ற போது வரலாற்றை தவிர்த்துப் பார்க்கும் அணுகுமுறையில் அமைந்து கொண்ட கண்ணோட்டத்தின் பால் பத்திரிகையாளர் தனது செயற்பாட்டை தொடர்வது. வரலாறு பற்றிய கண்ணோட்டத்தில் அமைந்து கொண்ட பார்வையை முன்வைக்கின்ற போது உங்களின் கருத்தை நாம் அறிவோம் என பதிலை நிற்பாட்டுவதுஇ அல்ல கேள்விக்குப் பதிலை கொடுக்கும் முன்னரே பேட்டிஇ சம்பாசனைக்கான நேரம் முடிந்து விடும். இதனால் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலை தோன்றுகின்றது.

நிருபர்கள் முன்கூட்டியே ஒரு கருத்தில் இருந்து கொண்டு கேள்விகளைத் தொடுத்தல்இ தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தனது கேள்வி தொடுக்கும் வல்லமையைக் வெளிப்படுத்தல்இ பொய்களை ஒளிபரப்புதல் பின்னர் சில நாட்களின் பின்னர் மறுப்பதுஇ லாபஸ் பெறுத்தல். மக்கள் தொடர்ச்சியாக செய்தி கேட்காதவர்களாக இருக்கலாம்இ மறுக்கப்பட்ட செய்தி கிடைக்கப் பெறாத காரணத்தினால் முன்னர் ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மை என்றே நம்பிக் கொண்டிருப்பர்.

ஈராக் யுத்தத்தின் போதும் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் குவைத்தில் வைத்தியசாலையில் நடத்தப்பட்டதாக கூறப்படும் படுகொலையும்இ தாதியின் அழுகை; குரல் கொண்ட தொலைக் காட்சி செய்தியில் ஒளிபரப்பட்ட செய்தியானது அமெரிக்க PR விளம்பர நிறுவனத்தினால் தயார்படுத்தப்பட்ட ஒரு விளம்பர நிகழ்வாக தற்பொழுது அம்பலப்பட்டுள்ளது. அதே போல செர்பியர்களால் கொசவோவில் சுயஉயம) இடம்பெற்ற நடத்தப்பட்டதாக கருதப்படும் படுகொலை அப்பானிய விடுதலை அமைப்பே செய்திருக்கலாம் என பல புதிய செய்திகள் வந்திருக்கின்றன. இவற்றில் ஏகாதிபத்திய நலன் சம்பந்தப்பட்ட வரலாற்று தரவுகள்இ செர்பிய ஆக்கிமிப்பாளர்களின் கொடுஞ்செயல்கள்இ கொசவோ விடுதலை இராணுவத்தின் ஏகாதிபத்திய சேவகம்இ இறுதியாக பலிக்கடாவாகப்பட்ட கொசவோ பிரதேச அல்பானிய தேசிய இனமக்கள். ஆராய்து கொண்டு செல்கையில் ஊடகங்களின் கபடநாடகங்கள் வெளிப்படும்.

ஈராக்இ கொசவோவில் நடைபெற்றதாக கருதப்படுபவைகளை ஊடகங்கள் நெஞ்சை உருக்கும் காட்சிகளாக தயாரித்து வெளியிட்டனர். இதனை மக்கள் பார்த்து இரக்கத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் பாதிக்கப்படும் மக்கள் மீது காட்டிப்படும் அனுதாப அலையைப் பயன்படுத்தி ஈராக்இ யூக்கோ மீது தாக்குதல் நடத்த பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டனர். மக்கள் தீரஆராயாது ஆட்சியாளர்கள் கொடுக்கும் செய்தியை ஊடகத்தின் மூலமாக அறியப்பட்டு ஆதிக்க சக்திகளின் பிரச்சாரத்திற்கு பலியாகின்றனர்.

