

சங்கே முழங்கு
*** #தேசிய ஒடுக்குமுறை, சிங்கள பௌத்த பேரகங்காரம் இருக்கும் வரையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெளியே வரும். அவ்வாறு வெளிவரும் குரலை தமிழ் இனவாதப் பேச்சு என்பது அற்பவாதிகளின் கருத்தேயாகும்.
தமிழர்களின் நிலைப்பாடு, எதிர்ப்புணர்வு தமிழினவாதம் அல்ல.
தமிழர் வாக்கு தமிழருக்கு என்பது இனவாதம் அல்ல.
****# 07 ஐப்பசி 24 நடைபெற இருக்கும் ஜெனிவா கூட்டத் தொடர் பற்றிய நிலைப்பாட்டை ரணில், நாமல், அனுர, சஜித் வெளிப்படுத்த வேண்டும் என்பது இயல்பான அரசியல் கோரிக்கையே.
****#we request north to use the election as a referendum (நுவன் போபகே) அது என்ன வடக்கு மட்டும்??
இது என்ன வகை அரசியல் இது? சந்தர்ப்பவாதம் என்பது எவ்வித பலனும் தராது. திரிபுவாதி செந்தில்வேல் போன்றவர்கள் இதன் பின்னால் செல்வது ஆச்சரியம் இல்லை.

சுயநிர்ணயத்தை இவ்வளவு தரம் தாழ்த்த இவர்களால் மாத்திரம் தான் முடியும். நாவற்குளி குடியேற்றத்தை ஆதரித்தவர்கள் தான் மு.சோ.கட்சியினர்.இவர்கள் பேசுகின்ற சுயாட்சி என்பது சுயநிர்ணயம் இல்லை.
**** # பெருந்தேசியவாதத்தை பவியமாக காக்கும் அனுர, சஜித், நாமல், ரணில் போன்றவர்களுக்கு வாக்கு கேட்பதே கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.
**** #பொருளாதாரவாதம் என்பது மார்க்சியம் அல்ல. பொருளாதாரப் பிரச்சனை தீரவேண்டும் என்றால் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தேசம் தனக்கான பொருளாதார நிதிக்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தனியான கட்டமைப்பு, பொருளாத வாழ்வு, சமூக வாழ்வு கட்டமைக்கப்படும் போதே அந்த மக்கள் வளர்வார்கள். பின்னரே சிங்கள தேசத்து பாட்டாளி வர்க்கம் தனக்கான பிரச்சனை, யார் தன்னை ஒடுக்குகின்றார்கள் என்று தன் சொந்த எதிரிக்கு எதிராக மாறுவார்கள்.
அது வரையில் மற்றவர்களை எதிரியாக்கும் சமூகக் கட்டமைப்பு சிதையப் போவதில்லை.
**** #இரண்டாம் தெரிவு இல்லை என தமிழர் தேசம் வெளிப்படுத்தி விட்டது. இனி எவ்வித தில்லுமுள்ளுச் செய்து பொதுவேட்பாளரின் நம்பகத் தன்மையை தகர்த்தெறிந்திட முடியாது.

ஐக்கிய முன்னணி
ஐக்கிய முன்னணியை எவ்வாறு கட்டமைக்க முடியும் என்ற புரிதல் இல்லாமல் பேசுகின்றார்கள். சரியான கொள்கை வகுத்துவிட்டால் போதும், பிரகடனங்கள், கருத்துரை தீர்மானங்கள் வரையறுத்து விட்டால் போது என்கின்ற போக்கு இருக்கின்றது. இது தவறானதும், பிரமை கொண்டதாகவும், அதிகார அதிகார வர்க்கத் தோரணை கொண்டவர்கள் தான் இந்தகைய நிலையைக் கொள்வார்கள். சரியான கொள்கை என்பது அமைப்பு வேலைமுறை, கொள்கை வழியை செயற்படுத்துவதும், அமைப்பின் உறுப்பினர்களை உருவாக்கிக் கொள்வது என்பது மாத்திரம் அல்ல. அமைப்பின் செயல்கள் அனைத்தும் செயலூக்கமாக இருக்க வேண்டும். அரசியல் கொள்கையின் வெற்றி தோல்வி அமைப்பின் செயல் திறனைப் பொதுத்தே இருக்கின்றது.
தமிழ் மக்களிடையே உள்ள வர்க்கப் பிரிவுகளை மதிப்பீடு செய்யாமல் எதுவும் அமைப்பினை கட்டமைக்க முடியாது. தமிழ் தேசத்தில் உள்ள மக்கள் வெவ்வேறு அலகுகளில் கட்சிகளாக பிரிந்துள்ளார்கள். இந்த அமைப்புகளில் உள்ள நபர்களின் வர்க்கம் என்பது ஒரே பண்பில் இருக்கப் போவதில்லை.
விவசாய, கடல்தொழிலாளி, உழைப்பாளர் வர்க்கம் பல்வேறு கட்சிக்கு உள்ளும் இருக்க முடியும்.
இவர்களுக்கு அப்பால் அரசாங்க வேலை, கல்வித் தகமை, செயற்பாட்டாளர்கள் என்றும் கட்சிகளாக பிரிந்துள்ளார்கள்.
1. தொழிலாள வர்க்கம்
2. தரகுமுதலாளி- விதேசிய வர்க்கப் போக்கு
3. உயர் மத்திய தர வர்க்கப்பிரிவு
4. குட்டிமுதலாளிய இடது மற்றும் ஊசலாட்டப் பிரிவு என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ளார்கள். ஐக்கிய முன்னணி என்பது இந்த அடிப்படையில் தான் உருவாக்கிட முடியும். ஐக்கிய முன்னணியின் இலக்கு கட்சிகளில் பிளவு பட்டிருக்கும் வர்க்கச் சமூகத்தை இணைப்பதே குறிக்கோளாகும்.

