Popular Posts

Friday, 28 November 2025

இன்றைய அரசியல் போக்கு 9

 


   இன்றைய அரசியல் போக்கு 9

JVP ஒரு மார்க்சியக் கட்சியா? இந்த தலைப்பில் கடந்தவாரம் எனது நூல் வெளிவந்துள்ளது. இதில் பல தலைப்புகளில் உரையாடப்பட்டுள்ளது. ஆனால் பொதுவெளி கருத்தியல் உலகம் என்பது வேறாகவே உள்ளது. இலங்கையின் அரசியல் பொருளாதார நிலையில், வரலாறு எங்கும் எவ்வாறு அரசியல் போக்கு இருந்தது என்ற அடிப்படையில் கருத்துகளை முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு என்பது இன்னொரு தேசிய இனத்தின் வெளிப்பாடாக முன்வைக்கப்படுகின்றது.

மதமும் அரசியலும் இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் பிரிக்கப்படவில்லை. இரண்டும் இரட்டைக்குழாய் துப்பாக்கி போல தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மகிந்த இனவழிப்புச் செய்த வேளையில் அழுத்தம் கொடுத்த ஜேவியினர். இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னேறிய சிந்தனை நோக்கிய பயணத்திற்கு தயாரா இருக்கிறார்களா? முன்னேறிய, முரணற்ற ஜனநாயக அடிப்படை நோக்கி முன் நகர்வார்களா? இது பற்றிய பிரச்சனை உள்ளது என்பதை கருத்துருவாக்கிகள் உள்வாங்கி விடவில்லை. தம்மை அடக்கும் ஒரு சிந்தனை வடிவம், அரசியல் வடிவத்திற்கும் புதிய முகவரி கொடுக்கின்றார்கள். தமது இருப்புக்குரிய உரிமையை மறுக்கும் அரசியல் போக்குப் பற்றி இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தமது ஏலாத் தனத்தை மறைத்துக் கொண்டு கட்டுரை வரைகின்றார்கள். இவர்கள் சில துணுக்குகளை வழங்குவதன் கருத்தை நிறுத்துகின்றார்கள். துணுக்குகளைக் கொண்டே அரசியல் பொருளாதார உறவை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகின்றார்கள்.

இன்றைய காலத்தில் மாவீரர் நினைவை எவ்வளவு எழுச்சியாக நினைவு கூர்ந்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். ஆம் என்ன இருந்தாலும் நீ எனக்கு அன்னியரே. தமது வாழ்வும், சிந்தனையும், அடையாளமும் இருப்பும் மாறுபட்டது தான். இந்த எல்லை வரைவை ஏற்றுக் கொள்ளாது தமக்குத் தெரிந்த விடயத்தை வைத்தே எழுதிக் குவிக்கின்றார்கள்.

இரண்டு பிளவு பட்ட தேசங்களின் அரசியல் நிலைப்பாடு என்பது மாறுபட்டது. ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்காக தன்னை அழித்துக் கொள்ள முடியாது. கீதையில் சொல்வது போல ஒரு மக்கள் கூட்டத்திற்கான இன்னொரு மக்கள் பிரிவு அழிந்து போவதில் தவறில்லை என்கின்ற நவீன சனாதனவாதிகள் போன்றே முற்போக்கு, இடதுசாரியம் என்ற போர்வைக்குள் இருந்து கருத்தெழுதுகின்றார்கள். இவர்கள் பொதுசனங்களின் பார்வையில் முற்போக்கு அரசியல் பேசுவதாக தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றார்கள். இந்த தோற்றப்பாட்டிற்குப் பின்னால் இருக்கும் அரசியலை மறைக்க முடியும் என்று நம்புகின்றார்கள்.

 


 ரின்வின் சில்வா

ரின்வின் சில்வா லண்டன் வந்திருந்த வேளையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டது. இதனை முன்னேறிய ஜனநாயகவாதிகள் அதற்கு எதிராக எவ்வித அரசியல் இராசதந்திரம் இல்லாத நடவடிக்கை என்றார்கள். இராசதந்திர நடவடிக்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஜனநாயகவாதிகள் ரில்வின் சில்வாவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்க இவர்களால் முடியவில்லை. அவர் கட்சியின் அரசியல் உயர் குழுவின் உறுப்பினர். கட்சிப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பில் உள்ளவர். ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தை முன்வைக்காது தமது சமரசவாத அரசியலுக்குப்பினர். கட்சிப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பில்  துணை போகின்றனர்.  சந்தடிப் போக்கில் தமிழர் தேசத்தின் உரிமையை மறுக்கின்றார்கள்.

பயனற்ற எதிர்ப்புக்களால் நிர்மூலமாகப் போவது நிலத்தில் வாழும் தமிழ் மக்களே! (விசுவலிங்கம் எனும் ஆய்வாளர் எழுதுகின்றார்.

``டில்வின் சில்வா எந்தவொரு அரச பொறுப்புக்களிலும் இருந்தவர் அல்ல- ஜே.வி.பி அதிகாரத்திற்கு வந்திருக்கும் நிலையில் கூட, அரச பதவிகளை புறம்தள்ளி, ஜே.வி.பியின் செயலாளராக மட்டுமே இருப்பவர்.

``எல்லை நிர்ணயம் குறித்து உடன்பாடு எட்ட முடியாத நிலையில் தேர்தலை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

``கடந்த கால அரசியலில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அது போல தற்போதும் எழுவது நியாயமே. ஆனால் அப்படியல்ல என்பதை எமது செயல்கள் சாட்சியம் தருகின்றன என்றார்.

 சுயநிர்ணயம் பற்றிப் பேசாத போது புதிதாக இவரிடம் என்ன புதிய வெளிவரும்??

``தேசிய இனப் பிரச்சினை குறித்து மிகவும் நம்பிக்கையை வெளியிட்ட அவர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் தேசிய மக்கள் சக்திமேல் மிகுந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அம் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நம் எவ்வாறு செயற்பட முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அரசுக்கு வந்து ஒரு வருடம் என்பதும், இலங்கை அரசியலில் ஒரு புதிய அனுபவம், மாற்றத்தை நோக்கிய பார்வை இருப்பதால் , அவரது கருத்துப்படி மற்றவர்களின் கருத்தை விட செயலில் என்ன நடக்கிறது? என்பதை அவதானியுங்கள் என அவர் அடிக்கடி தெரிவித்தார்.

அவரிடம் எதிர்கால அரசியல் வழிமுறை குறித்த வரைபடம், இடதுசாரி அரசியல் சக்திகளை அணி திரட்டுவது குறித்த கருத்துக்கள், புதிய அரசியல் யாப்பின் பிரதான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எமது சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது எனக் குறிப்பிடுவேன் என விசுவலிங்கம் கூறுகின்றார். (சிவப்பு நிறத்தில் உள்ளவை விசுவலிங்கம்)

தாய்நாட்டைக்காப்போம் என்று சிங்கள பௌத்த அடிப்படை அரசியல் கொண்டவர்கள் என்பதை இந்த கருத்தாளர் மறைக்கின்றார். சமூக தேசிய வெறியர்களிள் அரசியல் வரலாற்றை மறைக்க வேண்டிய தேவை என்ன?அரசின் அங்கமே அரசாங்கம். அரசாங்கத்தில் அங்கவகித்தவர்கள் இனவழிப்பில் பங்கில்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள். அரசின் தலை என்பது அரசாங்கம். இதுதான் ஜனநாயக வடிவமாகும். ஆட்சிக்கு புதியவர்கள் என்பது ஒரு வெளிப்படையான விடயமே. ஆனால் அரச இயந்திரம் அனைத்தும் பழைய கட்டமைப்பே. இந்த விடயத்திலும் இந்த கருத்தாளர் மக்களைத் தான் முட்டாள் ஆக்குகின்றார்.

 42 % விழுக்காடு கொண்டதே ருசிய சாம்ராட்சியம். அந்தச் சூழலானது வளர்ந்த தேசங்களையும், தேசிய இனங்களையும், பழங்குடிகள், நாடோடிகள் கொண்ட நாட்டில் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தினார். இங்கு பெரும்பான்மை கொண்ட சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் சுயநிர்ணயத்தை ஏற்கவில்லை.

சுயநிர்ணயம் என்பதே அரசு பற்றிய விடயம் என்பதை விளங்காதவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது. ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள் என்பதை சந்தர்ப்பவாதமாக மழைக்கின்றார்கள்.

ரொட்ஸ்கியர்கள், புகாரியவாதிகள் சுயநிர்ணயத்தை ஏற்பதில்லை. அந்த முரண்பாடு தான் இங்கும் உள்ளது. சுயநிர்ணயத்தை மறைத்துக் கொண்டு அரசியல் செய்வது பௌத்த பெருந்தேசியக் கட்டமைப்புக்கு ஆதரித்து செல்கின்றார்கள்.

  


சட்டவாதம்

இது பற்றி முன்னைய பகுதியில் சட்டவாதம் என்ற தலைப்பில் உள்ளது. சிங்கள பௌத்த அரச கட்டமைப்புக்குள் உட்பட்டது தான் சட்டங்கள். சட்டம் பௌத்த என்பதே முதன்மை (9 பிரிவு) பாதுகாத்து நிற்கின்றது. இதில் சட்டங்கள் எவ்வாறு ஒடுக்கும் தேசத்திற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இந்த சட்டவாளர்கள் தமது புலமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க ஆளும் தரப்பிற்கு ஏற்படும் நெருக்கடியை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றார்கள். வெட்டகம் கெட்ட நிலையில் சுதந்திரமாக சட்டம் செயற்படுகின்றது என்று விம்பத்தைக் கட்டமைக்கின்றார்கள்.

சட்டம் பொதுவானது என சிங்கள பௌத்த பேரினவாதிகளும் கூறுகின்றார்கள். ஆனால் தொல்பொருள் திணைக்களம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்குத் துணை போகின்றது. அடிப்படையில் மகாஜன பௌத்தம் என்பது தமிழர்களின் முன்னைய வழிபாட்டு முறைதான். அதனை அரசியல் காரணங்களுக்காக சிங்களபௌத்த பேரினவாதம் உரிமை கோருகின்றது. ர

``ஒருசிலர் தமக்கு பிராந்தியம் மற்றும் இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். தொல்பொருள்  சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். தொல்பொருள்  திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆனந்த விஜேபால” சட்டம் பொதுவானது எனவும் இவர் கூறுகின்றார்.

 

``இன்னொரு முறை இனவாதத்தை உக்கிரப்படுத்த இவர்கள் வாய்ப்புகளைத் தேடுவதால் அவ்வாறான நிலையை நோக்கிச் செல்லாமல் ஒரு சமனிலையைப் பேணுவது அவசியமாகிறது எனவும், அரசின் தலையீடு இல்லாமல் நீதியின் கையில் ஒப்படைத்து வருகிறோம். இதனால் இனவாத சக்திகள் அரசியலாக்க முடியாத நிலை உருவாகும் என்றார்.”- ரில்வின் சில்வா (விசுலிங்கம்) அரசு பற்றிய மோசடியான கருத்தை ஆதரிக்கின்றார்கள்.

 


காணி உரிமை

காணி உரிமை என்பது தேசம் என்ற அடிப்படையில் அவசியமானதொன்றாகும். நிலம் என்பது உற்பத்திச் சாதனம். உணவு உற்பத்திக்கு அவசியமான ஒரு சாதனம் நிலம்.  குறிப்பாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 1949 இருந்து நில அபகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1900களில் திருகோணமலையில் 4விகிதம் இருந்தவர்கள். இன்று எத்தனை விகிதம் என்று பார்த்தால் வரலாற்றுப் போக்கில் தமிழர்கள் இழந்த நிலத்தை அறிய முடியும்.

புத்த விகாரை வைத்த நிலம் என்பது இரண்டு சிங்கள சக்திக்கு இடையில் நடைபெற்ற முரண்பாடு என்று மலினப்படுத்திக் கொண்டு போகலாம். அதனைத் தான் சில சக்திகள் செய்கின்றன. தற்போதைய நிலையை வைத்துக் கொண்டு காணியுரிமை பற்றியும்,  பௌத்தஆக்கிரமிப்புப் பற்றியும் பேசிவிட முடியாது.

லெனின் இருந்திருந்தால் அவர் இரண்டு அரசு பற்றியும், இரண்டு குடியரசுபற்றியும் பேசியிருப்பார். 

 

 

எனது நூல் ஜேவிபி ஒரு மார்க்சியக் கட்சியா?

 

 

இனவழிப்பும் அடையாளமாற்றமும் (மாசி 2021) 

No comments:

Post a Comment