வெளிவரும் தகவல்கள் எந்தக் காலத்திலும் முழுமையானதாக இருப்பதில்லை. காரணம் பெரும்பான்மை ஊடகங்கள் ஆழும் வர்க்கத்தின் பிடியில் தான் இருக்கின்றது. தற்பொழுது  ஊடகங்களில் அங்கம் வகிப்பவர்கள் Conscription கட்டாயம் தேசத்தின் அவசர நிலைகாரணமாக படைகளில் ஈடுபட வேண்டிய நிலையில் உள்ளவர்களும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் யுத்த நிலமை என்று வரும் போது ஊடகவியலாளர்களும் அந்தந்த நாடுகளுக்கு விசுவாசமாக செயற்பட வேண்டும். எனவே ஊடகத்துறையில் சுதந்திர ஊடகவியலாளர்களை காண்பதும் அரிதாக அமைந்து விடுகின்றது. ஊடகவியலாளர்கள் தாம் பெறும் தகவல்களை தமது அரசாங்கத்திற்கு கொடுத்து விடுகின்றனர். ஒன்று வர்க்க நிலைகளில் ஒவ்வொரு மனிதர்களின் சிந்தனை மாற்றமடைகின்ற போதும் மேற்கத்தைய கலாசாலையில் கோட்பாட்டுத் தெரிவுகளைக் கொண்டு சமூகத்தை கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வைத் நடத்தப் பயிற்றுவிக்கப்பட்டவர்களைக் கொண்டே ஊடகவியலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். (இதற்கு தற்கால எமது அறிவுஜீவிகளும் அடங்குவர்) இதனால் மக்களுக்கு ஒழுங்காக கருத்து விளக்கங்களைக் கொடுக்காமல் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என நழுவி விடுகின்றனர்.

ஊடகத்தின் மூலமாக மக்களிடையே தொடுக்கும் தொலைத் தொடர்பு யுத்த முனைப்பானது தற்பொழுது அமெரிக்க சார்பான நிலையைக் கொண்டு வருவதுடன்இ மக்கள் நாளாந்த வாழ்க்கைக்கு சாதாரணமாக திரும்ப விடாமல் யுத்த நிலை காட்சியரங்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது ஒரு புறமிருக்க அமெரிக்க தேசத்தின் விமானங்கள் வானொலிக் கருவிகளை ஆப்பான் தேசத்தில் வீசியுள்ளனர். இந்த வானொலி ஒரு அலைவரிசையில் மாத்திரம் தான் கேட்க முடியும். அமெரிக்க தேசமானது பேச்சுச் சுதந்திரத்தினை பாதுகாத்துக் கொள்ளும் தேசமாக பறைசாற்றப்படுகின்றது எனினும் அதே அமெரிக்காவே வானொலி நிலையத்தின் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளது. இவ்வாறே யூக்கோவில் வானொலி நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. இங்கு பேச்சுச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நாடு எனக் கருதுகின்ற போதிலும் தனது தேவையின் நோக்கம் கருதி பேச்சுச் சுதந்திரத்தை கொடுக்க மறுக்கும் என்பதையும் இது நீரூபிக்கின்றது.

இன்று தலிபான் மனித உரிமையை மீறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இன்று மாத்திரம் அல்ல தலிபான்இ மற்றும் (Northern allianse) வடக்குக் கூட்டு அணி உட்பட சோவியத் ஒன்றியத்தின் மீதான யுத்தத்தின் போது பல மனித உரிமை மீறல்களைச் செய்துதான் இருக்கின்றனர். வடக்குக் கூட்டு அணி இன்று நட்புச் சக்தியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை கூட பல மனித உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டதாக பல (தன்னார்வக்) மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றனர். இவ்வாறு தான் முன்னர் ஈராக்கின் உற்ர நண்பனாகச் செயற்பட்ட சதாம் குசையின்இ மனுவல் நொரேகாஇ பினோச்சேஇ மார்க்கோஸ்இ சுகாட்டோஇ சவூசி அரேபியாஇ பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல மனித உரிமைகள் மீறப்பட்டது மீறுப்படுகின்றது. ஆனாலும் தீடீரெனவே மனித உரிமை மீறும் தேசங்களாக காட்டப்படுகின்றது. இது ஊடகங்கள் செய்யும் ஏகாதிபத்திய விசுவாச நடவடிக்கையாகும்.

 

               அமெரிக்காவின் தந்திரோபாயத்தில் மாற்றம்

அமெரிக்க தேசமானது தனது தந்திரோயத்தை மாற்றிக் கொண்டுள்ளதை கடந்த 10 ஆண்டுகளில் அவதானிக்க முடியும். தற்போதைய அரசின் இரண்டு வித கொள்கை மாற்றங்கள் இருப்பினும் அமெரிக்கா தனித்துச் செல்லும் பாதை வலுவாக மாற்றமடைந்துள்ளது. அதாவது ஐ.நாவின் பெயரின் சர்வதேச நாடுகளில் நுழைந்து கொள்வதுஇ நேட்டோ நட்புசக்திகளை இணைத்துக் கொண்டு செல்வது என்ற நிலைகளில் இருந்து செயற்பட்டது. ஈராக் யுத்தத்தின் போது ஐ.நாவின் பெயரில் உலக வசதிபடைத்த நாடுகளிடம் தாக்குதலுக்கான நிதியையும் பெற்றுக் கொண்டிருந்தது. யூக்கோ மீதான யுத்தத்தின் போது நேட்டோ நாடுகள் சார்பில் நுழைந்து கொண்டது. இந்த வேளையில் ஐ.நாவை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டது. தற்பொழுது ஆப்கான் மீதான தாக்குதலின் போது நேட்டோ நாடுகளின் சாசனத்தின் 5 சாரத்தின் படி ஒரு நாட்டில் தாக்குதல் நடக்குமாயின் எல்லா நாடுகளிலும் தாக்குதல் நடந்ததிற்கு சமானம் என பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும் அமெரிக்கா தானே முன்சென்று தாக்குதலுக்கு இறங்கியது. இந்த வேளையில் பிரித்தானியா அழையா விருந்தாளியாக தானே முன்னமே அமெரிக்காவுடன் இணைந்திருந்தது. ஆனாலும் தாக்குதல் தொடங்கப்பெற்ற பின்னர் பிரான்ஸ்இ இத்தாலிஇ கனடாஇ ஜேர்மன்இ அவுஸ்ரேலியா ஆகியவை பின்னராக இணைந்து கொள்ளும் என அறிக்கை விட்டனர்.

ஐ.நாவின் நிலையை பலப்படுத்த வேண்டும் என ஒரு பகுதியினர் விரும்பிக் கொள்கின்ற போதிலும்இ அதாவது உலகில் நடைபெறும் பிரச்சனைகளில் ஐ.நாவின் பெயரில் சென்றால் பாதுகாப்பு உள்ளது என்பதால் ஐ.நாவை முன்னிறுத்த முற்படுகின்றனர். இதன் மூலம் ஒரு நேர்மையாக பிரச்சனையில் நடந்து கொள்ளும் அமைப்பாக காட்டிக் கொண்டு மேற்குலகின் நலனின் செற்படுவது இலகுவானது என்பதாலாகும். கடந்த காலத்தில் ஜனநாயத்தைஇ சோசலிச ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது என்பதன் பேரில் உலக நாடுகளில் அமெரிக்கா தலையிட்டது போலவேயாகும். ஏனெனில் ஐ.நா இதுவரை உலக சாதாரண மக்களின் நம்பிக்கை தரக்கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஐ.நாவிற்கு ஒரு வடிவம் கொடுப்பதற்காகவே (Promote) நோபல் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூட ஒரு வகை (Lobby) குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக பேரம் பேசும் முயற்சியாகும்) லொபி வகை சார்ந்தாகும்.

ஐ.நாவின் நடுநிலை என்பதைக் காட்டி மற்றைய தேசங்களுடன் பங்கு போட்டுக் கொள்ள இஸ்டம் இல்லாமல் அமெரிக்காவானது தன்னந்தனியாக செயற்படும் கொள்கையை அறிந்து கொண்ட பிரித்தானியா ஆரம்பமுதலே ஒரு பங்காளியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. UK,US இரண்டும் ஈராக் மீது முன்னர் குண்டுகளை வீசிக் கொண்டு வருகின்றது. இரண்டு நாடுகளின் தன்னிச்சையான  போக்கை குறிப்பாக அரபு சாதாரண மக்கள் புரிந்தே வைத்திருக்கின்றனர். குறிப்பாக பின் லேடன் அரபு மக்களுக்கு கொடுத்திருந்த செய்தியான ஈராக்கின் சிறுவர்களின் நித்தம் மடிவதை நிறுத்த வேண்டும்இ பலஸ்தீனர்களின் வாழ்வில் நல்ல மாற்றும் ஏற்பட வேண்டும்இ அரபு சர்வாதிகாரிகளுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்இ முஸ்லீம்களின் புனித மண்ணில் இருந்தும்இ அனைத்து பகுதியில் இருந்தும் அமெரிக்கா வெளியேற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். (இந்தக் கோரிக்கை நியாயமானதே ஆனால் பின்லேடன் பாதையல்ல போராட்டப்பாதை) இந்தக் கோரிக்கையானது சாதாரண மத்திய கிழக்கு மக்களின் மனதில் எழும் மனப்புலம்பல்களாகும். இவர்கள் பாதுகாக்கும் சவூதி மக்களிடம் (Robert Fisk- Independent BBC பேட்டியில் பத்திரிகையாளர்) கட்டுப் பார்த்தால் இதனை ஏற்றுக் கொள்ளவர்.

கடந்த காலவரலாற்றின் வடுக்களில் இருந்து பெற்றுக் கொண்ட அனுபங்களில் இருந்து ஒரு புதிய பாதை அமைத்துக் கொள்ள முடியாது இருக்கின்றனர். (மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடதுசாரிகள் கட்சியைக் கட்டி போராட்டத்தினை வழிநடத்துவதன் மூலமே அவர்களின் சக்தியை புரிந்து கொள்ள முடியும்.) கொடுமை அரசுகளின் பாதுகாவலராக இருப்பதே அமெரிக்காவாகும். இன்று ஜனநாயகம்இ பயங்கரவாதத்தை அடக்குவது என்ற போர்வையில் பிரச்சாரம் செய்கின்றது.

 

ஓ அமெரிக்க தேசமே!!

அமெரிக்க தேசமே

உன்னைப் பார்த்து

எவரும் பொறாமைப்படவில்லை.

நீ உனது சித்தத்தின் படி

வாழ்வது போல்

எம்மையும்

எமது சித்தத்தின் படி வாழவிடு.

உனது தேவைகளுக்காக

எமது தேசங்களில்

தலையிடுவதை நிறுத்திக் கொள்.

உனது குடிகளுக்கு

மலிந்து விலையில்

நுகர்வுப் பொருட்களை கொடுப்பதற்காகவும்இ

உன்னிடம் இருக்கும்

பெரும் செல்வத்தை

மேலும் பெருக்கிக் கொள்வதற்காகவும்

எம்மீது உனது

சட்ட திட்டங்களை

செலுத்த முயற்சிக்காதே.

மக்களால் தெரிவு செய்யப்படுகிறவர்களின்

உரிமைகளை உலக வர்த்தக நிறுவனத்திற்கு கொடுத்தது நாமா?

இல்லை இல்லை

உனது நயவஞ்சக ஜனநாயக கூப்பாட்டில் அமைந்த

பொருளாதார தந்திரமே

நம்முன்னோர்களின் வியர்வைக்கே

நீயேதான் காப்புரிமையை

தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொண்டாய்.

இயற்கையின் சொத்தாகிய வேப்பம் மரத்துக்கும்

நீயேதான் காப்புரிமையை ஏற்படுத்திக் கொண்டாய்.

உனது குடிகள்

உடுத்தும் உடுபுடவையை

நீதான் எமக்கு

அணிவிக்க முயற்சிக்கின்றாய்இ

நீதான் உனது குடிகள்

ரசிக்கும் பாடல்களை

எம்மீது திணிக்கின்றாய்.

நாம் உன்னைப் போல் வாழ வேண்டும்

என எந்தக் காலத்திலும் எண்ணவில்லை.

மாறாக நாம் நாமாக

வாழவே விரும்புகின்றோம்.

உனது கடவுள்

உன்னை ஆசீர் (God bless America) வதிக்கட்டும்

என நித்தம் கூறுகின்றாய்.

நாம் உனது கடவுள்

எம்மை ஆசீர்வதிக்கும் படி கோரவில்லை.

மாறாக எமது வாழ்க்கை முறையில்

படியே எம்மை இருக்கவிடு!

சமாதான  தூதுவராக உன்னை அழைக்கவில்லை

ஆனால் நீதான் உனது

கூட்டாளிகளின் மூலம் துளைந்து கொள்கின்றாய்.

நாம் உன்னிடம் கேட்பது

எம்மை எமது சித்தத்தின் படியே வாழவிடும்படி. !

 

 

சூழல் மாசுபடுதல்

சூழல் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது. சூழல் மாசுபடுதலை தடுப்பது பற்றி சர்வதேச அளவில் மாநாடு நடைபெற்றுள்ளது. இருந்தும் தொடர்ந்தும் மாசுபடுத்தலைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியாத நிலையில் இருப்பதுடன் வல்லரசுகள் கழிவுகளை எமது நாடுகளில் தொடர்ச்சியாக கழிவுப்பொருட்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. சூழல் மாசுபடும் முறைகள் பல இருக்கின்றன.

      நுகர்வுப் பொருட்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் ஏற்படுகின்ற தயாரிப்புப் பொருட்களைப் பாவித்துவிட்டு உடனடியாகவே வீசுகின்றனர். (இவை பொலித்தீன் வகைப்பட்ட உற்பத்திப் பொருட்கள், மற்றும் (Fast food)) உடன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளால் வெளிவரப்படும் கழிவுகள்)

      கிருமிநாசினிகள் தெளிப்பதனால் விழைநிலங்கள் பாதிக்கப்படுகின்றது. அத்துடன் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினிகள் உட்நாட்டு ஆட்சியாளர்களின் தலையீடு இன்றியே பாவனையாளர்களுக்கு கிடைக்கின்றன.

      அருவிகளில் நீராகும் மக்கள் சலவைக் கட்டியினால் உடுப்புக்களை துவைப்பதினாலும், உடம்பிற்கு சோப்பினைப் போட்டு கழுவுவதினாலும் கழிவுகள் நீரில் கலக்கின்றன.

      மக்கள் நாளாந்த தேவைக்காக பாவிக்கப்படும் எரிபொருட்களும், வயல் செய்வதற்காக இயற்கைக் காடுகளை அழிக்கப்படுவதும், மலிந்த விலையில் மேற்கு நாட்டு நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் தளவாடங்கள் செய்து மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் காடுகள் அழிக்கப்படுகின்றது.

      ஓடை அருவிகளில், கடல் நீரில் எண்ணை மற்றும் இரசாயன கழிவுப் பொருட்கள் கலக்கப்படுவதனால்  ஏற்படுகின்றது.

      அணுமின்நிலையங்கள் மூலமாக ஏற்படும் அணுக்கதிர் கழிவுகள், அணுக்குண்டு பரிசோதனையினால் ஏற்படும் கழிவுகளும் சூழலை மாசுபடுத்துகின்றன.

சூழல் யுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றது இதனால் மக்கள் மறைமுகமாக மடிந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக வறியர்கள், அறியாமையால் வாடுபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்குவது மிகக் கொடிய குற்றமாகும்.  பணக்கார நாடுகள் வீசிய குண்டுகளினால் உட்கட்டுமானம் சிதைக்கப்பட்டன. குண்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கதிர், இரசாயத் திரவங்கள், எரிவாயுவினால் ஏற்படும் நச்சுத் தன்மை, எண்ணைக்கிணறுகள் தீவைப்பினால் மாசுபடுவதுடன் விவாசாய நிலங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. வியட்னாம் யுத்தத்தின் போது நேபாம் குண்டுகள் வீசிக் காடுகள் அழிக்கப்பட்டன. இன்றும் இன்நிலங்கள் வெறும் தரிசாகவே இருக்கின்றன.

 

தாக்குதல் சர்வாதிகாரிகளை அடக்குவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என பிரச்சாரப்படுத்தப்பட்டாலும் பொருளாதார நலன்பால் கொண்ட ஏகாதிபத்திய விஸ்தரிப்பு எண்ணம் இருந்ததை திட்டமிட்டு மறைக்கின்றனர். இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வெளிவரப்படும் தரவுகளை மிகச் சிறப்பாக, கச்சிதமாக பாவிக்கின்றனர். இவற்றை இங்கு கவனிப்போம் மிலோசவிச் ஒரு கொடுமையான மனிதர், பார்ப்பதற்கு சாதுவாக தென்பட்டாலும், உள்ளத்தில் கொரூரம் நிறைந்த மனிதர், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பல தந்திரோபாயங்களைப் மேற்கொள்கின்றார். தன்னை ஊழல் பேர்வழி எனக் காட்டிக் கொள்வதில்லை, இதில் கவனமாக உள்ளார். இவர் (Big Slavian) சிலாவிய பெருமையை உயர்த்திப் பிடித்து தேசிய வெறியைப் பரப்புகின்றார் என நேட்டோவினால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நாசிச சக்திகளின் ஆதரவு, அத்துடன் ஐ. நா நீதிமன்றத்தில் குற்றம் பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட (Arkan) அர்க்கான் என்ற ஆயுதக் கும்பலின் தலைவர் ஆகியோரின் கொசவோ மக்கள் மீதான வெறிநடவடிக்கைகள் பிரச்சாரத்திற்காக பாவிக்கப்பட்டது. இத்துடன் அகதிகளின் வெளியேற்றம் நேட்டோ நாடுகளுக்கு அரிய வாய்ப்பாகவும் இருந்தது. ஏற்கனவே பாதகமான செயலைச் செய்தவர்கள் என்ற கருத்தோட்டம் நிலவியதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நேட்டோவின் பொருளாதார சந்தையின் விஸ்தரிப்பை மறைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்தம் மிலோசவிச்சின் உதவியுடன் பிரச்சனைகள் இன்றி மறைக்கப்பட்டதுடன். நீண்ட காலத்தில் சந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையை அடைந்து விட்டது.

ஏகாதிபத்தியங்கள் காலனியாக்கத்தை மேற்கொள்வதற்காக சுதந்திர நாடுகளை நிர்ப்பந்திக்கின்றன. நிர்ப்பந்தங்கள் புலணுக்கு புலப்படக் கூடியதாகவும், புலணுக்கு புலப்படக் முடியாததாகவும் இருக்கின்றன. புலணுக்கு புலப்பட முடியாதவற்றை பொதுவுடமைக் கண்ணாடி கொண்டு பார்க்கின்ற போது தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கண்ணாடி சுரண்டும் சித்தாந்தத்தையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்த இலகுவாக இருக்கும். இன்றைய உலகத்தில் நல்லது கெட்டது என இரண்டு சித்தாந்தப் போக்கு இருப்பதாக கூறிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. உலகம் அப்படியல்ல சுரண்டும் வர்க்க நலன் மறைக்கப்பட்டு சந்தையை விஸ்தரித்துக் கொண்டு செல்கின்றன. இதற்கு பல ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு உலக வர்த்தக ஒன்றியம், சர்வதேச நிதி நிறுவனத்தின் நிபந்தனைகள், உலக வங்கியின் நிபந்தனை போன்றவற்றிற்கு நாடுகள் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும்.  இத்துடன் தேவையான போது கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து ஐ.நாவின் பெயரில் பொருளாதார தடைகளை மேற்கொள்கின்றனர். இவைகள் வெற்றி பெறாத பட்சத்தில் இராணுவ நடவடிக்கைகள் இறுதியாக இருக்கின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட நாட்டிற்கு மாத்திரம் அல்ல வறிய நாடுகளுக்கும் தமது இராணுவ வலிமையைக் காட்டி விடுகின்றன.

நேட்டோ நாடுகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்ட தாக்குதல்களை அரசியல்வாதிகள் உணர்ச்சி பொங்கும் பேச்சின் மூலம் நியாயப்படுத்துவதும் கடந்த கால அனுபவத்தை காட்டி பிரச்சனைகளுக்கு குறுக்கு வழியில் பிரச்சனைக்கு தீர்வு காணும் படியும் கோரிக்கை விடுகின்றனர். இந்த வகையான கோரிக்கை புத்தியீவிகளிடமும் இருந்த வருகின்றது. அதாவது அமெரிக்க கடைக் கண் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்படுகின்றது. இந்த நிலை ஆபத்தானது என்பதை அறியாத நிலையில் தோன்றுகின்ற கருத்துக்கள் மக்களிடையே தம்மை மீட்க மீட்பர்களான அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் வரும் என்ற கருத்தை விதைக்கவும் காரணமாகின்றது.

 

கொலை பாதகங்கள்

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் நடத்திய தாக்குதல் விபரங்களைப் பார்ப்போம். இதன் மூலம் அதன் அழிவுகளை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்காவையும், மேற்கு நாடுகளையும் புகழ்ந்து பேசுகின்ற அரசியல் வாதிகள் பற்றி விழிப்பாக இருக்க உதவும். இன்றைய அரசியல்வாதிகள் விழைவுகளை புரிந்து கொள்ளாமல் மக்களை தமது பேச்சின் மூலம் பரவசப்படுத்த முனைகின்ற நிலையை மாற்றிக் கொள்ள நிச்சயம் வரலாற்றுக் கொடுமைகள் பற்றி அறிவது அவசியமாகும்.

சித்திரை 5- Aleksinac   என்ற இடத்தில் குடியிருப்பின் மீது  குண்டு வீசப்பட்டது இதில் 5 இறந்தும் 30 மக்கள் காயமடைந்தனர்.

சித்திரை 12 - Beograd  இற்கும் Thessaloniki இடைப்பட்ட பிரதேசங்களுக்கிடையேயான புகையிர வண்டி தாக்குதலுக்கு உள்ளாகியது இதில் 10 இறந்தும் 16 காயமடைந்தவர்கள்.

சித்திரை14- போக்குவரத்து வண்டி (Djakovica)) தாக்கப்பட்டதில் 70 அகதிகள் கொல்லப்பட்டனர். இது இராணுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நேட்டோ நாடுகள் கூறுகின்றனர்.

சித்திரை 27- (Surdulica) குடியிருப்பு தாக்குதல் 16 பேர் கொல்லப்பட்டனர்.

சித்திரை28- பல்கேரியாவின் தலைநகருக்கு அருகாமையில் வீசப்பட்டது எனினும் எவரும் காயமடையவில்லை.

மே1- பிரிஸ்தீனாவிற்கு வடக்கே Luzane பாலத்தில் வீசப்பட்டதில் போக்குவரத்து வண்டி குண்டு; வீசப்பட்டதில் 23 கொல்லப்பட்டனர்.

மே3- Pec (Kosovo) என்ற இடத்தில்

 

 

யூரேனித்தின் தாக்கம்

இதுவரைக்கும் அரசியல், இராணுவ நடவடிக்கை பற்றிப் பார்த்தோம் பலவிதவிவாதங்களுக்கு இடையே மறைக்கப்படும் பாதிப்புக்களை நாம் பார்ப்பது அவசியாகின்றது. யூரேனியத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி வறிய மக்கள் அறியாமல் இருக்கின்றனர். யூரேனியம் அணுக்குண்டு, மற்றும் ரொக்கட்களுக்குப் பாவிக்கப்படுகின்றது. இதன் மூலம் வெளிவரப்படும் கதிர் நேரடியாக தோலில் நுழைவதில்லை. ஆனால் நூசி மூலமாக மனிதரினுள் நுழைகின்றது. இதனால் மனிதர் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனால் ஈரல், நுரையீரல், இதயப் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதுடன் பரம்பரையாக பெறப்படும் கலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். யுத்தத்திற்கு அனுப்பப்படும் முன்னர் பல வகையான தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டது. இதனால் பிற்பட்ட காலத்தில் பல பக்க விழைவுகளையும், யுத்தத்தின் பிந்திய காலத்தில் பல நோய் நொடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தப் பாதிப்புப் பற்றி சமூகத்தின் ஒரு பகுதியினரே தெரிந்து வைத்திருக்கின்றனர். இவர்கள் வைத்தியர்களாகவும், ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளுமாவர். இவர்கள் சார்ந்த வர்க்கத்தின் நிலைகாரணமாக மக்கள் எவ்வித அழிவிற்கு உட்பட்டாலும் பரவாயில்லை என நடந்து கொள்கின்றனர். வெளிப்படையாக பணம் படைத்த தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத மாதிரித் தான் தென்படும் ஆனால் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதும், தமது தேவைகளுக்காக தூது சென்று தமக்குச் சார்பான சட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கு பின்திரையில் பணம்படைத்த தொழிற்சாலைகளின் தொழில்அதிபர்களே இயங்குகின்றனர்.

இவைகள் சாதரண மக்கள் தெரிந்து கொள்ளவிடாது இருக்கின்ற சமூக அமைப்பு பலவழிகளில் பாதுகாக்கின்றன. இதேபோலதான் யுத்த காலத்தில் பாவிக்கப்படும் கனரக ஆயுதங்களினால் ஏற்படும் பாதிப்புப் பற்றி சாதாரண மக்கள் தெரிந்து கொள்வதில்லை. எதிர் நோக்கும் விழைவுகள் பற்றி சமூக நலனைப் பாதுகாத்துக் கொள்கின்ற அமைப்புகள் எச்சரிக்கின்ற வேளைகளில் அவை திரித்துக் கூறிப்படுவதாக எதிர்ப்பிரச்சாரம் ஆட்சியாளர்களினால் செய்யப்படுகின்றது. நடைமுறையில் பணம்படைத்த நாடுகள் ஒரு செயற்பாட்டை செய்து முடிக்கின்றனர். அதனை மதிப்பீடு செய்கின்றனர்: அதில் இருந்து புதிய கோட்பாடை வந்தடைகின்றனர். இந்த முறைமையே தற்பொழுது மேற்கு நாடுகள் கடைப்பிடித்து வருகின்றது.

இவர்கள் செய்த கொடுமையினால் ஏற்பட்ட விழைவுகளை ஆங்காங்கே சில சில அமைப்புக்களால் முன்கொண்டு வரப்படுகின்றன. இதிலும் ஐ.நாவின் சுற்றச்சூழல் அமைப்பினால் இதன்விழைவுகள் முன்கொண்டு வரப்படுகின்றன. இரசாயனத்தின் விழைவுகள் பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கின்ற ஐ.நாவின் அணுச் சக்தி அமைப்பு மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற தார்மீகக் கருத்தை செய்யத் தவறிவிடுகின்றன. இந்த அமைப்புக்களே காயப்பட்ட பின்னர் மருந்து போட வருகின்றன. நோய் வரும்முதல் தடைசெய்வதே ஐ.நாபோன்ற சர்வதேச அமைப்புக்களின் கடமையாகும். இன்று ஈராக், யூக்கோவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிறக்கும் பிள்ளைகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. படைவீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

யூக்கோமீது குண்டுவீசப் பாவிக்கப்பட்ட யுத்த (A10 Warthog) விமானத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ரொக்கட்டில் நுனியில் கத்தியின் நுனித்தலைப்பில் நச்சுத் திரவம் பூசுவது போல் ரொக்கட்டில் யூரோனியம் பூசப்பட்டிருக்கும். இதனை  Depleted uranium  (DU) என்பர், இது கவசவாகனங்களை ஊடறுத்துக் கொண்டு செல்கின்றது. ரொக்கட் வெடிப்பினால் ஏற்படும் அதிர்வில் ஏற்படும் தூசி மற்றும் தாக்கத்தில் கவசவாகனத்தின் இயந்திரத்தனை இயங்காமல் செய்கின்றது. The Gardian (10.01.99) பத்திரிகையில் Maggie O’ Kane என்ற பத்திரிகையாளர் ஈராக்கில் இடம் பெற்ற பாதிப்புக்களைப் பற்றிக் எழுதியுள்ளார்.

குழந்தையின், கருவின் உறுப்புகள் மாற்றம் அடையப்பெறுகின்றதுடன், உறுப்புக்கள் மாற்றம் உள்ளதாகவும் பிறக்கின்றது. அத்துடன் மறுஉற்பத்தி கலங்கள் மாற்றம் அடைகின்றது. Down syndrom என்ற குறைபாடு உள்ள பிள்ளைகளின் பிறப்பு வீதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக வைத்தியர்களை ஆதாரம் காட்டியுள்ளார். ஈராக்கில் இறுதிக் தாக்குதல் நடைபெற்ற பொழுது Basra என்ற இடத்தில் பங்கு பற்றி சிற்பாயிடம் சலம் பரிசோதனை செய்த போது அதில் DU அணுக்கதிர் காட்டியுள்ளது. Georgetown என்ற பல்கலைக் கழகத்தில் 24 வீரர்களை சலப் (urin) பரிசோதனை நடத்திய போது 24 சிற்பாய்களில் 14 சிற்பாய்களுக்கு DU கதிர் காட்டியுள்ளது.

வல்லரசுகள் தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தும் யுத்தத்தில் இருக்கும் நரித்தனங்களை விளங்கிக் கொள்ளாமல் இலங்கை உட்பட வறிய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடவேண்டும் எனக் கோருகின்ற அறியாமையை எதிர்க்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் அரசியல் வாதிகள் தமது பேச்சில் கவர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காட்டி அவ்வாறு இலங்கை போன்ற நாடுகளில் பின்பற்றக் கோருவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்தை அறியாதவர்களாகவும், தமிழ் மக்களின் மட்டுமல்ல வறிய நாடுகளில் போராடும் மக்களின் போராட்டத்தை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டே பணம் படைத்த நாடுகள் செயற்படுகின்றனர் என்பதை அறியாத நிலையில் இருந்து கொண்டு தமது அரசியல் நலனைப் பாதுகாப்பதற்காக உணர்ச்சிகர பேச்சுக்களை உரையாற்றுகின்றனர். இவர்களுக்கு சர்வதேசிய அரசியல் நிலை தெரியாததைத் தான் காட்டுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் தமது நாடுகளில் மிகச் சிறந்த அறிவாளிகள், பேச்சாளர்கள், தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இவர்களின் அறியாமையால் வல்லரசுகளின் நலனை எவ்விதத்திலும் பாதித்துக் கொள்ளாத நடவடிக்கைகளை மக்களுக்கு அறியப்படுத்துவது, போராட்டங்களை மேற்கொள்ளும் வறிய நாடுகளின் நலத்தின் மீது அடங்கிய அவசிய காரியமாகும்.