பல்கலைக்கழக விரிவுரையாளருடன் உரையாடிய போது.
தேசிய விடுதலைக்கான அணிதிரட்டல் தேர்தலை இலக்காக கொண்டதாக குறுக்கப்பட்டுள்ளது. இது வெகுமக்களின் திரளாகவும் மாறிட முடியவில்லை. தனியே இவ்வாறான அணிதிரட்டல் ஒடுக்குமுறையாளரின் அரசியல் வியூகத்திற்கு இலகுவாக பலியாகிப் போக முடியும்.
மாணவர், இளைஞர், மகளீர் என பொதுவான மக்கள் முன்னணிக்கான இயக்கம், தொழிலாளர் அமைப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். சமூகத்தில் உள்ள வர்க்கங்களின் ஐக்கியம் உருவாகுவது நடைமுறையுடன் பொருத்திச் செல்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும். அமைப்பு வடிவம் என்பது மரபார்ந்ததாக இருக்க முடியாது. ஏனெனில் அங்கு உறுப்பினர்கள் பங்காளிகளாக ஆக்கவேண்டிய வழிவகையில் அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். அங்கு எண்ணிக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைதல் ஆகாது.
‘‘கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்களிடையே எதிர்ப்பும் போராட்டமும் இடைவிடாது நிகழ்கின்றன. இவை, சமுதாயத்தில் உள்ள வர்க்கங்களுக்கிடையிலும், புதியவை பழையவை இரண்டுக்குமிடையிலும் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் ஏற்படுத்தும் எதிரொலிப்பாகும். கட்சிக்குள் முரண்பாடுகளே இல்லையென்றால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் எதுவுமே இல்லையென்றால் கட்சியின் வாழ்வு முடிந்துவிடும்.” (மாவோ)
அமைப்பாக்கம் செய்கின்ற போது நிலமானிய சிந்தனைக் கூறுகள், முதலாளித்துவ தாராளவாதக் கூறுகள், முற்போக்கு ஜனநாயகக் கூறுகளை காண முடியும். இந்தப் போக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்க்கத்தின் நலனுக்கானது. மேட்டுக்குடியும், பூர்சுவா வர்க்கமும் சமரசத்திற்கு உள்ளாகும். சமரசத்தை மேற்கொள்ளும் இந்த சித்தாந்த செல்வாக்குட்படுவதும் இயல்பானதாகும்.இதற்கு எதிரான சித்தாந்தப் போக்கு மக்களிடத்தில் நீண்ட நாட்களாகவே நிலைபெற்றிருக்கின்றது. அந்த நிலையில் இருந்து மக்கள் தானாக வெளிவருவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது. அவர்களிடத்தில் சிந்தனை பிடிப்பில் இருந்து நாம் தான் உதவிட வேண்டும். நமது கோட்பாடுகளையம், வேலைத் திட்டத்தையும் விளக்கி விபரித்துச் சொல்லும் வேலையை செய்ய வேண்டும்.
வெவ்வேறு வர்க்க, சமூகப் பிரிவுகளிடம் தோழமையை ஏற்படுத்துவதன் ஊடாகவே தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். எமது எதிரிகளை எதிர்த்து கூட்டாகக் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் நடைமுறை அனுகூலங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக எழுகதமிழ், பொங்குதமிழ், P2P விடயங்களை ஊழியர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment